Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

ஆற்காட்டாருக்கு நன்றி

அன்று ஞாயிற்று கிழமை,

வீட்டின் முன்புற அறையில் வெறும் தரையில் அமர்ந்து எனது சகோதரன் அதிபிரதாபன் அளித்த கிமு கிபி என்ற புத்தகத்தை மூன்றாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் கேரளாவிலிருந்து விடுமுறை கழிக்க வந்திருக்கும் எனது சகோதரி பீனா(BEENA) “எந்தா அச்சாச்சா வாயுக்குந்நு(என்ன அண்ணா படிக்கிறீர்கள்) என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளுக்கு புத்தகத்தை குறித்து சில விஷயங்களை மலையாளத்தில் கூறி புரிய வைத்தேன். அதன் பின் அத்தை மகள் நித்தியா ”அத்தான் சமயமே போவல்ல என்னத்தையாவது செல்லுங்க”(சொல்லுங்க) என்றபடி வந்தமர்ந்தாள்.


அப்புறம் எனது மனைவி “ஆரம்பிச்சிட்டாரா அவருடைய வரலாற்றை என்று கேட்டபடி ஜோதியில் ஐக்கியமானாள்.

கையில் இருந்த கிமு கிபி புத்தகம் விசிறியாக பயன்பட எங்கள் பேச்சு தொடர்ந்தது அதனிடையே எங்கள் வீட்டில் தங்கி ஏரோநாட்டிக் படிக்கும் சிசிலன்(SICILAN) லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்த படியால் டைம் பாஸாக்காக ஏதாவது பேசலாம் என்று வந்தமர்ந்து, பேச்சினிடையே “வெறுந்தரையில் படுத்து உறங்கிஎன்று காளை ராகத்தில் கீரல் விழுந்த ரெக்காட போல பாடி பாடி காதில் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தான். இதனிடையே செல்போனில் சார்ஜ் திர்ந்துவிட்டபடியால் என் மனைவியின் சகோதரனும், ஃபேன் ஓடாததால் என் தம்பி சதிஷ்(SATHESH)-ம் பேச்சில் கலந்து கொண்டனர்.

கிட்டதட்ட மூன்று மணி நேரம் பல விஷயங்களை குறித்து பேசினோம்,ஒருவரை ஒருவர் கலாய்த்தோம்.

அந்த நேரத்தில் கரன்ட் வந்துவிட எனது மனைவியின் சகோதரனும்,சிசிலனும் அவரவர் லேப்டாப்பில் அமர, மனைவியும்,அத்தை மகளும் TV முன் அமர,எனது தங்கையும்,சதிஷீம் எனது லேப்டாப்பில் கேமில் மூழ்கிவிட நான் மீண்டும் தனிமைபடுத்தபட்டேன்.

அப்புறம் என்ன செய்ய நானும் COMPUTER முன் அமர்ந்து ஏதோ.காம்ல் ஏதாவது எழுதலாம் என அமர்ந்தேன்.

என்ன தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லையே என நினைக்கிறீர்களா. நிறையவே தொடர்பு இருக்குங்க. ஞாயிற்றுக் கிழமையானால் கூட அனைவரும் அமர்ந்து பேசுவது என்பது கரண்ட் கட்டால் மட்டுமே நடக்கிறது. அப்புறம் ஆற்காட்டாருக்கு நன்றி சொல்லித்தானே ஆகவேண்டும்.


--- கி.கி.



Share/Bookmark
Read More!

நிறம் மாறும் உறவுகள்

”ஏங்க போய்த்தான் ஆகணுமா”

“வேற என்ன செய்யச் சொல்ற”

“நாம இங்க ஏதாவது வியாபாரம்...”

“என்ன வியாபாரம் பண்ண முடியும் அப்படி பண்றதா இருந்தாலும்பணத்துக்கு எங்கே போறது”

“வெளிநாட்டுக்கு போக செலவு செய்யிற காசுல வியாபாரம் ஆரம்பிக்கலாமில்லையா”?


“ஆரம்பிக்கலாம்,ஆன வருமானம் அதிகமாக ஒன்றும் வராதே”

“கிடைக்கிறத வச்சுட்டு,நாமும் பிள்ளையும் ஒரு வேளை கஞ்சி குடித்தாவது நிம்மதியா இருக்கலாம்

“இந்தாப்பாரு உனக்கு இப்போ ஆறு மாதம்,அடுத்த மாதம் நீ உன் அம்மா வீட்டுக்கு
போயிடுவ அப்படி ஒரு 6 மாதம்,அதுக்கப்புறம் குழந்தைக்கு ஒன்று ஒன்றர வயசாகும்போது நான் திரும்பி வந்துவிடுவேன்”


இப்படி ஒரு வழியாக தன் மனைவியை சமாதானப்படுத்தி அரபு நாட்டுக்கு
வேலைக்கு கிளம்பினான் அந்த கணவன்.

இடையிடையே குழந்தையின் புகைப்படத்தை மின் அஞ்சலில்
பார்த்து,அங்கிருந்து இங்கு வருபவர்களிடம் பரிசுப்பொருட்கள்
கொடுத்தனுப்பி கடந்தது இரண்டு வருடம்.

தாயகம் திரும்பினான் ஒரளவு சம்பாத்தியத்துடன் சிறிது நிலம்
வாங்கினான், குழந்தையின் பேரில் வைப்பு முதலீடு செய்தான்.

“இனி இருக்கிற பணத்தை வைத்து இங்கேயே ஒரு வியாபாரம்
செய்யலாமுன்னு யோசிக்கிறேன்”

“ஏங்க நீங்க வந்து 3 மாசம் ஆகுது,இப்போ நான் 1 மாதம்
முழுகாமலிருக்கிறேன்,எப்படியும் என்னால் 2 வருடம் ஓட்ட
முடியும்,இங்கே வியாபாரம் பண்ணி கஷ்ட்ப்படுறதை விட
அங்க போய் வந்தீங்கன்னா, சின்னதா ஒரு வீடு கட்டி நாம்
தனியாகப்போய்,பின் வியாபாரம் செய்யலாமில்லையா”

இம்முறை மனைவி கணவனை சமாதனப்படுத்தி அனுப்பினாள்
அரபு நாட்டுக்கு?!

ஏழு எட்டு மாதங்களுக்குப் பின், இரண்டாவது குழந்தையும் பிறந்தது .

சிறிது நாட்களுக்கு பின் ஊர் திரும்பினான் கணவன் உயிரற்றவனாக.

கதறி அழுதனர் குடும்பத்தினர், கடைசியாக மனைவியும்.

“நான் அப்பவே சொன்னேன் போக வேண்டாம், போக வேண்டாம் என , கடைசியில் இப்படி போயிட்டியே, பிள்ளைங்க அப்பா எங்கேன்னு கேட்டா
நான் என்ன பதில் சொல்வேன்”

கூடியிருந்த கூட்டம் அதைக்கண்டு கண்ணீருடன் கலைந்தது.

ஒரு வருடத்திற்குப்பின் யாரோ முதல் குழந்தையிடம் கேட்டார்கள், அப்பா எங்கே என்று.
“அங்க அம்மாவோடு படுத்து தூங்குறாங்க” என இறந்த கணவனின் ஆயுள் காப்பீடு மற்றும் இழப்பீடு பணத்தில் கட்டிய வீட்டின் படுக்கை அறையை காட்டி சொன்னது இரண்டாவது குழந்தையை அரவணைத்தபடி.

பி.கு:-

இது முற்றிலும் கதையல்ல, 95% உண்மை.


---கி.கி



Share/Bookmark
Read More!

கேரளாக்காரர்கள் கேனையர்களா?

13/9/09 அன்று தொலைகாட்சியின் சானல்களை புரட்டிக்கொண்டிருந்த போது ஏஷியா நெட் சானல் வந்ததும் நமது குப்பைத்தொட்டி - ஆதவன் சொன்னது போல் சுவராசியமாக ஏதாவது கிடைக்குமா என்று பார்தேன் நான் பார்த்தது மதிய நேரம் என்பதால் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது படத்தின் பெயர் ”பாண்டிப்படை” படத்தின் பெயரில் என்ன இருக்கிறது என்கிறீர்களா. 400 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் நாடாகவே இருந்து,தற்போதும் நமது உதவியால் வயிற்றைக் கழுவும் கேரள நாட்டவர் அழைப்பது ”பாண்டிகள்” என்று ஆனால் அவர்களுக்கு இங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி தமிழ் நாட்டில் உள்ள ஒரு இடத்தில் 30 ஏக்கர் நிலத்தை ஒருவர் விற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும்,மற்றும் கர்நாடகா,ஆந்திராவிலிருந்தும் ஆள் கொண்டு வருவார்.ஆனால் இங்குள்ள ஒரு தாதா அவர்களையெல்லாம் கொன்று விடுவார். பின் அந்த இடத்தின் சொந்தக்காரர் தன் வேலையாளிடம் இனி கேரளாவிலிருந்துதான் ஆள் கொண்டு வர வேண்டும் என்பார்.உடனே வேலையாள் சொல்வான் கேரளாக்காரர்கள் புத்திசாலிகள் அவர்கள் வர மாட்டார்கள் என புகழ்வார். அந்த புகழ்ச்சியில் தப்பில்லை எனதான் நான் நினைக்கிறேன்.கேரளக்காரர்கள் புத்திசாலிகள் தான் உதாரணத்துக்கு சில.

நான் கடந்த மாதம் நண்பன் ஒருவனுடைய திருமணத்திற்க்கு எர்ணாக்குளத்திற்கு இரயிலில் சென்றுகொண்டிருந்தேன்.பாலக்காடு தாண்டி வடகஞ்சேரி எனும் இடத்திற்க்கு முன்பாக இரயில் என்ன காரணத்தினாலோ வேகம் குறைந்து நின்றது.அப்போது வெளியே 20-25 போலீஸ்காரர்கள் சேர்ந்து 10-15 பேரை பிடித்து வைத்திருந்தார்கள் வெளியே நின்ற ஒருவரிடம் என்ன என்று விசாரித்ததற்கு சாக்கு மூட்டையில் மணல் அள்ளி செல்கிறார்கள் அதனால் போலீஸை வரவைத்து பிடித்தோம் என்றார்கள்.ஆம் அவர்கள் மண்வளத்தை காத்தால் தான் நீர் வளம் நிலைக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

நம் தமிழ் நாட்டிலோ லாரி,லாரியாக அள்ளினாலும் கேட்க ஆளில்லை.அதையும் மீறி கேட்டால் அடி பொடி அரசியல் வாதியிலிருந்து ஆட்சியில் இருப்பவர்கள் வரை நம்மை தட்டுவார்கள்.இப்படி திருடி நம் தமிழ் நாட்டிலேயே விற்றால் பரவாயில்லை,இதனை இங்கிருந்து ஆறுகள் நிறைந்த கேரளாவுக்கே கடத்தி விற்ப்பார்கள்.

அடுத்து ரேஷன் அரிசி நம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் 2 ரூபாய்க்கும்,1 ரூபாய்க்கும் அரிசி வழங்கினால் நம்மை விட சந்தோஷிப்பவர்கள் கேரளத்தவரே.இங்கு அரிசி விலை குறைந்தால் அங்கும் விலை குறையுமோ கட்ததலும் அதிகரிக்கும்.இதற்கு முதல் முக்கிய காரணம்,நம் மக்களோ விலை குறைவாக கிடைக்கும் அரிசி என்பதால் இந்த அரிசியை சமைத்தால் எங்க வீட்டு நாய் கூட சாப்பிடல என்று பெருமை பேசுபவர்களாகவே இருக்கிறார்கள் எனவே கேரள நாட்டாவர் புத்திசாலிகளே.

அடுத்து தண்ணி பிரச்சனை,நம் தமிழ் நாட்டில் விவசாயம் நன்றாக நடந்தால்தான் அவர்களுக்கு அரிசி முதலான தானியங்களும்,காய் கறிகளும் கிடைக்கும்.ஆனால் பெரியார் அணையிலிருந்து கொள்ளளவை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள்.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் வந்துவிடும் என்று.அதெல்லாம் நமக்கு உறைக்காது கர்நாடகாவில் நிறைய தமிழர்கள் வாழ்வதால் நாமும் அதிகம் முரண்டு பண்ணமுடியாது என நினைத்து கொண்டாலும்,கேரள நாட்டவர் 20% பேர் தமிழ் நாட்டில் தான் வேலை செய்கிறார்கள்.65% மாணவர் தொழில்கல்வி பயில தமிழ் நாட்டிற்க்குதான் வருகிறார்கள்.இருந்தாலும் நாம் இன்னும் பல்லிளித்துக் கொண்டு சுயலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாக நம்மை நாமே சுரண்டி அவர்களுக்களிக்கிறோம்.எனவே அவர்களின் வளம் கெடாமல், நம் வளத்தால் வாழும் அவர்கள் புத்திசாலிகளே.

---கி.கி

(இன்னும் வரும் இதன் தொடர்ச்சி)

Share/Bookmark
Read More!