ஒரகடம் டூ தாம்பரம்

சென்னையைப் போன்று பேருந்து வசதி வேறெங்கும் இல்லையென்ற நினைப்பு எனக்கு. சென்னையை விட்டால் பெங்களூர்தான் தெரியும். இங்கு அதிகம் பேருந்தில் செல்வதில்லை. பொதுவாக, எங்குமே செல்வதில்லை. பிறகு எப்படித் தெரியும்? ஆனாலும், ஊருக்குச் செல்லும்போது, தொடர்வண்டி நிலையம் செல்ல பேருந்துவசதி போதுமானதாக இல்லை. எப்படியும் இரு பேருந்துகள் மாறிச்செல்லவேண்டும். குழந்தை குட்டி வைத்துக்கொண்டு இதெல்லாம் எதற்கு என டாக்சிதான். ஆட்டோவெல்லாம் நமது பட்ஜெட்டுக்கு ஒத்துவராது!

டாக்சி சொல்லி, அது நேரத்திற்கு வந்து, பெங்களூர் டிராபிக்கிற்குள் புகுந்து ட்ரெயினைப் பிடித்து... அது தனி வேட்டை. இப்போது விசயம் பெங்களூர் பற்றியதல்ல. சென்னையப் பற்றி. கொஞ்ச நாட்களுக்கு முன்பு, மாமா செங்குன்றம் பகுதியிலிருந்தார். 114தான் நமக்கு ரெகுலர். அங்கிருந்து நேரே அசோக்பில்லர் அந்து இறங்கிவிடலாம். டிக்கட் 17 அல்லது 20 இருக்கலாம், சரியாக ஞாபகம் இல்லை. ஏசி பஸ் என்றால் 45 என நினைக்கிறேன். 

அதில் ஒரு குறிப்பிட்ட விசயம். செங்குன்றத்திலிருந்து கோயம்பேடு வர 17 ரூபாய், வடபழனி வழி செல்லும் பேருந்தில் வந்தால். அதுவே கோயம்பேடு பேருந்து என்றால் 12 தான். அதான் எப்படி என்று புரியவில்லை. வடபழனி வழி செல்லும் பேருந்தில் கோயம்பேடு என்று டிக்கட் எடுத்தாலும் MMDA வரை கொடுக்கப்படுகிறது. என்ன கணக்கோ!

இதேபோல, செங்குன்றத்திலிருந்து பிராட்வேக்கும் ஒரு பேருந்து உண்டு, 252. பர்மா பசாருக்குச் செல்ல இதில் செல்வதுண்டு. இதுவும் இருபது ரூபாய்க்குள்தான் இருக்குமென்ற ஞாபகம். இப்போது மாமா ஒரகடத்திற்கு வந்துவிட்டார்.

தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில், முதலில் படப்பை வரும். பிறகு ஒரகடம் சந்திப்பு, அதன்பின் வாலஜாபாத் வருவதற்கு முன்பு, வாரனவாசி என்றொரு நிறுத்தம் உண்டு. அங்கிருந்து வடக்கே சில கிலோமீட்டர்கள் சென்றால் ஒரு டவுன்சிப் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்திற்கு முதலில் குடிவந்தவர் எனது மாமாவாகத்தான் இருக்கும். சுற்றிலும் காடு, ஆங்காங்கே சில கிராமங்கள். நடுவே இந்த டவுண். 

தனித்தனி வீடுகள். சிலபல தெருக்களை முடித்திருக்கிறார்கள். ஆனால் மாமாவும், எதிர்வீட்டில் ஒருவர் மற்றும் பக்கத்து வீட்டில் ஒருவர் என மூன்று குடும்பங்கள்தான். முதல் தெருவில் ஒருவர் இருக்கிறார். சிலர், வார இறுதியில் வந்து தங்கிச் செல்வதாகக் கேள்வி. இன்னும் உள்ளே கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாதுகாப்பு பரவாயில்லை, எப்போதும் காவலர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற முறை அங்கு சென்று, தங்கி, சுற்றவேண்டியிருந்தது. பெங்களூரில் இருந்து ட்ரெயின், செண்ட்ரல் வரை. அரக்கோணத்தில் இறங்கி, காஞ்சிபுரம் வந்து, வாரனவாசி வந்திருக்கலாம். செண்ட்ரல் செல்லும் அதே நேரம் வீட்டில் இருந்திருக்கலாம். ஆனால், காலை 4 மணிக்கு எழ முடியவில்லை. நேரே செண்ட்ரல்தான். 

அங்கிருந்து நடந்து பார்க் ஸ்டேசன். 10 ரூபாய் தாம்பரத்திற்கு. அங்கிருந்து காஞ்சிபுரம் பஸ். 21 ரூபாய் டிக்கட், முப்பது கிலோமீட்டர் இருக்கும், வாரனவாசிக்கு. அங்கு இறங்கி டவுன்ஷிப் ஷட்டில் வண்டியில் சென்றுவிடலாம். ஷட்டில் 24 மணி நேரமும் இயங்கும்.

ஒரு நாள் அங்கிருந்து அனகாபுத்தூர் வரவேண்டியிருந்தது. திங்கட்கிழமை. காலை ஒன்பது மணிக்கு, வரும் பேருந்து அனைத்தும் கூட்டம்தான். வேறு வழியில்லை, கூட்டத்தோடு கூட்டமாக கலந்தாயிற்று. தாம்பரம் 21 ரூபாய். அங்கிருந்து பல்லாவரம் 6 ரூபாய். பல்லாவரத்தில் இறங்கி, பம்மல் சாலையில் ஒரு பேருந்து நிறுத்தம் உண்டு. அங்கிருந்து வரிசையாக ஆட்டோக்கள் பம்மல் செல்லுகின்றன. 10 ரூபாய் தலைக்கு. 

மீண்டும் அங்கிருந்து அண்ணாநகர் செல்லவேண்டியிருந்தது. பல்லாவரத்திலிருந்து ஆவடி பேருந்தில் திருமங்கலம், 12 ரூபாய் என ஞாபகம். அங்கிருந்து ஷேர் ஆட்டோ 7 ரூபாய்.

மீண்டும், அண்ணாநகர் முதல் திருமங்கலம் 7 ரூபாய். திருமங்கலம் முதல் தாம்பரம் சானடோரியம் 12 ரூபாய். அங்கிருந்துதான் காஞ்சிபுரம் பேருந்து எல்லாம் புறப்படும். அங்கிருந்து வாரனவாசி 21 ரூபாய். பேருந்தில் செல்வதால் நேரம் அதிகமாக செலவழிப்பதுபோல தோன்றும். ஆனால் உட்கார இடம் கிடைத்துவிட்டால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கத்தோன்றாது.

-பெஸ்கி


Share/Bookmark
Read More!

பெங்களூரில் சில நம்பிக்கைகள்

ஒரே நாளில் இரு வெவ்வேறு மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் ஒரு துருவம் என்றால் இன்னொருவர் எதிர் துருவம்.

குக்கரில் விசில் வருவதில்லை. கேஸ்கெட்டை மாற்ற வேண்டும் என்றார் தங்கமணி. அழைத்துக்கொண்டு மெயின் ரோடு அருகே இருக்கும் கடைக்குச் சென்றேன். கேஸ்கெட்டையும் எடுத்துச் சென்றிருந்தோம். அது ஒரு ஹிந்திவாலா கடை. கொண்டுவந்தது கொடுத்ததும் உள்ளே சென்று, கொஞ்ச நேரம் தேடிய பின், ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். நான் ஒன்றன்மேல் ஒன்று வைத்துப் பார்த்தேன். அவன் கொடுத்தது கொஞ்சம் பெரிதாக இருப்பதுபோல் இருந்தது. கேட்டதற்கு, சரியாய் வரும், இல்லையென்றால் திரும்ப வாங்கிக்கொள்கிறேன் என்றான் அந்தப் பையன்.

வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சந்தேகப்பட்டபடி கொஞ்சம் பெரியதுதான். மறுநாள் கொண்டுபோய் கொடுத்ததற்கு, மீண்டும் தேடி எடுத்து இன்னொன்றைக் கொடுத்தான். அதையும் ஒன்றன்மேல் வைத்துப் பார்த்து, கொஞ்சம் பெரிதாக இருக்கிறது என்றேன். கொஞ்சம் மேலே நகர்த்தி  சரியாக இருக்கிறது என்றான். இப்போது கீழே சரியாக இல்லை. அதைச் சொன்னதற்கு, சரியாக வரும் மூடியைக் கொண்டுவந்தால் காசை திரும்பத் தருகிறேன் என்றான்.

கண்முன்னே நடக்கிறது. நன்றாகத் தெரிகிறது சரியில்லை என்று. எந்த தைரியத்தில் இப்படியெல்லாம் செய்கிறான் என்று தெரியவில்லை. ஐம்பத்தைந்து ரூபாய்தானே, இதற்காக திரும்பியா வரப்போகிறார்கள் என்ற நினைப்பாக இருக்கும். இப்படியே எவ்வளவு சம்பாதிப்பான். ஒரு ரூபாயாக இருந்தாலும் திருப்பி வாங்கித்தான் நமக்குப் பழக்கம்.

பெங்களூர் வந்ததிலிருந்தே இந்த சில்லரை விசயம் கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருக்கிறது. வாடிக்கையாளரை, பணக்காரன் என்று நினைக்கிறார்களா, அல்லது அவர்கள் பணக்காரர்களா தெரியவில்லை. ஒன்று இரண்டு எல்லாம் தருவதும் இல்லை, எந்த பதிலும் சொல்வதும் இல்லை. கேட்டாலும், சில்லரை இல்லை என்றுதான் பதில் வருகிறது. எந்த அளவுக்கு வடிக்கையாளர்கள் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது இங்கு வாழ.

பத்து ரூபாய் சில்லரை இல்லையென்றால், அடுத்த வாரம் தாங்க எனச் சொல்லும் கறிக்கடை பாயும் இதே ஏரியாதான். இருநூற்றி இருபது ரூபாய் பில்லைப் போடுவிட்டு, முன்னூறு கொடுத்தால், சில்லரை இல்லையென்று இருநூறு எடுத்துக்கொள்ளும் மெக்கானிக்கும் இதே ஏரியாதான். இவற்றையெல்லாம் எப்போதாவதுதான் பார்க்கிறேன். சில்லரையை ஆட்டயப் போடுபவர்களைத் தினமும் சந்திக்கவேண்டியதிருக்கிறது.

இவனை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று, வீட்டிற்குச் சென்று, மூடியை எடுத்துவந்து, சரியில்லை என்று மாட்டிப் பார்த்தாயிற்று. அவனும் செம கடுப்பில் இருந்தான். சில்லரை இல்லை, 45 கொடுங்க 100 தருகிறேன் என்றான். முந்தை நாளும் இதே கதைதான், சில்லை இல்லையென, 55 சரியாக வாங்கினான். சில்லரை விசயத்தில் சரவணபவனை அடித்துக்கொள்ளமுடியாது. 45 கொடுத்து 100 வாங்கிவந்தேன். அந்தப் பக்கம் இன்னொரு கடை இருக்கிறது, அங்கே செல்லலாம் என்றார் தங்கமணி. என்ன இருந்தாலும் விசில் வராதது இன்னும் பிரச்சனைதானே.

இன்னொரு கடைக்குச் சென்றோம். அதே மாதிரியான பாத்திரக்கடை.  அதே மாதிரி ஹிந்திவாலா. ஆனால் அதேமாதிரி கூட்டம் இல்லாமல் இல்லை. முன்னால் மூன்றுபேர் நின்றுகொண்டிருந்தார்கள். இருந்தாலும் என்ன என்றார், கேஸ்கெட் என்றோம், காத்திருக்கச் சொன்னார். இருவரை அனுப்பிவிட்டு நம்மிடையே வந்தார். இன்னொருவருக்கு சில தட்டுகளைக் கொடுத்துப் பார்க்கச் சொல்லியிருந்தார்.

வாங்கிப் பார்த்துவிட்டு, கேஸ்கெட் நன்றாகத்தான் இருக்கிறது, ஏன் மாற்றுகிறீர்கள் என்றார், விசில் வரவில்லை என்றோம். தண்ணீர் ஓரங்களில் வடிகிறதா என்றார், இல்லை என்றார் தங்கமணி. தண்ணீரில் நனைத்து உபயோகியுங்கள் ஒழுங்காக வரும் என்றார். தங்கமணி தயங்கினார். மூடியை வாங்கிப் பார்த்தார். சேப்டி வால்வை சோதித்தார், அதுவும் நன்றாக இருக்கிறது என்றார். உபயோகித்துப் பாருங்கள், சரியில்லை என்றால் சேப்டி வால்வு மாத்திப் பார்க்கலாம் என்றார்.

தங்கமணி, பரவாயில்லை இப்பவே அதை மாற்றித்தாருங்கள் என்றார். இருபது ரூபாயை ஏன் வீணாக்குகிறீர்கள், உபயோகித்துப் பாருங்கள் என்றார். தங்கமணி வற்புறுத்தவே, அதை மாற்றிக்கொடுத்தார். இவரும் இதே ஏரியாவில்தான் கடை வைத்திருக்கிறார். பெங்களூரை நினைத்து ஏறிய டென்சனையெல்லாம் குறைத்து அனுப்பினார். இவர்களைப் போன்றவர்கள்தான் நான் இன்னும் இங்கே இருக்கக் காரணம். இவர்களுக்கெல்லாம் நன்றி.

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!

டிவி வாங்குவது எப்படி

ஊட்டி நண்பர் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஊரிலிருந்து ஒரு "கலைஞர் டிவி"யைக் கொடுத்துவிட்டிருக்கிறார்கள், நண்பர் ஒருவரிடம் இருக்கிறது, சென்று வாங்கவேண்டும் என்று. இரண்டு வாரத்திற்கு முன்னால் கிளம்பலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. வெள்ளி இரவு மறுநாள் போகலாம் என பேசிக்கொண்டோம். மறுநாள் காலை கல்லூரியில் படித்த நண்பனின் நிச்சயதார்த்தம். அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன். மழை வேறு. வீட்டிற்கு கிளம்பவும் மழை விடவும் சரியாக இருந்தது. வழக்கம்போல மழைவிட்ட டிராபிக். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அப்போதுதான் நண்பர் போன் செய்தார், இப்போது போகலாமா என்று. டிராபிக் அதிகமாக இருக்கிறது, இன்று வேண்டாம், நாளை போகலாம் என்றேன். என்ன நினைத்தாரோ, மாலை அவரே கிளம்பிவிட்டார், பேருந்தில் போகலாமென்று. சரி, நானே வருகிறேன் என்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். வழக்கம்போல டிராபிக். இங்கு, எப்போது எப்படி டிராபிக் இருக்குமென்று கனிக்கவே முடியாது. பீக் அவர் என்று நினைத்து வரும்போது குறைவாக இருக்கும். சில நேரம் இரவு பதினோரு மணிக்கு முட்டிக்கொண்டு நிற்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த ஹைபர் சிட்டி சிக்னலைக் கடப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.



Share/Bookmark
Read More!