Read More!
வலையில் வந்தவை-2
Read More!
ஆற்காட்டாருக்கு நன்றி
அன்று ஞாயிற்று கிழமை,
வீட்டின் முன்புற அறையில் வெறும் தரையில் அமர்ந்து எனது சகோதரன் அதிபிரதாபன் அளித்த கிமு கிபி என்ற புத்தகத்தை மூன்றாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் கேரளாவிலிருந்து விடுமுறை கழிக்க வந்திருக்கும் எனது சகோதரி பீனா(BEENA) “எந்தா அச்சாச்சா வாயுக்குந்நு” (என்ன அண்ணா படிக்கிறீர்கள்) என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள்.
அவளுக்கு புத்தகத்தை குறித்து சில விஷயங்களை மலையாளத்தில் கூறி புரிய வைத்தேன். அதன் பின் அத்தை மகள் நித்தியா ”அத்தான் சமயமே போவல்ல என்னத்தையாவது செல்லுங்க”(சொல்லுங்க) என்றபடி வந்தமர்ந்தாள்.
அப்புறம் எனது மனைவி “ஆரம்பிச்சிட்டாரா அவருடைய வரலாற்றை” என்று கேட்டபடி ஜோதியில் ஐக்கியமானாள்.
கையில் இருந்த கிமு கிபி புத்தகம் விசிறியாக பயன்பட எங்கள் பேச்சு தொடர்ந்தது அதனிடையே எங்கள் வீட்டில் தங்கி ஏரோநாட்டிக் படிக்கும் சிசிலன்(SICILAN) லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்த படியால் டைம் பாஸாக்காக ஏதாவது பேசலாம் என்று வந்தமர்ந்து, பேச்சினிடையே “வெறுந்தரையில் படுத்து உறங்கி” என்று காளை ராகத்தில் கீரல் விழுந்த ரெக்காட போல பாடி பாடி காதில் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தான். இதனிடையே செல்போனில் சார்ஜ் திர்ந்துவிட்டபடியால் என் மனைவியின் சகோதரனும், ஃபேன் ஓடாததால் என் தம்பி சதிஷ்(SATHESH)-ம் பேச்சில் கலந்து கொண்டனர்.
கிட்டதட்ட மூன்று மணி நேரம் பல விஷயங்களை குறித்து பேசினோம்,ஒருவரை ஒருவர் கலாய்த்தோம்.
அந்த நேரத்தில் கரன்ட் வந்துவிட எனது மனைவியின் சகோதரனும்,சிசிலனும் அவரவர் லேப்டாப்பில் அமர, மனைவியும்,அத்தை மகளும் TV முன் அமர,எனது தங்கையும்,சதிஷீம் எனது லேப்டாப்பில் கேமில் மூழ்கிவிட நான் மீண்டும் தனிமைபடுத்தபட்டேன்.
அப்புறம் என்ன செய்ய நானும் COMPUTER முன் அமர்ந்து ஏதோ.காம்–ல் ஏதாவது எழுதலாம் என அமர்ந்தேன்.
என்ன தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லையே என நினைக்கிறீர்களா. நிறையவே தொடர்பு இருக்குங்க. ஞாயிற்றுக் கிழமையானால் கூட அனைவரும் அமர்ந்து பேசுவது என்பது கரண்ட் கட்டால் மட்டுமே நடக்கிறது. அப்புறம் ஆற்காட்டாருக்கு நன்றி சொல்லித்தானே ஆகவேண்டும்.
--- கி.கி.
ஆற்காட்டாருக்கு நன்றி
Read More!
வேட்டைக்காரன் பாடல்கள்
‘பிச்சக்காரப்பய, போடுறதுக்கு வேற பாட்டே கிடைக்கலயா இவனுக்கு?’
(இப்பவும் வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைக்க வேணாம்)
என்னடான்னு பாட்டக் கேட்டேன், கட்டிப்புடி கட்டிப்புடிடால
’ஜிங்கு ஜிக்ச்சா... ஜிக்கு ஜக்க ஜிக்கு ஜக்க...’
ஓடிட்டு இருந்தது. இதுக்கு எதுக்கு கோவப்படுறான்னு யோசிச்சுக்கிட்டே கேட்டுட்டு இருந்தேன்.அடுத்த பாட்டு,
‘மீண்டும் மீண்டும் வா, வேண்டும் வேண்டும் வா....’
நல்லாத்தான் இருந்தது. அடுத்து,
இப்படியே போய்கிட்டு இருந்தது (என்ன கேக்க வர்றீங்க...? ஆமா, பாக்கியராஜ் பாட்டுக்களும் வந்துச்சு). கொஞ்ச நேரத்துக்கு மேல நம்மளாலயும் கேக்க முடியல (எப்படித்தான் இப்படியே செலக்ட் பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியல). அப்படியே மொபைல்ல பாட்டு கேக்கலாம்னு எடுத்தேன், தம்பியோட மொபைல், போன வாரம்தான் என்கிட்ட குடுத்தான். உள்ள ஆதவனும், வேட்டைக்காரனும் மட்டும் இருந்தது. ஆதவன் ரொம்ப தடவ கேட்டுட்டதால, வேட்டைக்காரனைக் கேட்டுத்தான் பாப்போமேன்னு கேட்டேன். நல்லா இருந்துச்சோ இல்லையோ, நல்லா நேரம்போச்சு...
1)
குஸ்து ஆலமாக்கி மிஸ்மாத்தா சூமிக்காஸா ஸூ (உண்மையிலேயே இப்படித்தான் ஆரம்பிச்சது)
ஏலேலம்மோ..... (டம்க்கு டக்கு டம்க்கு டக்கு... )
சுந்தரி...யே....
தாவணி
இப்படியே டமுக்கு டப்பா டமுக்கு டப்பானு நல்லா உள்ள வாங்கி சைடுல வுட்டு பின்னாடி வெளிய எடுத்து, குத்து குத்துன்னு குத்தியிருக்காங்க. டான்சுக்குன்னே போட்ட பாட்டா இருக்கும்.
இதுல வர்ற குத்து ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கு, என்ன பாட்டுன்னுதான் ஞாபகத்துக்கே வர மாட்டேங்குது.
2)
ஹீரோ ஏதாவது சொல்ல, ஹீரோயின் அது இல்ல இதுன்னு கடைசி வரை சொல்லிட்டே இருக்காங்க. நல்லா இருக்கு. கிராமத்து இசை, தவில விட்டு தட்டிருக்காங்க, ட்க்ர்ர்ர், வ்ர்ர்ர்ர்ர்ர்யூம், ச்சல் ச்சல் சத்தமெல்லாம் கேட்டுட்டே இருக்கு. பாட்டக் கேக்கும்போது, அப்படியே கிராமத்து வயல்வெளியும், பேக்குரவுண்டுல சேல கட்டுன பொம்பளங்களும், வேட்டி கட்டின ஆம்பளங்களும் ஆடுறது, அப்றம் வைக்கோல், ஆடு, மாடு, கெழவி எல்லாம் மனசுல அப்படியே ஓடுச்சு.
3)
லைட்டா மீசிக் ஸ்டார்ட் ஆகுது, கூடவே...ஹேய்.... ஹோய்... சத்தம்.
ஆரம்பிக்கும்போதே தெரிஞ்சு போச்சு, இதான் இண்ட்ரோ சாங்கா இருக்கும்.
நா அடிச்சா தாங்க மாட்ட
.
.
.
கடைசியில ஒரு சின்ன பையன் வாய்ஸும் வருது. சின்னப் பசங்க படம்னு சொல்ல வாய்ப்பிருக்கு.
4)
ஸ்ஸ்ஸூம்
க்கிய்யா (அப்டின்னு ஒரு வாய்ஸ், அப்றம் ஒரு மீசிக்..)
நல்லாத்தான் எழுதியிருக்காங்க. காதல் பாட்டுன்னாலே வரிகள்லாம் சும்மா செதுக்கி வச்சிடுறாங்க. கண்டிப்பா காதலர்கள் கொஞ்ச நாளைக்கு இதத்தான் முனுமுனுப்பாங்க.
5)
டன் டகெட டண்டண்டே டன் டகுட டன்
டன் டகெட டண்டண்டே டன் டகுட டன் (அய்யய்யோ இன்னொரு இண்ட்ரோவா)
(நடுவுல ஒரு சாம்பில்)
(போதுமா, இதுவும் செம குத்துதான். இளைய தளபதி எப்பல்லாம் நடக்குறாரோ இது பின்னாடி பாடும்னு எதிர்பாக்கலாம்)
---
ஒரு இண்ட்ரோ, ஒரு பிஜிஎம், ஒரு மெலோடி, ஒரு வில்லேஜ் அப்றம் ஒன்னு டான்ஸ்க்கு. பாட்டுக்களே செம மசாலாவா இருக்கு. கேக்கலாம்.
-ஏனாஓனா
(ஆதி அண்ணன் மன்னிக்கவும், பேரு சீக்கிரம் மாத்திடுறேன்)
வேட்டைக்காரன் பாடல்கள்
Read More!
தேன்கூடு - 2009/10/22
கூகுள் க்ரோம் புதிய வசதிகளுடன் அருமையாக உள்ளது. வெற்றுப் பக்கத்தில், ஏற்கனவே திறந்த பக்கங்களின் சிறிய படங்கள் ஏற்கனவே தெரிந்ததல்லவா... இப்போது அவற்றை அருமையாக கையாளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுள் க்ரோமில் தீம்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இப்போது பிரபல ஆர்ட்டிஸ்ட்டுகள் உருவாக்கிய 95 தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே சென்று மாற்றிக்கொள்ளலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விசயம் - தீம் மாறும்போது க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
பாதுகாப்பான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது பற்றிய அருமையான வழிமுறைகளை இங்கே காணலாம் - கூகுள் டீமிலிருந்து.
---
சென்ற வார பதிவர் சந்திப்பு
படத்தில்: ஜனா, அவருடைய நண்பர் சீலன், அடலேறு, நிலாரசிகன்.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: ஏனாஓனா.
இடம்: பாலவாக்கம் கடற்கரை.
நம்மைத் தவிர மற்றவர் அனைவருமே இலக்கிய சிந்தனையாளர்கள் என்பதால், பேச்சு இலக்கியம் பற்றியே அதிகம் இருந்தது (கதை, கவிதை, ஹைக்கூ, எழுத்தாளர்கள் இப்படியே...). நமக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாததால் வெறும் கவனிப்பு மட்டுமே. இடையிடையே வெகுஜன கலப்பும் இருந்தது, நாம் பேசியதால்.
பாலவாக்கம் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் சொல்லுங்கள், அடுத்த முறை கூடும்போது தகவல் சொல்கிறேன்.
---
இந்த வார பதிவர் சந்திப்பு
பதிவர் வலைமனை சுகுமார் திருமணம் நேற்று இனிதே நடந்தது. பதிவர்கள் சிலர் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தோம்.
படத்தில்: அகநாழிகை பொன்.வாசுதேவன், கேபிள் சங்கர், முரளி கண்ணன், வண்ணத்துப்பூச்சி சூர்யா.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: (வழக்கம்போல)ஏனாஓனா.
இடம்: வில்லிவாக்கம், பாபா நகர் திருமண மண்டபம் ஒன்றில்.
இந்த பாபா நகர் தேடிக் கண்டுபிடித்ததே ஒரு பெரிய கதையாக எழுதலாம். ‘பாபாவைத் தேடி ஒரு பயணம்’ என்று தலைப்பு போட்டால் ஹிட்டு கண்டிப்பாக கூடும் என்று வண்ணத்துப்பூச்சியார் சொன்னது கூடுதல் சுவாரஸ்யம்.
இது ஒரு காதல் திருமணம். பல போராட்டங்களுக்கிடையே காதலியைக் கைப்பிடித்த சுகுமாருக்கு வாழ்த்துக்கள்.
மொய்யாக 4 பின்னூட்டம் எழுதி கவரில் வைத்துக் கொடுத்துவிடலாம் என்றார் முரளி கண்ணன், நான் ஒரு பதிவே போட்டு விடுகிறேன் என்றேன் (ஐய்யா, செலவு மிச்சம்).
படத்தை மீண்டும் பாருங்கள், நால்வரும் சீனியாரிட்டிப்படி வரிசையில் இருப்பதுபோல் தெரிகிறதா? (இடப் பக்கம் இருப்பவர்கள் மன்னிக்கவும்)
---
ஒரு SMS
நேத்து ஒரு கல்யாண வீட்டுக்குப் போனேன்.
ஜோடின்னா ஜோடி அப்படி ஒரு ஜோடிய என் வாழ்க்கையில பாத்ததே இல்ல.
அப்படி ஒரு அழகு.
அப்புறம் என்ன,
கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்.
---
கடைசியா ஒரு சொந்த சரக்கு
பொண்ணு கிடைத்தாலும்
புதன் கிடைக்காதாம்
கிடைத்தது என்னவோ
புதன்கள் மட்டுமே.
---
-ஏனாஓனா.
தேன்கூடு - 2009/10/22
Read More!
பேரு வைக்கிறதுக்கு ஒரு அக்கப்போரா?
அதுக்கப்புறம், அங்க பின்னூட்டத்துல கூட சிலபேர் சில தலைப்புகளை சிபாரிசு பண்ணினாங்க. அண்ணன் ஷங்கி என்சிலாடான்னு ஒரு ஐட்டத்த சொன்னாரு. விக்கில பாத்தா ஃப்ரூட் சாலட் மாதிரி தெரிஞ்சது. அப்றம் ஆதவன், இந்த பேரு ஏற்கனவே இருக்குன்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். அப்றம் ஜனா மனோரஞ்சிதம், இராகமாலிகா, பூந்தோட்டம், கூட்டாஞ்சோறு, பலதும் பத்தும், பழக்கூடை இப்படி வரிசையா பின்னிட்டாரு. சாம்ராஜ்ய ப்ரியன் கதம்பம்னு ஒன்னு சொன்னாரு. இதுல இன்னொரு முக்கியமான விசயம், கிரி அண்ணன் ஆ60மொ30 தொடர்ந்து படிக்கிறாராம்.
இதெல்லாம் பத்தி யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது... ஒரு பிரபல பதிவர் சாட்ல வந்தார். அவரும் நானும் இதப் பத்தி அலசி ஆராஞ்சு பாத்தத நீங்களும் பாருங்க...
ஹி ஹி ஹி...
சாக்கடை - நாத்தம் - னு நீயே பின்னூட்டம் போடுவ...
நமக்கு நல்லா, டெர்ரரா இருக்கனும் பேரு...
தலைப்பில்லா
தலைப்பின்மை...
முண்டம்
”மூக்க ஒடச்சிடுவேன்”...
கடல்
?
சங்கமம்?
வானவில்னா 7ஓட முடிஞ்சு போகும்
ஏனாஓனா: ’அட போடாங்’
ஏனாஓனா: அப்டின்னு வச்சிடலாமா?
எரும மாடு... அப்டின்னு பின்னூட்டம் வரும்...
அதுக்காக... சாக்கடைல கூட எல்லாம் இருக்கும்....போய்யாங்...
அப்பப் போனவருதான், அதுக்கப்புறம் ஆன்லைன்ல வரவே இல்ல. என்ன நெனச்சாரோ தெரியல?!
---
அப்றம் இன்னொரு பிரபல பதிவர் சில தலைப்புகளை மெயில்ல அனுப்பினார்.
இப்போ பி.ப. பார்ட் 2
வறுத்த கடலை
தேனீ
வடகறி
சரிகம பதநி
சூடா போண்டா
சுண்டல்
இதுதான் லிஸ்ட். நான் கேட்டேன்,
ஏனாஓனா: ஹா ஹா ஹா... என்னா இதெல்லாம்... ?
---
அப்புறம் இன்னோரு பிரபல பதிவர் போன்ல வந்தாரு...
---
அதுக்கப்புறம் பி.ப.4, பி.ப.5... கதையெல்லாம் வேணாம். உங்களை இதுக்கு மேல சோதிக்க விரும்பல. கடைசியா ஒரு பூவைப் பார்த்தப்போ தோனினதுதான் ’தேன்கூடு’. ரொம்ப பொருத்தமா இருந்தது (எப்படிங்கிற மொக்கை அடுத்த பதிவில்). வேற யாராவது இந்த தலைப்புல கலவைப் பதிவு எழுதுறாங்களானு கூகுள்ல தேடிப்பாத்தேன். தேன்கூடுன்னு ஒரு திரட்டி இருந்தது மட்டும் தெரியுது, கலவை யாரும் எழுதுற மாதிரி தெரியல.
உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க, ப்லீஸ்.
---
பெஸ்கியின் டிஸ்கி: பி.ப.1 - ஆதவன், பி.ப.2 - சாம்ராஜ்ய ப்ரியன், பி.ப.3 - கேபிள்ஜி, பி.ப.4 - அடலேறு, பி.ப.5 - நிலாரசிகன், பி.ப.6 - ஜனா. பேரு வைக்க அக்கப்போர் பண்ணின, பண்ண முயற்சி பண்ணின இவங்களுக்கு நன்றிகள்.
அப்றம் முதல் பத்தியில இருக்குறவங்களுக்கும் நன்றிகள்.
-ஏனாஓனா.
பேரு வைக்கிறதுக்கு ஒரு அக்கப்போரா?
Read More!
வானவில் - 2009/10/12
திடீர்னு ஒரு சந்தேகம், நேத்து வீட்டுக்குப் போற வழியில. நம்ம கலவைப் பதிவு நல்லா ரீச் ஆகல போல இருக்கேன்னு! காரணம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணிப் பாத்தா தலைப்பும் ஒரு காரணமா இருக்குமோன்னு தோணுச்சு. சரி, தலைப்பை மாத்தி வச்சுடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். வேற தலைப்பு என்ன வைக்கலாம்? (மொக்கைனு வைய்டா மொக்கைனு சொல்றீங்களா? கவலப்படாதீங்க, அது லேபில்ல கண்டிப்பா இருக்கும்) ’ஏதேதோ’னு வைக்கலாமா, நம்ம தளத்தோட பேருக்குப் பொருத்தமா இருக்கும் அப்டின்னு தோனுச்சு. ஆனா, மத்த பிரபல பதிவர்களோட தலைப்புகளை எல்லாம் பாத்தா ஏதோ ஒன்னு ஸ்டிரைக் ஆச்சு... எல்லாமே வாய்க்குள்ள போறதாவே இருக்கே! (என்’ணங்களை கணக்குல எடுக்கல) அப்போ நாமலும் ஒரு (சாப்பிடுற) ஐட்டத்தோட பேர தலைப்பா வச்சிடலாம்னு முடிவு பண்ணி, அப்படியே யோசிக்க ஆரம்பிச்சேன் (திரும்பவும்).
பஞ்சாமிர்தம், கொத்துபரோட்டா, மிச்சர் - இந்த மாதிரி மிக்ஸிங் ஐட்டமா இருக்கனுமேன்னு யோசிச்சு யோசிச்சுப் பாத்தேன். கடைசியில நம்ம மூளைக்குள்ள ஓடுன தலைப்புதான் - பழரசம்.
இது சின்ன வயசுல நம்ம ஊரு ஃபேவரிட் ஐட்டம். ஒரு ரூபாய்க்கு ஒரு கண்ணாடி கிலாஸ் நெறையா கெடைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், அன்னாச்சி, கொய்யா... இப்படி கைல கெடைக்கிறத எல்லாம் மொத்தமா போட்டு அடிச்சி வச்ச்சிருப்பாங்க. சிகப்பு கலர்ல இருக்கும். வாங்கி குடிச்சா வயிறு நெறைஞ்சே போகும். நாம 25 காசு குடுத்து பாதி கிலாஸ்ல குடிக்கிறது வழக்கம் (அப்போ ஒரு நாள் பாக்கெட் மனி அவ்ளோதான்). வீட்டுல இதெல்லாம் வாங்கி குடிக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா மிச்சம் இருக்குற பழைய பழங்களைப் போட்டுத்தான் இது பண்றாங்கங்கிறது அவங்களோட எண்ணம். நாம இதெல்லாம் கண்டுக்கிறது இல்ல (இப்ப குடிக்கிற ஐட்டம் வரைக்கும் இதே கததான்).
சென்னை வந்து ஒரு ரெண்டு வருசத்துக்கு அப்புறம் (ஒன்னா ரெண்டா, ஒழுங்கா சொல்லுன்னு கமண்டு போடாதீங்க, ஒரு ஃப்லோல வருது) திரும்பவும் இது குடிக்க ஆசப்பட்டு, ஒரு கடைக்கிப் போயி கேட்டேன். கடக்காரன் நம்மள மொறச்சுப் பாத்தான். என்னடான்னு யோசிக்கிறதுக்குள்ள கூட இருந்த நம்ம மச்சி ஒருத்தன் ’ரெண்டு பழரசம்’ அப்டின்னான். நான் கேட்டது ‘ரெண்டு ஃப்ரூட் ஜூஸ்’.
நல்ல பேரு ஒன்னு கெடச்சிடுச்சுன்னு நெனச்சிட்டு இருக்கும்போது, ஒரு பிரபல பதிவரிடம் கருத்துக் கேக்கலாமேன்னு தோனுச்சு. நமக்குத் தெரிஞ்ச பிரபலம் ஒருத்தருக்கு போன் பண்ணி கேட்டேன். இது நல்லா இல்லன்னு சொல்லிட்டாரு (உங்க ஊருலதான் இப்படி, மத்தவங்களுக்கு பழரசம்னா ஒரு பழத்தோட ஜூஸ்னுதான் தோனும் என்பது விளக்கம்). வேணும்னா ஃப்ரூட் சாலட்னு வைச்சுகோன்னு சொன்னார். இல்ல, நான் தமிழ்லதான் வைப்பேன்னு சொன்னேன். எக்கேடும் கெட்டுப்போன்னு விட்டுட்டாரு.
இப்ப திரும்பவும் யோசன... ரொம்ம்ம்ம்ம்ப யோசிச்சப்றம், மிச்சம் மீதி இருக்குற ஐட்டத்தத்தான எழுதுறோம், அப்போ இட்லி உப்புமான்னு வைக்கலாமா? இல்லை. சரி டஸ்ட் பின், வேணாம் இங்லீஸ், அப்போ குப்பைத்தொட்டி; ஆதவன் கோபத்துக்கு ஆளாக வேணாம். மிச்ச சொச்சம்... ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு. இதையே வச்சிடலாம்னு முடிவு பண்ணியாச்சு.
இவ்ளோ யோசிச்சு என்ன பிரயோஜனம்? கடைசியில யோசிக்காமலேயே தோனின ஒன்னுதான் தலைப்பா போச்சு. துணிதுவைக்கும்போது தண்ணியெல்லாம் தெரிச்சு, வானவில் மாதிரி தெரிஞ்சது. அட, வானவில் நல்லா இருக்குமேன்னு, அந்த பிரபலத்த திரும்பவும் கூப்பிட்டுக் கேட்டேன். ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. ரைட்டு.
சரி, அதெல்லாம் இருக்கட்டும், மேட்டருக்கு வான்னு ’நீ ஆதவன்’ கூவுறது கேக்குது. இதான் மேட்டரு. இனி ஆ60மொ30 - வானவில்னு மாறப் போகுது,
----
இந்த வானவில்அறிமுகப் வானவில்லாக இருப்பதால் இதுக்கு மேல மேட்டர் இல்ல. என்னது? ஏதாவது சொல்லனுமா? சரி.
டெம்ப்லேட் மாத்திட்டேன் (அதான் தெரியுதே, இது ஒரு மேட்டரான்னு அவசரப்பட வேணாம்). உங்களுக்கும் டெம்ப்லேட் மாத்த உதவி தேவைனா, தாராளமா தொடர்புகொள்ளலாம். ஃபிரீயாய் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பா செய்து தருகிறேன்.(இது ச்சும்மா... செஞ்சு குடுடான்னு அடம் பிடிச்சீங்கன்னா செஞ்சு குடுத்துருவான் இந்த ஏனாஓனா, அவ்ளோ நல்ல மனசு).
பெஸ்கியின் டிஸ்கி 1: இந்தப் பதிவுல அதிகமா (பிராக்கெட்) இருக்குதேன்னு தோனுதா? அதுக்கு நா ஒன்னும் செய்ய முடியாது.
பெஸ்கியின் டிஸ்கி 2: மொதல்ல ஒன்னுன்னு போட்டுட்டேன்... ஆனா உண்மையிலயே ரெண்டாவது இல்ல. (இதுக்கு மொதல்ல 1 போடாமலேயே இருந்திருக்கலாமோ?)
---
-ஏனாஓனா.
வானவில் - 2009/10/12
Read More!
ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - செப்18
* Gmail ல ஏற்கனவே பல தீம்கள் வந்திருப்பது நமக்குத் தெரிந்ததே... இப்போது Random Themes வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு Theme ல் gmail உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இங்கு, உங்களுக்குப் பிடித்தமான Theme கலை மட்டும் தேர்வு செய்யும் வசதி இல்லை.
* அடுத்து மிகவும் நான் எதிர்பார்த்த ஒன்று. Wordpress ல் மிகவும் நீளமான பதிவிற்கு Read More கொடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம், முகப்புப் பக்கம் நீளமாக இருப்பதைத் தவிர்க்க முடியும். இந்த வசதி இப்போது நமது Blogger லும் வந்துவிட்டது. இது போல...
ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - செப்18
Read More!
ஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்


1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889,மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் (lift)பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 டன்னுக்கும் கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை(paint) பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சென்டி மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.
இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.
ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈஃபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.
(என்ன அநியாயம் இது 20 ஆண்டுகள் என்று சொல்லி 120 ஆண்டுகள் ஒன்றும் ஆகாமல் இருப்பதெல்லாம் கட்டுமானக்கலையா?! நம் டெல்லி மேம்பாலம் போல் கட்டும்போதே இடிந்து வீழ்வது அல்லவா கட்டுமானக்கலை)
ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.
1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியூ யோர்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.
அடொல்ப் ஹிட்லர், [[இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.
ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.
1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது

ஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்
Read More!







.jpg)
.jpg)
.jpg)
.jpg)
