கார்கிலில் வெற்றி உனக்கே(MAY - 99)


*எல்லை மீறிய எத்தர்களை அழிக்க
நய வஞ்சக நரிகள் நம் நாட்டில்
புகாமல் இருக்க, இளஞ்சிங்கமே!
எழுந்துவிடு.

டைகள்
இமயம் போன்றதெனிலும்
இடித்து விடு!

தாயகத்தை
இமைபோல் காக்க இன்றே
புறப்படு!

திண்ணமான
தீர்மானங்களை கையில்
கொண்டுவிடு!

தீரத்துடன்
போராட முடிவெடு!


துன்பங்களை
துக்கமென நினைத்துவிடு!


தூக்கம்
இமைகளை அணுகாமல்
இருக்கவிடு!


தென்படும்
எதிரிகளை பந்தாடிவிடு!


தேசத்தை
காக்க விழித்துவிடு!

தைரியத்தை
மற்றவர்க்கு புகட்டிவிடு!

தொல்லையின்றி
தேசத்தை வாழவிடு!

தோட்டாக்களால்
எதிரிகளை அழித்துவிடு!

தெளத்யத்தில்
வெற்றி உனக்கே
புரிந்துவிடு!


*இளஞ்சிங்கமே
இன்றே புறப்பட்டுவிடு
“வந்தே மாதரம்”

பி.கு:-
1999-ம் ஆண்டு கார்கில் போர் ஆரம்பித்த 3-ஆம் நாள்
என் மனதில் தோன்றிய வரிகள்.

---கி.கி


Share/Bookmark

0 ஊக்கங்கள்: