Showing posts with label போட்டோ. Show all posts
Showing posts with label போட்டோ. Show all posts

ஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்






தற்போதைய தோற்றம்
நீங்கள் இங்கே பார்க்கும் ஈஃபிள் கோபுரத்தைப்பற்றி ஏற்கனவே நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் எனக்குத்தெரிந்த சில விஷயங்களையும்,இதன் உருவாக்கத்தின் போது எடுத்த சில அரிய புகைப்படங்களையும்., உங்களுடன் பகிர்கிறேன்.

பொறியாளர் (Gustave Eiffel) கஸ்ற்றேவ் ஈஃபிள் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில்(Seine)ஸெயின் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த உலோக கோபுரம்.உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோபுரம் இதன் பொறியாளரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் அதுவும் நம் தமிழ் நாட்டில் நமது வரிப்பணத்தில் ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டால், அது யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதோ அவரால் கட்டப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 1.5 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். அதன் பின் ஆட்சி மாறினால் இவரால் புனரமைக்கப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 3 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். ஒரு வேளை இனி ஆட்சி மாறினால் மீண்டும் புனரமைக்கப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 6 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் . அப்படியில்லாமல் பொறியாளரின் பெயர் பத்திரிகை செய்தியில் வந்தால் அது 8-வது அதிசயம்.சரி சரி அதெல்லாம் நமக்கெதற்கு நாம் ஈஃபிள் கோபுரத்தின் கட்டுமான தகவல்களைக் குறித்து பார்ப்போம்.

1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889,மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் (lift)பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.





1888ஏப்ரல்

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 டன்னுக்கும் கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை(paint) பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சென்டி மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈஃபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.

(என்ன அநியாயம் இது 20 ஆண்டுகள் என்று சொல்லி 120 ஆண்டுகள் ஒன்றும் ஆகாமல் இருப்பதெல்லாம் கட்டுமானக்கலையா?! நம் டெல்லி மேம்பாலம் போல் கட்டும்போதே இடிந்து வீழ்வது அல்லவா கட்டுமானக்கலை)

ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.

1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியூ யோர்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.

அடொல்ப் ஹிட்லர், [[இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது




1888 டிசம்பர்







1889மேய்


நான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது என் மனைவி பார்த்துக்கொண்டிருந்தாள். அவங்களுக்கு ஈஃபெல் கோபுரத்தைப்பற்றி விளக்கினேன் பின் கூகுள் மேப் ஓப்பன் பண்ணி street view-ல் கோபுரத்தின் அட்டகாசமான கட்டுமானத்தைக் காட்டினேன். பின் இது போல் பிரதிகள்(மாடல்) வேறு இடங்களில் இருப்பதைக் குறித்தும் கூறினேன்.

அதுதான் பிரச்சினை ஆகிவிட்டது. எனக்கு ஒரு பிரதி கோபுரத்தையாவது காட்டித்தாருங்கள் என கேட்கத்தொடங்கினாள். வேறு வழியில்லை என்பதைத்தெரிந்து, உடனே விமானம் எதுவும் கிடைக்காததால் என்னுடைய 2 சக்கர விமானத்தில் புறப்பட்டு கோவை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள ஈஃபெல் கோபுரத்தைக் கான்பித்தேன்.

அந்த கோபுரம் உங்கள் பார்வைக்கு


அதோடு நின்றுவிடவில்லை “இதமாதிரி ரொம்ப சின்னதா ஒண்ணு நமக்கு வாங்கினால் நல்லாயிருக்கும்” என இழுத்தாள். உடனே நான் ஒண்ணு என்ன 2-டாக கட்டி விடுவோம் எனக்கூறினேன். அப்புறம் சும்மா விடமாட்டங்களே. நச்சரிப்பு தொடர்ந்தது. வேறு வழியில்லாமல் அதற்கான தளவாடங்கள் வாங்கினேன் . மொத்தம் 0.000000001 டன் எடை இருந்த்தது. விலை 0.000000015 மில்லியன் ஆனது ,அதை வைத்து பணிகளை துவங்கினேன்.பணிகளை துவங்கியது 02.09.09 அன்று. அன்றே முடித்துவிட்டேன் தனி ஆளாக.

தளவாடங்கள்
படிப்படியாக

நேர் பார்வையில்

கட்டி முசிந்த பின்

கட்டும்போது மேல் பார்வையில்








என் வேலை முடிந்த பின் என் சகதர்மிணியை அருகில் விட்டு ஒரு போட்டோ எடுத்தேன்

அதன்பின் அவைகளை எடுத்து கையில் 2-ம் உனக்குத்தான் என கொடுத்தபோது
முகத்தில் தெரிந்த புன்சிரிப்பு ஒரு க்ளிக்






---கி.கி

பி.கு:-
இன்னும் சில ஒரிஜினல் படங்களும் சில விஷயங்களும் கைவ்சம் உள்ளன .

உபயம்:-

ஒரிஜினலுக்கு விக்கிப்பீடியா

பிரதிகளுக்கு சுட்டி விகடன்





Share/Bookmark
Read More!

சில க்ளிக்குகள்

ஜெ மாம்ஸ், ஊருக்குப் போனேன்னவொடனே புரோட்டாப் பதிவு கேட்டார். இந்த தடவை போன தடவைய விட நல்லா சாப்டேன். ஆனா போட்டாதான் எடுக்கல. இருந்தாலும் நம்ம அதிதீவிர புரோட்டா கொலவெறி ரசிகர் கேட்டதால இந்த போட்டோ:

இது புரோட்டா + சுக்கா.
ஒரு போட்டாவுக்கு ஒரு பதிவா? அதனால கூடவே இதெல்லாம் சேத்துக்கறேன்...


நம்ம ஊருல்லல்லாம், ஹோட்டலுக்கு வெளியதான் அடுப்பே இருக்கும். அதைக் கடந்துதான் உள்ளே சாப்பிடப் போகனும். நம்ம ஊருல புரோட்டா அடிக்கிற அழகையும், டண்டக்க டண்டக்க டண்டக்கன்னு கொத்துற அழகையும் இங்க பாக்க முடியல.


கிகி வீட்டுக்கு போற வழில, பாக்க அழகா இருந்ததால க்ளிக்கிட்டேன்.


கிகி தந்த சிக்கன் வகைகளில் ஒன்று.


புரோட்டா மட்டுமல்ல, இட்லி கூட நம்ம ஊருக்குப் போனாதான். இந்த தடவ நம்ம நாயக்கர் கடைக்கு ஒரு விசிட் அடிச்சாச்சு. சுவையில் மாற்றமே இல்லை, ஆனால் கடையில்... நாயக்கர் கல்லாவுக்கு போய்ட்டாரு, அவர் பையன் கல்லுக்கு வந்துட்டான்.


நம்ம ஊருக்கு வெளிய வந்துட்டா இப்படித்தான் இருக்கும். ‘நீ எரும மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ அப்டின்னு அப்பா திட்டுறத சாதாரணமா நம்ம ஊருல கேக்கலாம். இங்க எரும மாடுதான் அதிகம்.

மெரினா கடற்கரை



இந்த முறையும் நண்பர்களுடன் மெரினா சென்றேன். எப்பவுமே மெரினா செல்லும்போதும் வானம் மிக மிக அழகாக, வித்தியாசமாக, மாறிக்கொண்டே இருக்கும், பார்த்துக்கொண்டே இருக்கலாம். இப்பவும் அப்படித்தான்.
இதற்கு முன் :
மெரினா க்ளிக் இங்கே...
வானம் பற்றி உளறல் இங்கே...


இது ஐஸ் பார். (ஒவ்வொன்னும் 50 கிலோ இருக்கும், இது உருவாகும் விதமும், வெளியே எடுக்கும் விதமும் நமக்கு சுவாரஸ்யமா இருக்கும், முடிஞ்சா இதப் பத்தியும் பின்னாடி எழுதுறேன்.)


இது கோயம்பேடு ஹோட்டல் சென்னை டீலக்ஸ் பார்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

புரோட்டா ஸ்டால்

சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று.

திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்.... ம்ம்ம்ம்.

சிறிது வளர்ந்து வெளியூர் செல்ல ஆரம்பித்த பின், காயல்பட்டிணம், ஆறுமுகனேரி, தூத்துக்குடி என சுவை பார்க்கும் ஏரியாவின் சுற்றளவு கூடியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதிலும் தூத்துக்குடி சுவை மறக்க முடியாதது.

எனது காலத்தில், தூத்துக்குடியில், சத்யா ஏஜன்சி அருகிலிருக்கும் ஆழ்வார் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் ஆண்டவர் அனைவரும் அறிந்த பேமஸ் புரோட்டா கடைகள். இப்போதும் (தண்ணியடித்தால்) தேடிப்போய் சாப்பிடும் மற்றொரு கடை, ஆறுமுகனேரி ரமா ஹோட்டல்.

தூத்துக்குடியில் அடிக்கடி சாப்பிடும் இடமென்றால் அது பழைய பேருந்து நிலையம் வெளியே இருக்கும் முக்குக் கடை (இதுவரை அதன் பெயர் தெரியாது, நாங்கள் அழைப்பது அப்படித்தான்). எப்போதெல்லாம் தூத்துக்குடியைக் கடக்கிறேனோ அப்போதெல்லாம் இங்கு ஒரு விஜயம் உண்டு. ‘சுக்கா செட்டு’ என்று சொன்னால் போதும், இரு பொரித்த புரோட்டாக்களை நொருக்கிப் போட்டு, அதில் மட்டன் சுக்காவை ஊற்றி, ஓரத்தில் கொஞ்சம் நறுக்கிய பச்சை வெங்காயத்துடன் வாழை இலையில் ஒரு படையல் கிடைக்கும். இத்துடன் ஒரு அரைவேக்காடு சேர்த்தால்.... ஸ்ஸ்ஸ். இந்த முறை அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)




இப்போது புரோட்டாவை நொருக்குவதற்கு தனி இயந்திரமே இருக்கிறது!


பின்பு, சனிக்கிழமை சிவகாசி சென்ற போது நண்பர் ஒரு புரோட்டா கடைக்கு கூட்டிச் சென்றார். இங்கு பொரிப்பதில்லை, கல்லில் போட்டு எடுத்த புரோட்டா.

படையல் ஆரம்பம்.


உச்சகட்டம்.

அங்கிருந்த கல்லூரி நாட்களில் நான் வழியல் விரும்பி சாப்பிடுவதை மறக்காத அவர், எனக்காக பிரத்யோகமாய் செய்யச் சொன்னார்.

இதுதான். வெங்காயத்தை கல்லில் நன்றாக வதக்கி, பின் அதை வைத்து ஒரு பக்க ஆம்லெட் போட்டால், அதுதான் வழியல். இதன் சுவையை வார்த்தைகளால் ஜொள்ள இயலவில்லை. (சிவகாசி தவிற வேறெங்கும் இந்த வகை முட்டை நான் கண்டதில்லை).

நீங்களும் பாத்துட்டு ஏதாவது ஜொள்ளிட்டுப் போங்க. என்ன இருந்தாலும் நம்ம ஊரு புரோட்டா கடை சுவை எங்குமே கிடைக்காது.
---

மேலும் கொஞ்சம் கொசுறு க்ளிக்குகள்...

இந்த தடவ அம்மா குடுத்த ஸ்பெசல் - ஆப்பம் வித் தேங்காப்பால்.


மஞ்சள், பச்சை நிறங்கள்.


சிவகாசி பூனை... நல்லா பாத்துக்குங்க.


தூத்துக்குடியில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் மேம்பாலம் அடியில் - புதிய பேருந்து நிலையம் அருகே.


-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!