ஏதோ ஒன்னு

படிக்கவும் முடியல, எழுதவும் முடியல. சில நேரம் படிக்காம படுக்கவும் முடியல. ஒரு சில விசயங்களைப் பழகிட்டோம்னா திரும்ப விடுறது எனக்கு கொஞ்சம் கஷ்டம். அது எல்லாமே ஒரே மாதிரியா இருக்காது.

இப்போ காபி குடிக்கிறத எடுத்துக்கலாம். வீட்டுல இருக்குறவரைக்கும் காலைல எந்திரிச்ச உடனே காபி குடிக்கனும்போல இருக்கும். அம்மா கேட்டவொடனே குடுக்கலைனா சண்டையே வரும். அந்த சமயத்துல எங்காவது வெளியூரு போயிருந்தா, காலைல எந்திரிச்சவொடனே எங்கயாவது தேடிப்பிடிச்சாவது குடிக்கிறது பழக்கம். அப்புறம் சென்னை வந்ததுக்கு அப்புறம் பேச்சலர் வாழ்க்கைல அது எப்படி காணாமப் போச்சுன்னே தெரியல. அதப் பத்தி கவலப்படுறதும் கிடையாது. அதே நேரம், காலைல எந்திரிச்ச உடனே கிடைச்சதுனாலும் குடிக்கிறதுதான், அதப் பத்தி அப்பவும் சரி பின்பும் சரி, கவலைப்படுறது இல்லை. இது ஒரு வகையாச்சா?

இப்போ சிகரெட் குடிக்கிறத எடுத்துக்கலாம். பழக்கமாகிப்போச்சு. விடனும்னு தோனுது. சில நாள் விட்டுப்பாக்குறது. அப்றம் ரெண்டு நாள் அடிச்சுப் பாக்குறது. விட்டதும் ஒரு சந்தோசம், அப்றம் ஏக்கம். சரின்னு அடிச்சுப்பாத்தா, ஏதோ ஒரு இழப்பு. இப்படி ஒரு பழக்கம். விட்டாலும் இழுக்கும், பிடிச்சாலும் கவலைப்படவைக்கும்.



இதுல படிக்கிறது, எழுதுறதுன்னு ரெண்டு புதுசா வந்து தொத்திக்கிச்சு. ஆரம்பத்துல படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். அது காப்பி குடிக்கிற மாதிரி. படிக்க வாய்ப்பு கிடைக்கலைனாலும், கிடைச்சாலும் அவ்வளவா கண்டுக்கிறதே இல்லை. முடிஞ்சா படிப்போம், இல்லன்னா அடுத்த நாள் படுச்சுக்கலாம். அப்றம் வந்தது எழுதுறது, இது சிகரெட் குடிக்கிற மாதிரி ஆகிப்போச்சு. எழுத நேரம் ஒதுக்குனா வேலை சில கெட்டுப்போகும்னு தெரியும். இருந்தாலும் எழுதினேன். அப்றம் கொஞ்ச காலம் நிறுத்திவச்சேன். சில நேரங்கள்ல அப்படியே கை துருதுருன்னு வரும். வேணாம்டா எழுத வேணாம், புடிச்சா திரும்ப விட முடியாதுன்னு மனசு சொல்லும்.

ஆனா பாருங்க, இன்னொரு பக்கம் பல பல தலைப்புகள் மனசுக்குள்ள தோனிக்கிட்டே இருக்கும். மாசத்துக்கு ஒன்னு எழுது, வாரத்துக்கு ஒன்னு எழுது, உன் கண்ட்ரோல்ல வச்சுக்கன்னு இன்னொரு பக்கம் சொல்லும். சில நேரம் எழுத ஆரம்பிச்சு பாதியிலயே டிராப்ட்ல போட்டு வச்சுடுவேன். போட்டது போட்டதுதான் சேந்துகிட்டே இருக்கும். யாருக்குத் தெரியும் இது கூட டிராப்ட்லயே கிடந்தாலும் கிடக்கலாம். அப்படி கிடக்காம இருக்கனும்னா ஒரே வழிதான் இருக்கு. இதுக்கு மேல கொஞ்சம் கூட யோசிக்காம டக்குன்னு PUBLISH POST பட்டன க்ளி

Share/Bookmark
Read More!

கார்கிலில் வெற்றி உனக்கே(MAY - 99)


*எல்லை மீறிய எத்தர்களை அழிக்க
நய வஞ்சக நரிகள் நம் நாட்டில்
புகாமல் இருக்க, இளஞ்சிங்கமே!
எழுந்துவிடு.

டைகள்
இமயம் போன்றதெனிலும்
இடித்து விடு!

தாயகத்தை
இமைபோல் காக்க இன்றே
புறப்படு!

திண்ணமான
தீர்மானங்களை கையில்
கொண்டுவிடு!

தீரத்துடன்
போராட முடிவெடு!


துன்பங்களை
துக்கமென நினைத்துவிடு!


தூக்கம்
இமைகளை அணுகாமல்
இருக்கவிடு!


தென்படும்
எதிரிகளை பந்தாடிவிடு!


தேசத்தை
காக்க விழித்துவிடு!

தைரியத்தை
மற்றவர்க்கு புகட்டிவிடு!

தொல்லையின்றி
தேசத்தை வாழவிடு!

தோட்டாக்களால்
எதிரிகளை அழித்துவிடு!

தெளத்யத்தில்
வெற்றி உனக்கே
புரிந்துவிடு!


*இளஞ்சிங்கமே
இன்றே புறப்பட்டுவிடு
“வந்தே மாதரம்”

பி.கு:-
1999-ம் ஆண்டு கார்கில் போர் ஆரம்பித்த 3-ஆம் நாள்
என் மனதில் தோன்றிய வரிகள்.

---கி.கி


Share/Bookmark
Read More!

வலையில் வந்தவை-2


உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"
பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling
தெரியாமல் சமாளிப்போர் சங்கம்



அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்



காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-
ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்




அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

"
கன்னத்தில் கொசுக்கடி"

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்


கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்


Join Only-for-tamil


எப்படியும் படித்து இது மாதிரி யாரும் சிரிக்கப்போவதில்லை,





---கி.கி





Share/Bookmark
Read More!

ஆற்காட்டாருக்கு நன்றி

அன்று ஞாயிற்று கிழமை,

வீட்டின் முன்புற அறையில் வெறும் தரையில் அமர்ந்து எனது சகோதரன் அதிபிரதாபன் அளித்த கிமு கிபி என்ற புத்தகத்தை மூன்றாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் கேரளாவிலிருந்து விடுமுறை கழிக்க வந்திருக்கும் எனது சகோதரி பீனா(BEENA) “எந்தா அச்சாச்சா வாயுக்குந்நு(என்ன அண்ணா படிக்கிறீர்கள்) என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளுக்கு புத்தகத்தை குறித்து சில விஷயங்களை மலையாளத்தில் கூறி புரிய வைத்தேன். அதன் பின் அத்தை மகள் நித்தியா ”அத்தான் சமயமே போவல்ல என்னத்தையாவது செல்லுங்க”(சொல்லுங்க) என்றபடி வந்தமர்ந்தாள்.


அப்புறம் எனது மனைவி “ஆரம்பிச்சிட்டாரா அவருடைய வரலாற்றை என்று கேட்டபடி ஜோதியில் ஐக்கியமானாள்.

கையில் இருந்த கிமு கிபி புத்தகம் விசிறியாக பயன்பட எங்கள் பேச்சு தொடர்ந்தது அதனிடையே எங்கள் வீட்டில் தங்கி ஏரோநாட்டிக் படிக்கும் சிசிலன்(SICILAN) லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்த படியால் டைம் பாஸாக்காக ஏதாவது பேசலாம் என்று வந்தமர்ந்து, பேச்சினிடையே “வெறுந்தரையில் படுத்து உறங்கிஎன்று காளை ராகத்தில் கீரல் விழுந்த ரெக்காட போல பாடி பாடி காதில் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தான். இதனிடையே செல்போனில் சார்ஜ் திர்ந்துவிட்டபடியால் என் மனைவியின் சகோதரனும், ஃபேன் ஓடாததால் என் தம்பி சதிஷ்(SATHESH)-ம் பேச்சில் கலந்து கொண்டனர்.

கிட்டதட்ட மூன்று மணி நேரம் பல விஷயங்களை குறித்து பேசினோம்,ஒருவரை ஒருவர் கலாய்த்தோம்.

அந்த நேரத்தில் கரன்ட் வந்துவிட எனது மனைவியின் சகோதரனும்,சிசிலனும் அவரவர் லேப்டாப்பில் அமர, மனைவியும்,அத்தை மகளும் TV முன் அமர,எனது தங்கையும்,சதிஷீம் எனது லேப்டாப்பில் கேமில் மூழ்கிவிட நான் மீண்டும் தனிமைபடுத்தபட்டேன்.

அப்புறம் என்ன செய்ய நானும் COMPUTER முன் அமர்ந்து ஏதோ.காம்ல் ஏதாவது எழுதலாம் என அமர்ந்தேன்.

என்ன தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லையே என நினைக்கிறீர்களா. நிறையவே தொடர்பு இருக்குங்க. ஞாயிற்றுக் கிழமையானால் கூட அனைவரும் அமர்ந்து பேசுவது என்பது கரண்ட் கட்டால் மட்டுமே நடக்கிறது. அப்புறம் ஆற்காட்டாருக்கு நன்றி சொல்லித்தானே ஆகவேண்டும்.


--- கி.கி.



Share/Bookmark
Read More!