Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

வலையில் வந்தவை-2


உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"
பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling
தெரியாமல் சமாளிப்போர் சங்கம்



அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்



காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-
ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்




அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

"
கன்னத்தில் கொசுக்கடி"

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்


கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்


Join Only-for-tamil


எப்படியும் படித்து இது மாதிரி யாரும் சிரிக்கப்போவதில்லை,





---கி.கி





Share/Bookmark
Read More!

ஆற்காட்டாருக்கு நன்றி

அன்று ஞாயிற்று கிழமை,

வீட்டின் முன்புற அறையில் வெறும் தரையில் அமர்ந்து எனது சகோதரன் அதிபிரதாபன் அளித்த கிமு கிபி என்ற புத்தகத்தை மூன்றாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் கேரளாவிலிருந்து விடுமுறை கழிக்க வந்திருக்கும் எனது சகோதரி பீனா(BEENA) “எந்தா அச்சாச்சா வாயுக்குந்நு(என்ன அண்ணா படிக்கிறீர்கள்) என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளுக்கு புத்தகத்தை குறித்து சில விஷயங்களை மலையாளத்தில் கூறி புரிய வைத்தேன். அதன் பின் அத்தை மகள் நித்தியா ”அத்தான் சமயமே போவல்ல என்னத்தையாவது செல்லுங்க”(சொல்லுங்க) என்றபடி வந்தமர்ந்தாள்.


அப்புறம் எனது மனைவி “ஆரம்பிச்சிட்டாரா அவருடைய வரலாற்றை என்று கேட்டபடி ஜோதியில் ஐக்கியமானாள்.

கையில் இருந்த கிமு கிபி புத்தகம் விசிறியாக பயன்பட எங்கள் பேச்சு தொடர்ந்தது அதனிடையே எங்கள் வீட்டில் தங்கி ஏரோநாட்டிக் படிக்கும் சிசிலன்(SICILAN) லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்த படியால் டைம் பாஸாக்காக ஏதாவது பேசலாம் என்று வந்தமர்ந்து, பேச்சினிடையே “வெறுந்தரையில் படுத்து உறங்கிஎன்று காளை ராகத்தில் கீரல் விழுந்த ரெக்காட போல பாடி பாடி காதில் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தான். இதனிடையே செல்போனில் சார்ஜ் திர்ந்துவிட்டபடியால் என் மனைவியின் சகோதரனும், ஃபேன் ஓடாததால் என் தம்பி சதிஷ்(SATHESH)-ம் பேச்சில் கலந்து கொண்டனர்.

கிட்டதட்ட மூன்று மணி நேரம் பல விஷயங்களை குறித்து பேசினோம்,ஒருவரை ஒருவர் கலாய்த்தோம்.

அந்த நேரத்தில் கரன்ட் வந்துவிட எனது மனைவியின் சகோதரனும்,சிசிலனும் அவரவர் லேப்டாப்பில் அமர, மனைவியும்,அத்தை மகளும் TV முன் அமர,எனது தங்கையும்,சதிஷீம் எனது லேப்டாப்பில் கேமில் மூழ்கிவிட நான் மீண்டும் தனிமைபடுத்தபட்டேன்.

அப்புறம் என்ன செய்ய நானும் COMPUTER முன் அமர்ந்து ஏதோ.காம்ல் ஏதாவது எழுதலாம் என அமர்ந்தேன்.

என்ன தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லையே என நினைக்கிறீர்களா. நிறையவே தொடர்பு இருக்குங்க. ஞாயிற்றுக் கிழமையானால் கூட அனைவரும் அமர்ந்து பேசுவது என்பது கரண்ட் கட்டால் மட்டுமே நடக்கிறது. அப்புறம் ஆற்காட்டாருக்கு நன்றி சொல்லித்தானே ஆகவேண்டும்.


--- கி.கி.



Share/Bookmark
Read More!

வேட்டைக்காரன் பாடல்கள்

கடந்த வெள்ளிக்கிழமை, சிவகாசி செல்லும் பஸ். ஏதோ பாட்டு மெல்லிய இசையில் ஓடிக்கொண்டிருந்தது (அது வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைச்சீங்கன்னா தப்பு, அதான் மெல்லிசான்னு சொல்றேன்ல). நாம வழக்கம்போல ஜன்னல் வெளியே வேடிக்கை (அந்த இருட்டுக்குள்ள என்ன பாத்தன்னு கேக்கப்பிடாது, போற வர்ற வாகனங்களைப் பாத்துட்டு இருந்தேன்). சைடுல ஒருத்தர் திட்டுறது கேட்டது...

‘பிச்சக்காரப்பய, போடுறதுக்கு வேற பாட்டே கிடைக்கலயா இவனுக்கு?’
(இப்பவும் வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைக்க வேணாம்)

என்னடான்னு பாட்டக் கேட்டேன், கட்டிப்புடி கட்டிப்புடிடால
ஜிங்கு ஜிக்ச்சா... ஜிக்கு ஜக்க ஜிக்கு ஜக்க...
ஓடிட்டு இருந்தது. இதுக்கு எதுக்கு கோவப்படுறான்னு யோசிச்சுக்கிட்டே கேட்டுட்டு இருந்தேன்.அடுத்த பாட்டு,
மீண்டும் மீண்டும் வா, வேண்டும் வேண்டும் வா....’
நல்லாத்தான் இருந்தது. அடுத்து,
’ராத்திரி நேரத்துப் பூஜையில்... ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு....’
’ராக்கோழி கூவயில... ஹ்ஹா ஹ்ஹா ஹா...’

இப்படியே போய்கிட்டு இருந்தது (என்ன கேக்க வர்றீங்க...? ஆமா, பாக்கியராஜ் பாட்டுக்களும் வந்துச்சு). கொஞ்ச நேரத்துக்கு மேல நம்மளாலயும் கேக்க முடியல (எப்படித்தான் இப்படியே செலக்ட் பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியல). அப்படியே மொபைல்ல பாட்டு கேக்கலாம்னு எடுத்தேன், தம்பியோட மொபைல், போன வாரம்தான் என்கிட்ட குடுத்தான். உள்ள ஆதவனும், வேட்டைக்காரனும் மட்டும் இருந்தது. ஆதவன் ரொம்ப தடவ கேட்டுட்டதால, வேட்டைக்காரனைக் கேட்டுத்தான் பாப்போமேன்னு கேட்டேன். நல்லா இருந்துச்சோ இல்லையோ, நல்லா நேரம்போச்சு...

1)
குஸ்து ஆலமாக்கி மிஸ்மாத்தா சூமிக்காஸா ஸூ (உண்மையிலேயே இப்படித்தான் ஆரம்பிச்சது)
ஏலேலம்மோ..... (டம்க்கு டக்கு டம்க்கு டக்கு... )
என் உச்சி மண்டேல சுர்ருங்குதே
உன்ன நா பாக்கேல கிர்ருங்குதே
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குதே
ட்டர்ருங்குதே....

கைதொடும் தூரம் காச்ச வட
சக்கரையால செஞ்ச வட
என் பசி தீக்க வந்தவளே (உண்மையிலேயே வடன்னு சொல்றாங்களா இல்ல வளேன்னு சொல்றாங்களான்னு தெரியல, 10 தடவ கேட்டுட்டேன்)
சுந்தரி...யே....

தாவணி தாண்டி பாத்தவனே (நல்ல வேளை, கவிஞர் தூக்கின்னு எழுதல)
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
தந்திர..னே...

இப்படியே டமுக்கு டப்பா டமுக்கு டப்பானு நல்லா உள்ள வாங்கி சைடுல வுட்டு பின்னாடி வெளிய எடுத்து, குத்து குத்துன்னு குத்தியிருக்காங்க. டான்சுக்குன்னே போட்ட பாட்டா இருக்கும்.

இதுல வர்ற குத்து ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கு, என்ன பாட்டுன்னுதான் ஞாபகத்துக்கே வர மாட்டேங்குது.

2)
லமன்க்க்கிட்டுது லாமுமச்சா
என்ன ரஸ்ஸப்பானில ரஸ்மியத்தான்
பிரேன்னு சீக்குல ஷோமியல்லவ்
நன நானன்ன நானன்ன நானன..... அத்தானே அத்தானே.....
(சத்தியமா இதுவும் இப்படித்தான் ஆரம்பிச்சது...)
ஆ: கரிகாலன் காலப்போல கருத்துருக்குது கொழலு
பெ: கொழலில்ல கொழலில்ல தாஜுமஹால் நெழலு
ஆ: சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது உதடு
பெ: உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு...

ஹீரோ ஏதாவது சொல்ல, ஹீரோயின் அது இல்ல இதுன்னு கடைசி வரை சொல்லிட்டே இருக்காங்க. நல்லா இருக்கு. கிராமத்து இசை, தவில விட்டு தட்டிருக்காங்க, ட்க்ர்ர்ர், வ்ர்ர்ர்ர்ர்ர்யூம், ச்சல் ச்சல் சத்தமெல்லாம் கேட்டுட்டே இருக்கு. பாட்டக் கேக்கும்போது, அப்படியே கிராமத்து வயல்வெளியும், பேக்குரவுண்டுல சேல கட்டுன பொம்பளங்களும், வேட்டி கட்டின ஆம்பளங்களும் ஆடுறது, அப்றம் வைக்கோல், ஆடு, மாடு, கெழவி எல்லாம்  மனசுல அப்படியே ஓடுச்சு.

3)
லைட்டா மீசிக் ஸ்டார்ட் ஆகுது, கூடவே...ஹேய்....  ஹோய்... சத்தம்.
ஆரம்பிக்கும்போதே தெரிஞ்சு போச்சு, இதான்  இண்ட்ரோ சாங்கா இருக்கும்.

நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட...
(கன்பார்ம்)... அப்படியே போச்சு, இடையில ஒரு சிங்கம் வேற கொட்டாவி வுடுற சவுண்டு, லெப்டுல இருந்து ரைட்டுக்கு பாயுது...
.
.
.
வாழு வாழு, வாழ விடு
வாழும்போதே, வானைத் தொடு
வம்பு பண்ணா, வாளை எடு
வணங்கி நின்னா, தோளக் கொடு.
(அட நல்லாத்தான் இருக்கு)

கடைசியில ஒரு சின்ன பையன் வாய்ஸும் வருது. சின்னப் பசங்க படம்னு சொல்ல வாய்ப்பிருக்கு.

குத்துங்கடா குத்து
எங்கூட சேந்து குத்து....(நல்ல குத்துதான்)

4)
ஸ்ஸ்ஸூம்
க்கிய்யா (அப்டின்னு ஒரு வாய்ஸ், அப்றம் ஒரு மீசிக்..)
காலகீ மூவிய இப் ஹாமச் யூஹாவ்
காஸ் பெண்டியா போ கிம்மீய மாமு
வங்குபாரு ஜஸ் லுக்கிமீ ஸ்னீக்கர்ஸ்
மா கிரிடிட் கார்ட் ஹேவ் ரீல்லி கூல் ஃபீச்சர்ஸ்
(மறுபடியுமா...? திரும்ப ஒரு குத்து குத்தப் போறாங்களோன்னே கேட்டேன்)
ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே...
(அடங்... மெலோடியா? ஏனோ தெரியல, இது கேக்கும்போது ’இருபது கோடி நிலவுகள் கூடி’ பாட்டு ஞாபகத்துக்கு வருது)
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே...

நல்லாத்தான் எழுதியிருக்காங்க. காதல் பாட்டுன்னாலே வரிகள்லாம் சும்மா செதுக்கி வச்சிடுறாங்க. கண்டிப்பா காதலர்கள் கொஞ்ச நாளைக்கு இதத்தான் முனுமுனுப்பாங்க.

5)
ஸம்பரபர ஸிப்பட்டே ஸித்திஸ் ஸலபல கண்டா
லிம்ம ஸொப்பன ஸிந்தா ஹம்சா ஆலல கண்டா
ஹிப்பி ஸாலல கும்பா கப்பி ஸாலல கட்டே
ஓம் ஷாந்தி ஷாந்தி கீ...
(உண்மையிலேயே முடியல)

டன் டகெட டண்டண்டே டன் டகுட டன்
டன் டகெட டண்டண்டே டன் டகுட டன் (அய்யய்யோ இன்னொரு இண்ட்ரோவா)

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்கிது இடி இடிக்கிது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வர்றதப் பாத்து
 (இதாவது பரவாயில்ல)


கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்கிது துடி துடிக்கிது
நெல கொலையிது நெல கொலையிது
வேட்டக்காரன் வர்றதப் பாத்து
(இதக் கேட்டவொடனேதான் சிரிப்பு வந்துட்டு, படம் நல்லா இல்லன்னா இந்த பாராவ மட்டும் எடுத்த்டு விமர்சனமா போட்டுறலாம், இதோட விட்டாங்களா..)


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வர்றாம்பாரு வேட்டக்காரன்.
(இப்படி எடுத்துக்குடுத்துட்டே இருந்தா எப்டிங்னா?)


(நடுவுல ஒரு சாம்பில்)
போடு அடியப் போடு
போடு அடியப் போடு
ஆ: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கருனா
கோரஸ்: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கருனா
(போதுமா, இதுவும் செம குத்துதான். இளைய தளபதி எப்பல்லாம் நடக்குறாரோ இது பின்னாடி பாடும்னு எதிர்பாக்கலாம்)

---

ஒரு இண்ட்ரோ, ஒரு பிஜிஎம், ஒரு மெலோடி, ஒரு வில்லேஜ் அப்றம் ஒன்னு டான்ஸ்க்கு. பாட்டுக்களே செம மசாலாவா இருக்கு. கேக்கலாம்.

-ஏனாஓனா
(ஆதி அண்ணன் மன்னிக்கவும், பேரு சீக்கிரம் மாத்திடுறேன்)

Share/Bookmark
Read More!

தேன்கூடு - 2009/10/22

கூகுள் தகவல்கள்

கூகுள் க்ரோம் புதிய வசதிகளுடன் அருமையாக உள்ளது. வெற்றுப் பக்கத்தில், ஏற்கனவே திறந்த பக்கங்களின் சிறிய படங்கள் ஏற்கனவே தெரிந்ததல்லவா... இப்போது அவற்றை அருமையாக கையாளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூகுள் க்ரோமில் தீம்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இப்போது பிரபல ஆர்ட்டிஸ்ட்டுகள் உருவாக்கிய 95 தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே சென்று மாற்றிக்கொள்ளலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விசயம் - தீம் மாறும்போது க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

பாதுகாப்பான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது பற்றிய அருமையான வழிமுறைகளை இங்கே காணலாம் - கூகுள் டீமிலிருந்து.

---

சென்ற வார பதிவர் சந்திப்பு



படத்தில்: ஜனா, அவருடைய நண்பர் சீலன், அடலேறு, நிலாரசிகன்.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: ஏனாஓனா.
இடம்: பாலவாக்கம் கடற்கரை.

நம்மைத் தவிர மற்றவர் அனைவருமே இலக்கிய சிந்தனையாளர்கள் என்பதால், பேச்சு இலக்கியம் பற்றியே அதிகம் இருந்தது (கதை, கவிதை, ஹைக்கூ, எழுத்தாளர்கள் இப்படியே...). நமக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாததால் வெறும் கவனிப்பு மட்டுமே. இடையிடையே வெகுஜன கலப்பும் இருந்தது, நாம் பேசியதால்.

பாலவாக்கம் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் சொல்லுங்கள், அடுத்த முறை கூடும்போது தகவல் சொல்கிறேன்.

---

இந்த வார பதிவர் சந்திப்பு

பதிவர் வலைமனை சுகுமார் திருமணம் நேற்று இனிதே நடந்தது. பதிவர்கள் சிலர் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தோம்.



படத்தில்: அகநாழிகை பொன்.வாசுதேவன், கேபிள் சங்கர், முரளி கண்ணன், வண்ணத்துப்பூச்சி சூர்யா.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: (வழக்கம்போல)ஏனாஓனா.
இடம்: வில்லிவாக்கம், பாபா நகர் திருமண மண்டபம் ஒன்றில்.

இந்த பாபா நகர் தேடிக் கண்டுபிடித்ததே ஒரு பெரிய கதையாக எழுதலாம். ‘பாபாவைத் தேடி ஒரு பயணம்’ என்று தலைப்பு போட்டால் ஹிட்டு கண்டிப்பாக கூடும் என்று வண்ணத்துப்பூச்சியார் சொன்னது கூடுதல் சுவாரஸ்யம்.

இது ஒரு காதல் திருமணம். பல போராட்டங்களுக்கிடையே காதலியைக் கைப்பிடித்த சுகுமாருக்கு வாழ்த்துக்கள்.

மொய்யாக 4 பின்னூட்டம் எழுதி கவரில் வைத்துக் கொடுத்துவிடலாம் என்றார் முரளி கண்ணன், நான் ஒரு பதிவே போட்டு விடுகிறேன் என்றேன் (ஐய்யா, செலவு மிச்சம்).

படத்தை மீண்டும் பாருங்கள், நால்வரும் சீனியாரிட்டிப்படி வரிசையில் இருப்பதுபோல் தெரிகிறதா? (இடப் பக்கம் இருப்பவர்கள் மன்னிக்கவும்)

---

ஒரு SMS

நேத்து ஒரு கல்யாண வீட்டுக்குப் போனேன்.
ஜோடின்னா ஜோடி அப்படி ஒரு ஜோடிய என் வாழ்க்கையில பாத்ததே இல்ல.
அப்படி ஒரு அழகு.
அப்புறம் என்ன,
கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்.

---

கடைசியா ஒரு சொந்த சரக்கு

பொண்ணு கிடைத்தாலும்
புதன் கிடைக்காதாம்
கிடைத்தது என்னவோ
புதன்கள் மட்டுமே.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

பேரு வைக்கிறதுக்கு ஒரு அக்கப்போரா?

ஏற்கனவே வானவில் வந்த கதை உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். தெரியாதுன்னா இங்க போயி பாத்துக்குங்க.

அதுக்கப்புறம், அங்க பின்னூட்டத்துல கூட சிலபேர் சில தலைப்புகளை சிபாரிசு பண்ணினாங்க. அண்ணன் ஷங்கி என்சிலாடான்னு ஒரு ஐட்டத்த சொன்னாரு. விக்கில பாத்தா ஃப்ரூட் சாலட் மாதிரி தெரிஞ்சது. அப்றம் ஆதவன், இந்த பேரு ஏற்கனவே இருக்குன்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். அப்றம் ஜனா மனோரஞ்சிதம், இராகமாலிகா, பூந்தோட்டம், கூட்டாஞ்சோறு, பலதும் பத்தும், பழக்கூடை இப்படி வரிசையா பின்னிட்டாரு. சாம்ராஜ்ய ப்ரியன் கதம்பம்னு ஒன்னு சொன்னாரு. இதுல இன்னொரு முக்கியமான விசயம், கிரி அண்ணன் ஆ60மொ30 தொடர்ந்து படிக்கிறாராம்.

இதெல்லாம் பத்தி யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது... ஒரு பிரபல பதிவர் சாட்ல வந்தார். அவரும் நானும் இதப் பத்தி அலசி ஆராஞ்சு பாத்தத நீங்களும் பாருங்க...

பி.ப.1: ஏனோ ஓனோ, எங்கிட்ட ஒரு ஐடியா கேட்டிருக்கலாம்ல.... பேரு வைக்கிறாராம் பேரு
ஏனாஓனா: அட போய்யா, எந்த பேரு யோசிச்சாலும் யாராவது வச்சிருக்காங்க, நீ ஏதாவது சொல்லேன்.
பி.ப.1: இரு யோசிக்கிறேன்
ஏனாஓனா: தமிழ்ல சொல்லு
பி.ப.1: இதெல்லாம் முன்னாடியே கேட்டிருக்கனும்
ஏனாஓனா: அதுக்கு என்ன இப்போ? இந்த வாரத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு, இது ஏற்கனவே இருக்குன்னு இன்னொரு பதிவு போடலாம். மொத்தம் 2 பதிவுக்கு மேட்டர் கிடச்சுதுல்ல?
ஹி ஹி ஹி...
பி.ப.1: வாந்தி ஓக்கேவா?
ஏனாஓனா: அது ஏற்கனவே யோசிச்சேன்.. .வேணாம்.
பி.ப.1: ரைட்டு
ஏனாஓனா: ’ரைட்டு விடு’ - இது?
பி.ப.1: ஹிஹி
ஏனாஓனா: ஹி ஹி ஹி
பி.ப.1: தமிழ்ல இல்லையே
ஏனாஓனா: அட ஆம்மா...
பி.ப.1: பத்தியா நம்ம எது தமிழ் எது மற்ற மொழின்னு மறக்கற அளவுக்கு இருக்கு நம்ம தமிழ்
ஏனாஓனா: ஹ்ம்ம்ம்
பி.ப.1: வழக்கு தமிழ்
ஏனாஓனா: நீ பாடம் நடத்த ஆரம்பிச்சிடாத, மேட்டருக்கு வா.
பி.ப.1: பேசாம “தமிழ்”ன்னு வச்சிரு, கலப்படம் இருக்குல்ல
ஏனாஓனா: பேர கண்டிப்பா மாத்தனுமா?
பி.ப.1: இல்ல விடு. அவரும் என் நண்பர் தான். அதான் கேட்டேன், இளைய பல்லவன்.
ஏனாஓனா: கூட்டாஞ்சோறு...?
பி.ப.1: அதுவும் இருக்குய்யா
ஏனாஓனா: ம்ம்ம்ம்...
பி.ப.1: யாருன்னு ஞாபகம் இல்ல
ஏனாஓனா: கே.கு. - அப்டின்னு வச்சிடலாமா?
பி.ப.1: அதென்ன?
ஏனாஓனா: அது அவனவன் இஷ்டம்... என்ன தோனுதோ வச்சிக்கட்டும்
பி.ப.1: அசிங்கமா இருக்குமே
ஏனாஓனா: உனக்கு என்ன தோனுது?
பி.ப.1: அதே தான் தோணுது
ஏனாஓனா: ஹி ஹி ஹி...
பி.ப.1: ஹிஹி
ஏனாஓனா: சாக்கடைனு வைக்கலாம்னு பாத்தா.... வாந்தி மாதிரி இருக்கு...
சாக்கடை - நாத்தம் - னு நீயே பின்னூட்டம் போடுவ...
பி.ப.1: கண்டிப்பா
ஏனாஓனா: ம்ம்ம்... ’அத்தப்பூ’?
பி.ப.1: மாமியார்பூ கூட வைப்ப போல
ஏனாஓனா: அதென்னப்பா மாமியார்பூ? கெட்ட வார்த்த மாதிரி இருக்கு!
பி.ப.1: யோவ் நீ அத்தைப்பூன்னு வைக்கும் போது அதுவும் வைக்கலாம்ல?
ஏனாஓனா: இது அத்தப்பூய்யா... கேரளால போடுவாங்கள்ல...
பி.ப.1: ஓ அதுவா, நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்
ஏனாஓனா: அடங்... சரி... இது கேரளா... அதுவும், ரொம்ப சாப்டா இருக்கு, லேடீஸ் இந்தப் பேர வச்சிக்கலாம்...
நமக்கு நல்லா, டெர்ரரா இருக்கனும் பேரு...
பி.ப.1: ம்... யோசிப்போம்
ஏனாஓனா: என்னல்லாமோ தோனுது...
தலைப்பில்லா
தலைப்பின்மை...
முண்டம்
பி.ப.1: அவ்வ்வ்வ்
ஏனாஓனா: வாய்க்கொழுப்பு
பி.ப.1: ரெஸ்ட் எடுய்யா
ஏனாஓனா: ஹி ஹி ஹி...
பி.ப.1: உடம்பு சரியில்லைன்னு தோனுது
ஏனாஓனா: நேரடியா சொல்ல வேண்டியதுதான... மெண்டல்னு சொல்ல வர்றியா?
”மூக்க ஒடச்சிடுவேன்”...
பி.ப.1: ச்சீ சீ என் வாயால அப்படி சொல்லுவேணா
ஏனாஓனா: அதான் மாத்தி சொன்னியாக்கும்...?
கடல்
?
சங்கமம்?
பி.ப.1: அந்த பழனி முருகன் சிலை எதால செஞ்சது?
நவ பாசானம்?
ஏனாஓனா: ஓஹோ...
பி.ப.1: ஆனா ஒன்பது மேட்டர் வேணூம்
ஏனாஓனா: அது கொஞ்சம் அதிகமா இருக்குய்யா... அதான்...
வானவில்னா 7ஓட முடிஞ்சு போகும்
பி.ப.1: ம், ஐஸ் பிரியாணி? பழைய சோறு தான் அப்படி சொன்னேன்...
ஏனாஓனா: ஐஸ்? தமிழா?
ஏனாஓனா: ’அட போடாங்’
ஏனாஓனா: அப்டின்னு வச்சிடலாமா?
பி.ப.1: அட போய்யாங்... ‘கழனி மண்டி’?
ஏனாஓனா: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
எரும மாடு... அப்டின்னு பின்னூட்டம் வரும்...
பி.ப.1: யோவ் அதுல தான்யா எல்லாமே இருக்கும்
ஏனாஓனா: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அதுக்காக... சாக்கடைல கூட எல்லாம் இருக்கும்....போய்யாங்...
பி.ப.1: யோவ் கால்நடைக்கு தீவனம்யா அது, சாக்கடையோட கம்பேர் பண்ணாத
ஏனாஓனா: அது சரி, அவனவன் மனுச தீனி பேரு வச்சிருக்கான்...
பி.ப.1: ஹிஹிஹி
ஏனாஓனா: அதுக்கு நாம இப்படியா வைக்கிறது...?
பி.ப.1: ஜிகர்தண்டா?
ஏனாஓனா: அது எப்பிடி பண்ணூவாங்க? அதப் பத்தி ஒன்னும் தெரியாதே...
பி.ப.1: மதுரையில இருக்கும்
ரெண்டு மூனு பொருளை போட்டு பண்ணுவாங்க. ஜில்லுன்னு டேஸ்டா இருக்கும்
ஏனாஓனா: ஏற்கனவே இருக்கு...
பி.ப.1: quarter matter..?, quarter quarteraa matter..? தமிழ்ல வேணும்னு அடம்பிடிக்காத
ஏனாஓனா: அது மானிட்டர் பக்கங்கள் மாதிரி இருக்கே....
பி.ப.1: ம்ம்ம்ம்... மகாமகம்?
ஏனாஓனா: அதென்னய்யா மகாமகம்... ஏதோ திருவிழா மாதிரி இருக்கு?
பி.ப.1: ம் அதே தான், ஒன்னு கூடுற இடம்
ஏனாஓனா: ம்ம்ம்... சந்தை...?
பி.ப.1: பல சரக்கு?
ஏனாஓனா: சூப்பர்...அது பலசரக்கு
பி.ப.1: தெரிஞ்சு தான் ஸ்பேஸ் விட்டேன்
ஏனாஓனா: ம்ம்ம், சூப்பரா இருக்கு, அடுத்த பதிவு ரெடி... நாம பேசுனதுதான் பதிவு... தலைப்பு - ‘வானவில் கோனவில்லான கதை’
பி.ப.1: ஹிஹி, என்னமோ பண்ணு
ஏனாஓனா: அதுவும் இருக்குய்யா... :(
பி.ப.1: அவ்வ்வ்வ் :(
ஏனாஓனா: பேசாம ’ங்கொய்யால’ன்னு வைக்கப்போறேன் பாரு, எல்லாத்தையுமே யோசிச்சுடுறானுவ...
பி.ப.1: யோவ் அது கெட்ட வார்த்தையா
ஏனாஓனா: அது வேறயா...
பி.ப.1: ஆமா
ஏனாஓனா: அவ்வ்வ்வ்வ்....
பி.ப.1: முத்தமிழ்? மூனு மேட்டர் தான் சொல்லமுடியும்
ஏனாஓனா: கொஞ்சம் ஓவரா தெரியல?
பி.ப.1: அதெல்லாம் இல்ல, மூனுமே ஒவ்வொரு ஊர் ஸ்லாங்ல சொல்லு
ஏனாஓனா: இல்லன்னா... சதுரம்னு வச்சு நாலு மேட்டர் சொல்லிடலாம்...
பி.ப.1: வட்டம் வச்சு நிறைய மேட்டரே சொல்லலாமே :)
ஏனாஓனா: ஹி ஹி ஹி.... வாழ்க்கை ஒரு வட்டம்டா....
பி.ப.1: தத்துவம்ம்ம்ம்
ஏனாஓனா: அஞ்சரப் பெட்டி
பி.ப.1: அஞ்சரப்பெட்டி இருக்கு
ஏனாஓனா: ம்ம்ம்ம்... ஆரரைப் பெட்டி? ஹி ஹி ஹி...
பி.ப.1: ங்கொய்யால
பி.ப.1: ’என்னமோ ஒன்னு'?
ஏனாஓனா: ஐ, ’ஏதோ ஒன்னு’
பி.ப.1: ஏதோ ஒன்னு, என்னமோ ரெண்டு?
ஏனாஓனா: அட, கொஞ்சம் பெருசா இருக்கே...
பி.ப.1: சுருக்கு
ஏனாஓனா: ஒன்னு ரெண்டு மூனு
பி.ப.1: ஊர் வாய்க்கு அவல்?
ஏனாஓனா: என்னய்யா இது வாய்க்கரிசிதான் ஞாபகத்துக்கு வருது...
பி.ப.1: அவ்வ்வ்வ்
ஏனாஓனா: பஞ்சாயத்து?
பி.ப.1: தீர்ப்பா சொல்ல போற?
ஏனாஓனா: ஹி ஹி ஹி.... நல்லா யோசிச்சு வை... கொஞ்ச நேரத்துல வறேன்...
பி.ப.1: சரி

அப்பப் போனவருதான், அதுக்கப்புறம் ஆன்லைன்ல வரவே இல்ல. என்ன நெனச்சாரோ தெரியல?!

---

அப்றம் இன்னொரு பிரபல பதிவர் சில தலைப்புகளை மெயில்ல அனுப்பினார்.
இப்போ பி.ப. பார்ட் 2

வறுத்த கடலை
தேனீ
வடகறி
சரிகம பதநி
சூடா போண்டா
சுண்டல்
இதுதான் லிஸ்ட். நான் கேட்டேன்,

ஏனாஓனா: ஹா ஹா ஹா... என்னா இதெல்லாம்... ?
பி.ப.2: வானவில்லுக்கு தலைப்பு
ஏனாஓனா: நல்லது, கலவையான ஐட்டமா இருக்கனுமே...இப்படி ஏதாவது சொல்லிட்டே இருங்க.. ஏதாவது சிக்கும்... ம்ம்ம், பாக்கலாம்...
பி.ப.2: கென்டகி சட்னி, மகரந்தம்?
ஏனாஓனா: கெண்டகி? அப்டின்னா?
பி.ப.2: தெரியாது, ஆனா இது ஒரு மிக்ஸ்டு சட்னி
ஏனாஓனா: ஓஹோ... எந்த ஊரு ஐட்டம் இது?
பி.ப.2: நாலு வருடங்களுக்கு முன் 'ஆனந்த விகடன்'ல் பார்த்தது. "கெண்டகி சட்னி" என்ற பெயரில் யூகி சேது எடுக்கப் போவதாக சொல்லி இருந்தார். அவர் சொன்னது தான் அந்த அர்த்தம்.
ஏனாஓனா: ஓஹோ.... விசாரிச்சுப் பாக்குறேன்... நல்ல பேரு, நன்றி

---

அப்புறம் இன்னோரு பிரபல பதிவர் போன்ல வந்தாரு...

பி.ப.3: என்னப்பா பண்ற?
ஏனாஓனா: சும்மா யோசிச்சுட்டு இருக்கேண்ணே, இன்னும் தலைப்பு கிடைக்கல, உங்களுக்கு ஏதாவது கெடச்சுதா?
பி.ப.3: நானா இருந்தா இப்படில்லாம் வைப்பேன், நீ வைக்க மாட்டியே...
ஏனாஓனா: பரவால்ல சொல்லுங்க, அப்படி என்னதான் சொல்றீங்கன்னு பாப்போம்...
பி.ப.3: ஜில்பான்ஸி, கில்மா...
ஏனாஓனா: என்னது கில்மாவா? அப்டின்னா?
பி.ப.3: யாருக்குத் தெரியும்... ஃபிகரையும் கில்மான்னுதான் சொல்றாங்க, சரக்கையும் கில்மான்னுதான் சொல்றாங்க... கில்மாவான ஐட்டம் எல்லாத்தையுமே கில்மான்னுதான சொல்றாங்க...
ஏனாஓனா: அதுசரி. அப்றம் ஜலபுலஜங்ஸ விட்டுட்டீங்களே.
பி.ப.3: சொன்னா மட்டும் வச்சுறப் போறியா?
ஏனாஓனா: இதெல்லாம் நமக்கு சரிவராதுண்ணே. நான் பலது யோசிச்சேன். நவபாசானம் எப்படி இருக்கு?
பி.ப.3: யோவ் அது விஷம்யா.
ஏனாஓனா: அது வேறயா? பல்நவீனத்துவம்?
பி.ப.3: ???? என்னது?
ஏனாஓனா: ச்சும்மா... கேக்க புதுசா நல்லா இருக்குல்ல... இதக் கேளுங்க. ’கலக்கல்’ - ஏதோ டாட் காம்ல எவனோ ஒருவன் எழுதும் கலக்கல் பதிவுகள் - இத தெரியாதவன் கேட்டா குழம்பிப் போயிருவான்ல...
பி.ப.3: ஆமா, இன்னைக்கி எவ்வளவு அடிச்ச?
ஏனாஓனா: அட போங்கண்ணே, இன்னிக்கி நோ சரக்கு.
பி.ப.3: அடிக்காமலேயே இவ்ளவு பேசுறியா? உனக்கு கடைசி வரை தலைப்பே கிடைக்காது பாரு.
ஏனாஓனா: ஙே....

---

அதுக்கப்புறம் பி.ப.4, பி.ப.5... கதையெல்லாம் வேணாம். உங்களை இதுக்கு மேல சோதிக்க விரும்பல. கடைசியா ஒரு பூவைப் பார்த்தப்போ தோனினதுதான் ’தேன்கூடு’. ரொம்ப பொருத்தமா இருந்தது (எப்படிங்கிற மொக்கை அடுத்த பதிவில்). வேற யாராவது இந்த தலைப்புல கலவைப் பதிவு எழுதுறாங்களானு கூகுள்ல தேடிப்பாத்தேன். தேன்கூடுன்னு ஒரு திரட்டி இருந்தது மட்டும் தெரியுது, கலவை யாரும் எழுதுற மாதிரி தெரியல.
உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க, ப்லீஸ்.

---

பெஸ்கியின் டிஸ்கி: பி.ப.1 - ஆதவன், பி.ப.2 - சாம்ராஜ்ய ப்ரியன், பி.ப.3 - கேபிள்ஜி, பி.ப.4 - அடலேறு, பி.ப.5 - நிலாரசிகன், பி.ப.6 - ஜனா. பேரு வைக்க அக்கப்போர் பண்ணின, பண்ண முயற்சி பண்ணின இவங்களுக்கு நன்றிகள்.
அப்றம் முதல் பத்தியில இருக்குறவங்களுக்கும் நன்றிகள்.

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

வானவில் - 2009/10/12

கொத்துபரோட்டா, பஞ்சாமிர்தம், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், காக்டெயில், மிக்ஸர், மானிட்டர் பக்கங்கள், அவியல், குவியல், டரியல், என்’ணங்கள், டிபன் (இட்லி, வடை, பொங்கல்....), மிக்ஸ்டு ஊறுகாய், மிக்ஸ்டு ஃப்ரைடு ரைஸ்  இப்படி பல பேர் பல தலைப்புல கலவைப் பதிவுகளை எழுதுறாங்க. நான் கூட எழுதிட்டுதான் இருக்கேன் (உண்மையாத்தான்), அது எத்தன பேருக்குத் தெரியும்னு தெரியல. ஆக்கம் 60 நாள் மொக்கை 30 நாள் - எங்கையோ பாத்த தலைப்பு மாதிரி இருக்கா? இதுதான் நம்ம கலவைப் பதிவின் தலைப்பு, நேத்து வரைக்கும் (இதுக்கு அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுக்கனும்னா தனியா காண்டாக்ட் பண்ணுங்க (போன் பண்ணப் போறவங்களுக்கு இன்னோனு - உங்க தலையெழுத்து(இதுதான் பிராக்கெட்டுக்கே பிராக்கெட் போடுறது))).

திடீர்னு ஒரு சந்தேகம், நேத்து வீட்டுக்குப் போற வழியில. நம்ம கலவைப் பதிவு நல்லா ரீச் ஆகல போல இருக்கேன்னு! காரணம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணிப் பாத்தா தலைப்பும் ஒரு காரணமா இருக்குமோன்னு தோணுச்சு. சரி, தலைப்பை மாத்தி வச்சுடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். வேற தலைப்பு என்ன வைக்கலாம்? (மொக்கைனு வைய்டா மொக்கைனு சொல்றீங்களா? கவலப்படாதீங்க, அது லேபில்ல கண்டிப்பா இருக்கும்) ’ஏதேதோ’னு வைக்கலாமா, நம்ம தளத்தோட பேருக்குப் பொருத்தமா இருக்கும் அப்டின்னு தோனுச்சு. ஆனா, மத்த பிரபல பதிவர்களோட தலைப்புகளை எல்லாம் பாத்தா ஏதோ ஒன்னு ஸ்டிரைக் ஆச்சு... எல்லாமே வாய்க்குள்ள போறதாவே இருக்கே! (என்’ணங்களை கணக்குல எடுக்கல) அப்போ நாமலும் ஒரு (சாப்பிடுற) ஐட்டத்தோட பேர  தலைப்பா வச்சிடலாம்னு முடிவு பண்ணி, அப்படியே யோசிக்க ஆரம்பிச்சேன் (திரும்பவும்).

பஞ்சாமிர்தம், கொத்துபரோட்டா, மிச்சர் - இந்த மாதிரி மிக்ஸிங் ஐட்டமா இருக்கனுமேன்னு யோசிச்சு யோசிச்சுப் பாத்தேன். கடைசியில நம்ம மூளைக்குள்ள ஓடுன தலைப்புதான் - பழரசம்.

இது சின்ன வயசுல நம்ம ஊரு ஃபேவரிட் ஐட்டம். ஒரு ரூபாய்க்கு ஒரு கண்ணாடி கிலாஸ் நெறையா கெடைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், அன்னாச்சி, கொய்யா... இப்படி கைல கெடைக்கிறத எல்லாம் மொத்தமா போட்டு அடிச்சி வச்ச்சிருப்பாங்க. சிகப்பு கலர்ல இருக்கும். வாங்கி குடிச்சா வயிறு நெறைஞ்சே போகும். நாம 25 காசு குடுத்து பாதி கிலாஸ்ல குடிக்கிறது வழக்கம் (அப்போ ஒரு நாள் பாக்கெட் மனி அவ்ளோதான்). வீட்டுல இதெல்லாம் வாங்கி குடிக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா மிச்சம் இருக்குற பழைய பழங்களைப் போட்டுத்தான் இது பண்றாங்கங்கிறது அவங்களோட எண்ணம். நாம இதெல்லாம் கண்டுக்கிறது இல்ல (இப்ப குடிக்கிற ஐட்டம் வரைக்கும் இதே கததான்).

சென்னை வந்து ஒரு ரெண்டு வருசத்துக்கு அப்புறம் (ஒன்னா ரெண்டா, ஒழுங்கா சொல்லுன்னு கமண்டு போடாதீங்க, ஒரு ஃப்லோல வருது) திரும்பவும் இது குடிக்க ஆசப்பட்டு, ஒரு கடைக்கிப் போயி கேட்டேன். கடக்காரன் நம்மள மொறச்சுப் பாத்தான். என்னடான்னு யோசிக்கிறதுக்குள்ள கூட இருந்த நம்ம மச்சி ஒருத்தன் ’ரெண்டு பழரசம்’ அப்டின்னான். நான் கேட்டது ‘ரெண்டு ஃப்ரூட் ஜூஸ்’.

நல்ல பேரு ஒன்னு கெடச்சிடுச்சுன்னு நெனச்சிட்டு இருக்கும்போது, ஒரு பிரபல பதிவரிடம் கருத்துக் கேக்கலாமேன்னு தோனுச்சு. நமக்குத் தெரிஞ்ச பிரபலம் ஒருத்தருக்கு போன் பண்ணி கேட்டேன். இது நல்லா இல்லன்னு சொல்லிட்டாரு (உங்க ஊருலதான் இப்படி, மத்தவங்களுக்கு பழரசம்னா ஒரு பழத்தோட ஜூஸ்னுதான் தோனும் என்பது விளக்கம்). வேணும்னா ஃப்ரூட் சாலட்னு வைச்சுகோன்னு சொன்னார். இல்ல, நான் தமிழ்லதான் வைப்பேன்னு சொன்னேன். எக்கேடும் கெட்டுப்போன்னு விட்டுட்டாரு.

இப்ப திரும்பவும் யோசன... ரொம்ம்ம்ம்ம்ப யோசிச்சப்றம், மிச்சம் மீதி இருக்குற ஐட்டத்தத்தான எழுதுறோம், அப்போ இட்லி உப்புமான்னு வைக்கலாமா? இல்லை. சரி டஸ்ட் பின், வேணாம் இங்லீஸ், அப்போ குப்பைத்தொட்டி; ஆதவன் கோபத்துக்கு ஆளாக வேணாம். மிச்ச சொச்சம்... ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு. இதையே வச்சிடலாம்னு முடிவு பண்ணியாச்சு.

இவ்ளோ யோசிச்சு என்ன பிரயோஜனம்? கடைசியில யோசிக்காமலேயே தோனின ஒன்னுதான் தலைப்பா போச்சு. துணிதுவைக்கும்போது தண்ணியெல்லாம் தெரிச்சு, வானவில் மாதிரி தெரிஞ்சது. அட, வானவில் நல்லா இருக்குமேன்னு, அந்த பிரபலத்த திரும்பவும் கூப்பிட்டுக் கேட்டேன். ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. ரைட்டு.

சரி, அதெல்லாம் இருக்கட்டும், மேட்டருக்கு வான்னு ’நீ ஆதவன்’ கூவுறது கேக்குது. இதான் மேட்டரு. இனி ஆ60மொ30 - வானவில்னு மாறப் போகுது, உங்க மனச கொள்ளை அடிக்கப் போகுது. (கொஞ்சம் ஓவரா போறமோ?) யாராவது இந்தப் பேருல எழுதிட்டு இருந்தா, தயவு செஞ்சு சொல்லிருங்க, அப்பிடின்னு சொல்லுவேன்னு மட்டும் எதிர்பாக்க வேணாம். தயவு செஞ்சு நீங்க பேர மாத்திக்குங்க, ரொம்ப யோசிச்சு, ஒரு பதிவு வேற போட்டுட்டேன் (இதுல பதிவு போட்டது பெருசா, நீ யோசிச்சது பெருசான்னு கேக்காதீங்க).

 ----

இந்த வானவில்அறிமுகப் வானவில்லாக இருப்பதால் இதுக்கு மேல மேட்டர் இல்ல. என்னது? ஏதாவது சொல்லனுமா? சரி.
டெம்ப்லேட் மாத்திட்டேன் (அதான் தெரியுதே, இது ஒரு மேட்டரான்னு அவசரப்பட வேணாம்). உங்களுக்கும் டெம்ப்லேட் மாத்த உதவி தேவைனா, தாராளமா தொடர்புகொள்ளலாம். ஃபிரீயாய் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பா செய்து தருகிறேன்.(இது ச்சும்மா... செஞ்சு குடுடான்னு அடம் பிடிச்சீங்கன்னா செஞ்சு குடுத்துருவான் இந்த ஏனாஓனா, அவ்ளோ நல்ல மனசு).

பெஸ்கியின் டிஸ்கி 1: இந்தப் பதிவுல அதிகமா (பிராக்கெட்) இருக்குதேன்னு தோனுதா? அதுக்கு நா ஒன்னும் செய்ய முடியாது.
பெஸ்கியின் டிஸ்கி 2: மொதல்ல ஒன்னுன்னு போட்டுட்டேன்... ஆனா உண்மையிலயே ரெண்டாவது இல்ல. (இதுக்கு மொதல்ல 1 போடாமலேயே இருந்திருக்கலாமோ?)

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - செப்18

தகவல்கள்

* Gmail ல ஏற்கனவே பல தீம்கள் வந்திருப்பது நமக்குத் தெரிந்ததே... இப்போது Random Themes வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு Theme ல் gmail உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இங்கு, உங்களுக்குப் பிடித்தமான Theme கலை மட்டும் தேர்வு செய்யும் வசதி இல்லை.

* அடுத்து மிகவும் நான் எதிர்பார்த்த ஒன்று. Wordpress ல் மிகவும் நீளமான பதிவிற்கு Read More கொடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம், முகப்புப் பக்கம் நீளமாக இருப்பதைத் தவிர்க்க முடியும். இந்த வசதி இப்போது நமது Blogger லும் வந்துவிட்டது.  இது போல...


Share/Bookmark
Read More!

ஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்






தற்போதைய தோற்றம்
நீங்கள் இங்கே பார்க்கும் ஈஃபிள் கோபுரத்தைப்பற்றி ஏற்கனவே நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் எனக்குத்தெரிந்த சில விஷயங்களையும்,இதன் உருவாக்கத்தின் போது எடுத்த சில அரிய புகைப்படங்களையும்., உங்களுடன் பகிர்கிறேன்.

பொறியாளர் (Gustave Eiffel) கஸ்ற்றேவ் ஈஃபிள் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில்(Seine)ஸெயின் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த உலோக கோபுரம்.உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோபுரம் இதன் பொறியாளரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் அதுவும் நம் தமிழ் நாட்டில் நமது வரிப்பணத்தில் ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டால், அது யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதோ அவரால் கட்டப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 1.5 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். அதன் பின் ஆட்சி மாறினால் இவரால் புனரமைக்கப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 3 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். ஒரு வேளை இனி ஆட்சி மாறினால் மீண்டும் புனரமைக்கப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 6 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் . அப்படியில்லாமல் பொறியாளரின் பெயர் பத்திரிகை செய்தியில் வந்தால் அது 8-வது அதிசயம்.சரி சரி அதெல்லாம் நமக்கெதற்கு நாம் ஈஃபிள் கோபுரத்தின் கட்டுமான தகவல்களைக் குறித்து பார்ப்போம்.

1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889,மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் (lift)பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.





1888ஏப்ரல்

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 டன்னுக்கும் கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை(paint) பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சென்டி மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈஃபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.

(என்ன அநியாயம் இது 20 ஆண்டுகள் என்று சொல்லி 120 ஆண்டுகள் ஒன்றும் ஆகாமல் இருப்பதெல்லாம் கட்டுமானக்கலையா?! நம் டெல்லி மேம்பாலம் போல் கட்டும்போதே இடிந்து வீழ்வது அல்லவா கட்டுமானக்கலை)

ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.

1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியூ யோர்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.

அடொல்ப் ஹிட்லர், [[இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது




1888 டிசம்பர்







1889மேய்


நான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது என் மனைவி பார்த்துக்கொண்டிருந்தாள். அவங்களுக்கு ஈஃபெல் கோபுரத்தைப்பற்றி விளக்கினேன் பின் கூகுள் மேப் ஓப்பன் பண்ணி street view-ல் கோபுரத்தின் அட்டகாசமான கட்டுமானத்தைக் காட்டினேன். பின் இது போல் பிரதிகள்(மாடல்) வேறு இடங்களில் இருப்பதைக் குறித்தும் கூறினேன்.

அதுதான் பிரச்சினை ஆகிவிட்டது. எனக்கு ஒரு பிரதி கோபுரத்தையாவது காட்டித்தாருங்கள் என கேட்கத்தொடங்கினாள். வேறு வழியில்லை என்பதைத்தெரிந்து, உடனே விமானம் எதுவும் கிடைக்காததால் என்னுடைய 2 சக்கர விமானத்தில் புறப்பட்டு கோவை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள ஈஃபெல் கோபுரத்தைக் கான்பித்தேன்.

அந்த கோபுரம் உங்கள் பார்வைக்கு


அதோடு நின்றுவிடவில்லை “இதமாதிரி ரொம்ப சின்னதா ஒண்ணு நமக்கு வாங்கினால் நல்லாயிருக்கும்” என இழுத்தாள். உடனே நான் ஒண்ணு என்ன 2-டாக கட்டி விடுவோம் எனக்கூறினேன். அப்புறம் சும்மா விடமாட்டங்களே. நச்சரிப்பு தொடர்ந்தது. வேறு வழியில்லாமல் அதற்கான தளவாடங்கள் வாங்கினேன் . மொத்தம் 0.000000001 டன் எடை இருந்த்தது. விலை 0.000000015 மில்லியன் ஆனது ,அதை வைத்து பணிகளை துவங்கினேன்.பணிகளை துவங்கியது 02.09.09 அன்று. அன்றே முடித்துவிட்டேன் தனி ஆளாக.

தளவாடங்கள்
படிப்படியாக

நேர் பார்வையில்

கட்டி முசிந்த பின்

கட்டும்போது மேல் பார்வையில்








என் வேலை முடிந்த பின் என் சகதர்மிணியை அருகில் விட்டு ஒரு போட்டோ எடுத்தேன்

அதன்பின் அவைகளை எடுத்து கையில் 2-ம் உனக்குத்தான் என கொடுத்தபோது
முகத்தில் தெரிந்த புன்சிரிப்பு ஒரு க்ளிக்






---கி.கி

பி.கு:-
இன்னும் சில ஒரிஜினல் படங்களும் சில விஷயங்களும் கைவ்சம் உள்ளன .

உபயம்:-

ஒரிஜினலுக்கு விக்கிப்பீடியா

பிரதிகளுக்கு சுட்டி விகடன்





Share/Bookmark
Read More!