அலுப்பே நெருங்காதே

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின், அதை ஓட்டுவது எப்படி இருந்தது? முதன் முதலில் வாங்கிய நோக்கியா 1100 தொலைத்த தூக்கங்கள் எத்தனை? முதன் முதலில் குடித்த பாதி பாட்டில் பீர், கால் டம்ளர் ரம் - இவைகள் தந்த போதை இப்போது எதிலும் கிடைக்காதது ஏன்? பள்ளி நண்பர்களுடனான முதல் சுற்றுலா, கல்லூரி நண்பர்களுடனான கடைசி சுற்றுலா ஏக்கம் தருவது ஏன்? முதல் பணியில் வெற்றிகரமாக செய்த சிறு வேலை தந்த மகிழ்ச்சி எங்கே? முதல் பதிவு, முதல் பின்னூட்டம் தந்த கிளுகிளுப்பு இப்போது எப்படிக் கிடைக்கும்?

எந்த ஒரு விசயத்திலும், முதலில் இருக்கும் சுவாரஸ்யம் கடைசி வரை இருப்பதில்லை. எனது வீட்டில் மொத்தம் நான்கு அறைகள். எனது ஒரு வயது குழந்தை, நாள் முழுதும் அதற்குள்தான் சுற்றிச் சுற்றி வருகிறாள். திங்கள் முதல் வெள்ளி வரை அந்த அறைகள்தான். நடக்கிறாள், ஓடுகிறாள், விழுகிறாள், அழுகிறாள், பாடல் கேட்கிறாள், பார்க்கிறாள், என்னுடன் விளையாடுகிறாள், சிரிக்கிறாள். சில நேரங்களில், ஒரு பொருளை கைகளில் வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பல கோணங்களில் பார்க்கிறாள். வீட்டுச் சாவியைக் கொடுத்தால், ஒரு மணி நேரம் வரை அந்த ஆராய்ச்சி நடக்கும். சிறு வயதில் நானும் இப்படித்தான் ஒரே இடத்தில் உட்கார்ந்து அலுக்காமல் சிறு செயல்களைச் செய்துகொண்டு இருந்திருப்பேன், என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.



Share/Bookmark
Read More!