கோவா - சிரிக்க மட்டும்


கோவா - உண்மையிலேயே சரியான பெயர்தான். இரண்டு முறை இதுவரை கோவா சென்றிருக்கிறேன். அதில் ஒரு தடவை குடும்பத்துடன். ஹ்ம்ம்ம். இன்னொரு தடவை கல்லூரி நாட்களில், அதகளம். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. ஆனா திரும்பி வரும்போது ஜாலியா இருந்ததா ஒரு ஞாபகம். காசெல்லாம் ’தண்ணியா’ செலவாகி வெறுங்கையா இருந்தது அந்தப் பயணம். ஆனா வெறுமையா இல்லை. சரி கோவா படத்துக்கு வருவோம். ஏற்கனவே வெங்கட்டோட படங்கள் இரண்டு பாத்ததுனால, கதை இருக்காதுன்னு தெரிஞ்சுதான் போனேன். என்னோட எதிர்பார்ப்பை சரியா பூர்த்தி பண்ணியிருக்கிறார் இயக்குனர். இடைவேளை வரை கதையே இல்லை, அதுக்கு அப்றம் மட்டும் இருக்கான்னு கேட்டீங்கன்னா, அதுவும் இல்லை.

இந்த இயக்குனரிடம் எனக்குப் பிடிச்சதே இதுதான். கதையம்சம் இல்லாத படம் எடுப்பது. அல்லது, ஒரு கதையை கதையே இல்லாத மாதிரி எடுப்பது. அப்புறம் ஏன் இது பிடித்திருக்கிறது? ஆரம்பம் முதல் முடியும் வரை சிரித்துக்கொண்டே இருக்க வைக்கிறார் என்னை, அதுதான். இந்த மாதிரி ஒட்டுமொத்த திரையரங்கும் விழுந்து விழுந்து சிரித்ததை வெகு நாட்களுக்குப் பின் பார்த்தேன். படம் ஆரம்பிக்கும்போதே இது ஒரு நகைச்சுவைப் படம் மட்டுமே என்ற மனநிலையை ஏற்படுத்திக்கொண்டதும் இதற்குக் காரணமாய் இருக்கலாம். எனது அருகில் இருந்தவர் மட்டும் திட்டிக்கொண்டே இருந்தார், என்ன மனநிலை அவருக்கோ தெரியவில்லை.

முதலில் டைட்டில் சாங். கிராமத்துப் பின்னணி, மஞ்சள் நிற எழுத்துக்கள், எங்க ஊரு நல்ல ஊரு ரேஞ்சுக்கு ஒரு கிராமத்துப் பாட்டு. பழைய ராமராஜன் படம்தான் ஞாபகத்துக்கு வந்தது. படம் ஆரம்பிக்கும்போதே பஞ்சாயத்தில் ஆரம்பிக்கிறது, கூடவே நக்கலும். அப்படியே நக்கல் தொடர்வண்டி மாதிரி போய்க்கொண்டே இருக்கும். வழக்கம்போல கதாநாயகன் என்பதே கிடையாது. எல்லோருக்கும் சம வாய்ப்பு. இதன் பிறகு கதை? தேவையில்லை. காட்சிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. நாங்கள் சிரித்துக்கொண்டே இருந்தோம். சின்னச் சின்ன விசயங்கள்தான். கவனிக்கத் தவறினால் சிரிப்பு வராது. சில நேரங்களில் சிரிப்பலை அடங்க நேரம் ஆகி அதன் தொடர்ச்சியாக வரும் நக்கல் வசனக்கள் கேட்காமலேயே போய்விட்டது. அதிலும் ஒருவர் கவனித்து ரசித்ததை இன்னொருவர் கவனிக்காமல் போய்விட வாய்ப்பு உள்ளது. ஒரே ஆள் வாத்தியார், போலீஸ், பஞ்சாயத்து ஆட்களில் ஒருவர், பைலட் என பல்வேறு கெட்டப்புகளில் வந்ததை எனது நண்பன் கவனித்திருக்கிறான், நான் கவனிக்கவில்லை. வெள்ளைக்காரியின் கல்யாணத்தில், தாலி கட்டும்போது அப்பா அழுவது, நண்பனுடைய வீட்டில் பின்னணியில் வெள்ளைக்காரியுடன் இருக்கும் போட்டோக்கள் இன்னும் சில விசயங்களை நான் கவனித்திருந்தேன், நண்பனுடைய கண்ணுக்கு சிக்கவைல்லை. ஜெய் ஆங்கிலம் இன்னொரு கலாட்டா. அந்த ஹோமோ காதலர்களின் வாழ்க்கை - நண்பனுக்கு சிரிப்பாகத் தெரிந்தது, ஆனால் உன்னிப்பாகக் கவனித்தால் அதிலிருக்கும் உண்மை புரியும்.

இப்படிச் சின்னச் சின்ன காட்சிகள் நகரும்போது கடைசிவரை நெளியாமல் உட்கார்ந்திருக்க முடியுமா என்றால் சந்தேகம்தான். படத்தில் கதை இருக்காது. அந்த மாதிரி ஏதாவது எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும். தனியாக சிரிக்கத் தெரியாதவர்கள் தனியாகப் போனாலும் வேலைக்காகாது. நண்பர்களுடன் சென்றால் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. இன்னும் முக்கியமாக, இதில் பல காட்சிகள் முந்தைய தமிழ்ப்படங்களை நக்கல் செய்வதால், அந்தப் படங்களில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு சிரிப்பு வருவது சந்தேகமே. அதே போல, சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் அதிகமாக இருக்கும். சிறிது கண்ணை திரையை விட்டு நகர்த்தும்போது மற்ற அனைவரும் சிரிக்கக் கண்டு, அருகில் இருப்பவரிடம் ‘என்ன ஆச்சு’ என்று கேட்கும் வாய்ப்பு அதிகம் வருவதால் சிலருக்கு எரிச்சலைத் தரலாம். அதிலும் அருகே இருப்பவர் பதிலே சொல்லாமல் சுவாரஸ்யமாகத் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த எரிச்சல் அதிகமாக வாய்ப்புண்டு. மொத்தத்தில் கோவா சிரிக்க முடிந்த ஆண்களுக்கு மட்டும்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark

12 ஊக்கங்கள்:

அண்ணாமலையான் said...

பாத்துடுவோம்

☀நான் ஆதவன்☀ said...

உன்னைய உதைகனும்ல... முதல் அரை மணி நேரம் ஓக்கே. அதுக்கப்புறம் உட்கார முடியாத அளவுக்கு ’கடி’. அதுவும் எதை சீரியஸா சொல்றாங்க.. எதை காமெடியா சொல்றாங்கன்னே தெரியல(உ.தா ஜெய் காதல்)

அதுவும் வெள்ளைகார பெண்ணின் காதல் ஒரு கட்டத்துக்கு மேல எரிச்சல் தான். இதுல ரசிக்கும் படி ஒரு சீன். வெள்ளைகாரம்மா தன் நண்பர்களிடம் காதலை சொல்லும் போது ஸ்டேஜ்ல இங்கிலீஷ் பாட்டு பாடுற பொண்ணு ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடுற மாதிரி டப்பிங் செஞ்சது...அப்புறம் அழகரோட போட்டோ அப்படின்னு கொஞ்சம் இருந்தது..

//ஒரே ஆள் வாத்தியார், போலீஸ், பஞ்சாயத்து ஆட்களில் ஒருவர், பைலட் என பல்வேறு கெட்டப்புகளில் வந்ததை எனது நண்பன் கவனித்திருக்கிறான்,//

ங்கொய்யால எல்லாரும் கவனிச்சாங்க....ஆனா அது தான் ஏன்ன்னு தெரியாம கடைசி வரைக்கும் குழப்பமா இருந்துச்சு

Beski said...

இது தொடர்பாக ஆதவனும் நானும் பேசிக்கொண்டது...
---
aadhavan: அட போய்யா
படம் பார்த்தவன் எல்லாரும் திட்டினாங்க நேத்து

me: அதுக்கு இன்னா பண்றது
நாங்க சந்தோசமாத்தான் வந்தோம்
ஒன்னும் பண்ண முடியாது
இதே மாதிரி
ஆ.ஒ. பாத்துட்டு நா நல்லாயிருக்குன்னு சொன்னேன்
மத்தவங்க நல்லாயில்லன்னு சொன்னாங்க...
என்ன பண்றது

aadhavan: அதுக்காக கோவாவை நல்லாயிருக்குன்னு சொல்றதெல்லாம் ஓவர்

me: என்னோட பார்வைல நல்லாத்தான் இருக்கு

aadhavan: அதுவும் காஸினோவுல நகைய திருடுறதெல்லாம் சகிக்கல

me: ஹி ஹி ஹி...
நாங்களும் ஜேம்ஸ்பாண்டு படமெல்லாம் நெறைய பாத்துருக்கோம்
அதுக்கு?

aadhavan: யோவ்
நான் என்ன அதுக்காக இங்கிலீஸ் படம் மாதிரியே இருக்கனும்னா சொல்றேன்
கொஞ்சமாச்சும் சுவாரஸியம் வேணா,?

me: வேணாம்
சிரிப்பு மட்டும் போதும்
இந்த படத்துக்கு
அது நாணயத்துல இருக்குது

aadhavan: இதுக்கெல்லாம் சிரிச்சேன்னா அப்புறம் நான் என்ன சொல்றது... போய் எதுக்கும் தமிழ்ப்படம் பார்த்துட்டு அப்புறம் பேசு

me: அது இத விட நல்லா இருக்காம்
கேபிள் - கோவா குப்பைனு சொன்னாரு
அவரே
தமிழ்ப்படம் சூப்பர்னு சொல்லிட்டாரு
அப்போ அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்
:)
அதான் தலைப்புலயே சொல்லிட்டேன்
சிரிக்க மட்டும்னு
வேற ஏதும் எதிர்பாத்தா வேலைக்காகாது

aadhavan: அததான் நானும் சொல்றேன். தமிழ்ப்படம் ஓக்கே மச்சி
பகடி மட்டும் செய்யலாம்னா எதுவும் ஓக்கே... ஆனா கதையோட பகடி செய்யனும்னா கவனம் வேணும்
தமிழ்ப்படம் தெளிவா சொல்லிட்டாங்க அது ‘பகடி’ன்னு
ஆனா கோவால குழப்பமா எடுத்திருக்காங்க....ஒரு காமெடி சீனுக்கு அடுத்த சீனே சீரியஸா வருது
எதுக்கு சிரிக்கனும்னு தெரியல

me: சீரியசா
அப்டி படத்துல எதுவும் கிடையாதே

aadhavan: யோவ்
ஜெய் காதல் சீன் எல்லாம் என்னவாம்

me: அதுவே பெரிய காமெடி
இதெல்லாம் சீரியசா எடுக்குறதா?

aadhavan: அப்புறம் சிநேகா எதுக்குன்னு ஒரே குழப்பம்

me: அது இன்னொருத்தன் லவ் ட்ராக்..
சரி... ஹோமோ லவ் சீரியசா காமடியா?
சொல்லு

aadhavan: அது ஓக்கே
சம்பத் கலக்கியிருப்பாரு
அதுவும் ஹிந்தி படத்தோட பகடி/......ஆனா மக்களுக்கு தெரியனுமே

me: அத விடு
உனக்கு எப்படி தோனுச்சு?

aadhavan: நல்ல காமெடி தான்யா

me: சீரியஸ்னு நா சொல்றேன்
காமெடின்னு என் நண்பன் சொல்றான்
மொத்தத்துல எல்லாமே காமெடிதான்
நாம சீரியஸ்னு நெனச்சுப் பாத்தா சீரியஸா தெரியும்

aadhavan: யோவ் அது ஹிந்திகாரனுங்களை பகடி செய்திருக்கானுங்கய்யா

me: நீ அதிகமான காட்சிகளை சீரியஸ்னு நினச்சுட்ட
நா ஒரே ஒரு சீன மட்டும்தான் சீரியசா நெனச்சான்
என் நண்பன் அதைக் கூட காமெடியாத்தான் பாத்தான்
அவன் ஹிந்தி படம் பாக்க மாட்டான்...
:)

aadhavan: ம்ம்ம்

me: இந்தப் படம் ஒரு சிறந்த மனநிலையை வெளிப்படுத்தும் படம்
ஒருத்தன் முழுசா சிரிச்சு வெளிய வந்தான்னா... மனசு லேசா இருக்குன்னு வச்சுக்கலாம்.
உன்ன மாதிரி ஆளுங்க சீரியஸ் எது, காமெடி எதுன்னு குழம்பி வந்தா மனசு சரியில்லன்னு அர்த்தமா வச்சுக்கலாம்
ஆனா, எல்லாமே காமெடிதான்

aadhavan: ரைட்டு விடு
பதிவுலகத்துல விமர்சனம் படிச்சு புரிஞ்சுகிறேன் சாமி

me: கண்டிப்பா பாரு
பாதி பேரு நல்லா இருக்குன்னு
பாதி பேரு குப்பைனும் சொல்வாங்க
யாரையும் குறை சொல்ல முடியாது
அது
அவங்கவங்க மனநிலையைப் பிரதிபலிக்கும்.

Ashok D said...

விமர்சனம் தொடர்ந்த பின்னூட்டமும் :)

Beski said...

நன்றி அண்ணாமலையான்.

நன்றி அசோக்,
நேத்து உங்க ஏரியாலதான் பாத்தேன்.

சிநேகிதன் அக்பர் said...

அப்படியா அப்ப பார்த்துட வேண்டியதுதான்.

Karthik said...

post and especially the comment both were very nice.. planning to go next week end.. :)

அத்திரி said...

தம்பி படம்.ம்ஹும்.............

CS. Mohan Kumar said...

விமர்சனத்தை விட உங்க dialogue பின்னூட்டம் பெருசா இருக்கே நண்பா?

நாங்களும் ஒரு புது படம் பாத்துட்டோமுள்ள (தமிழ் படம்); விமர்சனமும் எழுதியாச்சு. நான் பார்த்த படம் தான் கோவாவை விட சூப்பர்..சின்ன பிள்ளையில் நான் பார்த்த படம் தான் சூப்பர் என friends உடன் பெருமையாய் சலம்பியது ஞாபகம் வருது;

புலவன் புலிகேசி said...

இப்பதான் பாத்துட்டு வந்தேன். தண்ட செலவு தல. 1ரூவாய்க்கு கூட பிரயோசனமில்லாத படம்

//துக்கு இன்னா பண்றது
நாங்க சந்தோசமாத்தான் வந்தோம்
ஒன்னும் பண்ண முடியாது
இதே மாதிரி
ஆ.ஒ. பாத்துட்டு நா நல்லாயிருக்குன்னு சொன்னேன்
மத்தவங்க நல்லாயில்லன்னு சொன்னாங்க...//

ஆ.ஒ சூப்பர் படம் அதை இதோட கம்பேர் பன்னி அசின்க படுத்தாதீங்க

Beski said...

நன்றி அக்பர்.

நன்றி கார்த்திக்.

நன்றி அத்திரி அண்ணே.

நன்றி மோகன்குமார்.

நன்றி புலவன் புலிகேசி.

Unknown said...

மாப்பு, அப்ப பாக்கலாம்னு சொல்றீய?

ம்ம்.. சரி சரி...