ஒரு வழியா ஊருக்குப் போனேன்

வலையுலகில் மேய்ந்துகொண்டிருக்கும்போது சில நேரங்களில் ஓரங்களில் வரும் கிளப் மகிந்த்ரா அல்லது வேறு ஏதாவது டூர் விளம்பரத்தைப் பார்ப்பேன். நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைவதில்லை என எண்ணியதில்லை. இப்போதுதான் புரிகிறது. வீட்டிலிருப்பவர்கள்தான் வெளியே செல்ல திட்டமிட வசதியாய் இருக்கும். வெளியே இருக்கும் நமக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிற்குச் செல்லத்தான் திட்டமிடத்தோன்றுகிறது. வீட்டைவிட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன, ஆனால் நான் மாறவேயில்லை. இப்போதும் விடுமுறை வந்தால் பெற்றோர் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லத்தோன்றுகிறது.

சென்னையில் ஐந்து வருடங்களுக்கு மேல் குப்பை கொட்டியாகிவிட்டது. இப்போது பெஙளூரிலிருந்து. சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வது எவ்வளவு சுலபமென்று இப்போதுதான் தெரிகிறது. இங்கு வந்தும் இரு முறை சென்று வந்துவிட்டேன். ஆனால், இந்த முறை பல சிரமங்கங்களுக்கிடையே செல்ல நேர்ந்தது.



Share/Bookmark
Read More!