எவனோ ஒருவனின் வரலாறு

எவனோ ஒருவனின் வரலாறு - கேக்கவே நல்லா இருக்குல்ல? (இல்லன்னாலும் ஆமான்னு சொல்லனும்), அதுக்குத்தான் இப்படி பேர வச்சேன். எவனோ ஒருவன் சொன்னான், எவனோ ஒருவனுடன் போனேன், எவனோ ஒருவன் வந்தான், எவனோ ஒருவன் நல்லா எழுதுறான் (ஆதவா, வேணாம், நிறுத்திக்கிறேன்).... ஏதோ டாட் காம்னு பேரு கிடச்சுது, அத வச்சதுக்கு அப்புறம் அதுக்கு ஏத்தமாதிரி எவனோ ஒருவன்னு வச்சாச்சு. இப்ப பேரையும் மாத்தியாச்சு. இத சொல்ல ஒரு பதிவு போடனுமேன்னு நெனச்சுட்டு இருந்தப்போதான், நம்ம ஆதவன் வரலாறு தொடருக்கு கூப்ட்டாப்ல. நமக்கு சோசியல் சயின்ஸ்னா மூனாங்கிலாஸ்ல இருந்தே பயம். இருந்தாலும் தெரிஞ்ச சப்ஜெக்ட்டுங்கிறதுனால உள்ள குதிச்சிடலாம். ஏதும் சந்தேகம் கேட்டாக்கூட தைரியமா சொல்லலாம் பாருங்க.

---

பிரதாப் பெஸ்கி. இதுதான் நமது பெயர். இணையம் தொடர்பான வேலை. அதனால் சும்மா இருக்கும் நேரத்திலெல்லாம் ஏதாவது இணையதளம் மேய்வது எனது தொழிலின் ஒரு பகுதி. அதே போல ரஜினிஃபேன்ஸ் தளத்தையும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் இருந்தது.

ஒருமுறை RSS பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை. படித்துக்கொண்டிருந்த நேரம், கூகுல் ரீடர் பற்றித் தெரிய வந்தது. ரஜினிஃபேன்ஸ் தளத்தின் RSS எடுத்து கூகுல்ரீடரில் சேர்த்து படிக்கத் தொடங்கினேன். அப்படியே என்னுடைய தொழில் சார்ந்த விபரங்களுக்கு சிலவற்றை சேர்த்தேன். அதன்பின் முதன்முதலில் பார்த்த பிலாக் என்வழி. அதனைத் தொடர்ந்து படிக்கலானேன். பின்பு அதனுடன் சுந்தரின் ஒன்லிரஜினி. கிரி அவர்கள் பதிவு ஒன்றைப் படித்தாக ஞாபக. பிறகுதான் திருப்புமுனை. டோண்டு அவர்களின் வலைப்பூவை பார்க்க நேர்ந்தது. அங்குதான் பின்னூட்டங்களைப் பார்த்து அடுத்தடுத்து தொடரத் தொடங்கினேன். அப்படியே வெகுகாலம் படித்துக்கொண்டிருந்தேன்.

தமிழில்தான் எழுதவில்லையே தவிற, எனது துறையின் தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பூக்கள் இரண்டு ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தேன். சின்ன சின்ன குறிப்புகளுக்காக http://phpbeginners.blogspot.com மற்றும் என்னுடைய வேலைகள், கொஞ்சம் பெரிய குறிப்புகளுக்காக http://beski.wordpress.com. தமிழில் எழுதவேண்டும் எனத் தோன்றியபோது http://dinamdinam.blogspot.com எனபதைத் தொடங்கி எழுதிப் பார்த்தேன். சுத்தமாக வரவில்லை. அதன் பிறகு பெரிதாக முயற்சியும் செய்யவில்லை.



வாசிக்கும் காலங்களில் அவ்வப்போது பதிவர் சந்திப்பு நடைபெறும். ஒரு வாசகனாக பதிவர் சந்திப்புக்கு வரவேண்டுமென வெகுநாட்கள் ஏங்கியதுண்டு. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் வந்து தடுத்துவிடும் (நாம எழுத ஆரம்பித்த 4 மாதங்களுக்கு சந்திப்பே நடைபெறவில்லை என்பதையும் நினைவில் கொள்க). ஒரு நாள் இந்தப் பதிவைப் பார்த்ததும் கொஞ்சம் பொங்கிவிட்டேன். ஆத்திரத்தில் ஏதோ எழுதியும் விட்டேன். பைத்தியக்காரன் மேலே கொஞ்சம் கோபம், சந்தேகம் (பின்புதான் தெரிந்தது அவரது நல்ல மனது).

முதல் பதிவில் மூன்று பின்னூட்டங்கள். முத்துலெட்சுமி/muthuletchumi, சென்ஷி, அதிஷா . ஆச்சர்யம்! எப்படித் தெரிந்தது? ஒருவேளை தமிழ்மணத்தை குடைந்துகொண்டிருந்ததால் வெளியே தெரிந்திருக்கும், அல்லது திரட்டிகளில் இவர்கள் முக்கியப் பங்கு வகிக்கலாம். இவர்கள் வந்ததற்கு நான் வைத்த தலைப்பும் ஒரு காரணமாய் இருக்கும். பின்பு அப்படியே தொடர்ந்தது. கூடவே எனது அண்ணன் கிகியையும் சேர்த்து உள்ளே போட்டேன். இவர் நல்ல அனுபவசாலி, பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதில் வல்லவர். இப்போது அலுவல் மற்றும் குடும்ப வேலைகள் காரணமாக் எழுதாமல் இருக்கிறார். விரைவில், அனுபவப் பதிவுகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் சென்ஷிதான் சில சந்தேகங்களை தீர்த்துவைத்தார். அப்போது அவரிடம் சாட் மூலம் உரையாடியது, உள்ளே வந்த இரண்டாம் நாளே ஆதி அவர்களிடம் பேசியது, சுரேஷ் கண்ணன் என்னை தொடர் பதிவிற்கு அழைத்தது ஆகியவைகளெல்லாம் எனது சாதனைகளாக கருதப்படுகின்றன (வரலாறு முக்கியம் அல்லவா). இப்படியே போய்க்கொண்டு இருந்தது, பின்புதான் இரண்டாவது திருப்பம்.





சிறுகதைப் பட்டறை. இங்குதான் முதன்முதலில் பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, பலரின் அறிமுகமும் கிடைத்தது. முடிந்தவுடன் வால்பையன் உடன் அழைத்துச் சென்றார். வேறெங்கே? அங்கே இன்னும் சிலரின் அறிமுகம். அது ஒன்றும் பெரிதாக நீண்டுவிடவில்லை. பின்பு வந்தது மூன்றாவது திருப்பம்.


(மேலே உள்ள படத்தை அழுத்திப் பாருங்கள், வெளிவராத சில படங்களைக் காணலாம்)


மெரினாவில் பதிவர் சந்திப்பு. சந்திப்பு சரியாக நடக்கவில்லை என்பது வேறு விசயம். ஆனால் இன்னும் சில நண்பர்கள் கிடைத்தார்கள். அன்று பார்த்த அடலேறு, ஜனா, நிலாரசிகன் ஆகியோர் இன்றும் தொடர்கிறார்கள். இதே நாளில்தான் இரண்டாவது திருப்பத்தில் கிடைத்த நட்புகளும் இரு கைகளை நீட்டி என்னை அழைத்துக்கொண்டன. அகநாழிகை பொன்.வாசுதேவன், தண்டோரா, கேபிள் சங்கர், வண்ணத்துப்பூச்சி சூர்யா ஆகியோருடன் தொடர்ந்து செல்கிறேன்.




இப்படி பார்த்துப் பழகாவிட்டாலும் சாட்டிலும், போனிலுமே பேசி நட்பை என்னுடன் வளர்த்துக்கொண்டவர் குறை ஒன்றும் இல்லை ராஜ். இவர் இப்போது எழுதுவதில்லை. ஆனால் நட்பு தொடர்கிறது.கடந்த வாரம்தான் இவரை நேரில் பார்த்தேன். இதே போல ஆதவன், தினமும் கதைக்கும் ஒருவன். ஆதவா, இந்தியா வந்தால் கண்டிப்பாக என்னை வந்து பார்ப்பாய், அதனால் ஒரு செண்டு பாட்டிலோடு வரவும். இதேபோல இனியவன் என்.உலகநாதன். இவருடைய அனுபவப் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது 100 வது பதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அவ்வப்போது மின்மடலில் மட்டுமே தொடர்பு, இருப்பினும் இருவருக்கிடையே ஏதோ புரிதல் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.




இதன் பிறகு, நான் எழுதுவதில் உள்ள குறை நிறைகளை சுட்டிக்காட்டி, என்னை ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஆதி மற்றும் அகநாழிகை பொன்.வாசுதேவன். ஆதிதான் முதலில் ஆரம்பித்தார், “நல்லாத்தான எழுதுறீங்க, இப்படியெல்லாம் பேர வச்சுக்கிட்டா நல்லா இருக்காது”,ன்னு சொன்னார். பின் வாசு அவர்கள் சில விபரங்களைக் கேட்ட பிறகு ஒரு பெயரையும் வைத்துவிட்டார் (பேரு வச்சீங்களே, என்னைக்காவது எனக்கு சோறு வச்சீங்களா?). அதி பிரதாபன் (இதன் பின்னணிக் கதை அறிய தனியே தொடர்பு கொள்ளவும், இப்போதே பதிவு நீண்டுவிட்டது). இனி மொக்கையாக எழுதுவதை கொஞ்சம் குறைக்க வேண்டும் என மனது சொல்கிறது. (என்னது? இதுவே மொக்கையா இருக்கா? ராஜ், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது)

இனி கொஞ்சம் கருத்து (நோ நோ, ஓடக்கூடாது, இவ்ளோ தூரம் வந்துட்டீங்க , இந்த பாராவையும் தாண்டி போயிருங்க). எழுத வந்தது என்னமோ ஒரு திருப்திக்காகத்தான். ஆனால் இங்கு கிடைத்த நட்புகள் எண்ணங்களை மாற்றி விட்டன. கிடைத்த நட்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன, எதிர்பாராதவை. யாரையும் பார்க்காமல் நான் சும்மா எழுதிக்கொண்டே இருந்திருந்தால் பல நடைமுறைகள், எழுத்துக்கள், அரசியல் தெரியாமல் போயிருக்கும். நான் எழுதுவது நன்றாக இருக்கிறதா என்று கூடத் தெரியாமலே போயிருக்கும், திருத்துவதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. சுருக்கமாகச் சொன்னால் கிணற்றுத் தவளையாகவே இருந்திருப்பேன். இப்பவும் அப்படித்தான், இருந்தாலும் வெளியே வருவதுபோல் இருக்கிறது.

உண்மையான விமர்சனம் இல்லாமல் திருத்திக்கொள்ள வாய்ப்பே இருக்காது.

---

தொடர் பதிவு எழுதுறது கூட பெரிய விசயமா தெரியல. அதுக்கு அடுத்து ஆள் பிடிக்கறத நெனச்சாத்தான் கொஞ்சம் மலைப்பா இருக்கு. ஒன்னு நாம கூப்பிட நினைத்தவர்களை யாராவது ஏற்கனவே கூப்பிட்டுருப்பாங்க. அல்லது கூப்பிட்டவங்க ஏதாவது வேலையா இருந்து எழுதாமப் போய், அப்புறம் அப்படியே மறந்து போய்டுவாங்க. ஆனா கூப்பிட்டவங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். நான் கூப்பிடுபவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் (அரசியல் வாடை அடிக்கிதோ?). எழுத முடியாவிட்டால் விட்டுவிடலாம், நான் ஒன்றும் தப்பா நினைக்க மாட்டேன் (இப்படி ஒரு பிட்டப் போட்டாத்தான் அவங்க எழுதாமப் போனாலும் ஒன்னும் தெரியாது).

நான் எதிபார்க்கும் வரலாறுகள்:
1. யூத் பதிவர் கேபிள் சங்கர் (இவரை ஏற்கனவே யாரோ கூப்பிட்டார்களாம், 
   யார் என்று தெரியவில்லையாம், ஹி ஹி ஹி...)
2. அண்ணன் தண்டோரா (அண்ணன் இப்போ கொஞ்சம் பிசின்னு நினைக்கிறேன்)
3. அகநாழிகை பொன்.வாசுதேவன் (இதழ் வெளியீட்டில் பிசியாக இருக்கிறார்)
4. வண்ணத்துப்பூச்சி சூர்யா (இவரும் பிசிதான், வீட்டு வேலைகள், அலுவல் பணிகள்)
5. ஜனா (நீங்களாவது எழுதுங்க, அதுக்காக உங்கள வெட்டின்னு சொல்ல வரல)

MLM பண்ணுறவங்க பாத்துருக்கீங்களா? நம்மளை அவங்களுக்கு கீழ சேரச் சொல்லிட்டு அவங்களே நம்மளுக்கு கீழ ஒரு ஆளை பிடிச்சுப் போடுவாங்க. அதே போல... மேலே அழைக்கப்பட்டவர்கள் இவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்...

அடலேறு
நிலாரசிகன்
கனகு
ரோமியோபாய்
(இதை பிரசுரிப்பதற்குள் இவர்களுள் யாரேனும் எழுதிவிட வாய்ப்புள்ளது, 
 அப்றம் எழுதாம இருக்குறவங்க பின்னூட்டத்துல சொல்லி கொக்கியப் போட்டுக்குங்க...)

-அதி பிரதாபன்.

Share/Bookmark

30 ஊக்கங்கள்:

அடலேறு said...

பதிவு அருமை நண்பரே, வாழ்த்துக்கள்

//உண்மையான விமர்சனம் இல்லாமல் திருத்திக்கொள்ள வாய்ப்பே இருக்காது// உண்மையான வரிகள்..

எத்தனை எத்தனை நண்பர்கள் பார்க்கவே பொறாமையாக உள்ளது.

அகநாழிகை said...

அதி பிரதாபன்,

அருமையான பதிவு. தொடர்ந்து எழுத்தில் சிறப்பான மாற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

//பேரு வச்சீங்களே, என்னைக்காவது எனக்கு சோறு வச்சீங்களா?//

சாப்பிடும்போது நிதானமா இருக்கணும்னு சொல்றது.

- பொன்.வாசுதேவன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமையான வரலாறு.......

//ராஜ், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது//

என் மனசில இருக்கிரதெல்லாம் எப்படி தெரியுது? விசில் பட விவேக் மாதிறி கரண்ட் கம்ப எஃபக்டோ?

என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி..

butterfly Surya said...

அருமை.. Good beski.. Keep it up..

நாளை வெளியூர் பயணம்.. வந்ததும் எழுதுகிறேன்..

butterfly Surya said...

நண்பா அடலேறு.. நீங்களும் சென்னை தானே..?? பொறாமை எதற்கு..?? ஜோதியில் கலக்கவும்..

மணிஜி said...

சொல்லிபுட்டே..செய்யறேன்

Romeoboy said...

சகா நான் எப்பயோ எழுதிட்டேன் .. இருந்தாலும் அழைத்தமைக்கு நன்றி ..

http://ennaduidu.blogspot.com/2009/09/2.html

iniyavan said...

//அவ்வப்போது மின்மடலில் மட்டுமே தொடர்பு, இருப்பினும் இருவருக்கிடையே ஏதோ புரிதல் இருக்கிறது என்றே நினைக்கிறேன்//

நன்றி நண்பா!

தங்கள் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.

இரும்புத்திரை said...

பாஸ் நீங்க எழுத வந்த கதை நல்லா இருக்கு..இதுல ஒரு உள்குத்து இருக்கு..அதை நான் அப்புறம் சொல்றேன்..

எந்த கதை அனுப்பட்டும் சொல்லுங்க

Beski said...

நன்றி அடலேறு,
உங்களுக்கு சூர்யாவின் பதிலைப் பாருங்கள்.

நன்றி பொன்.வாசுதேவன்,
//சாப்பிடும்போது நிதானமா இருக்கணும்னு சொல்றது.//
எதச் சாப்பிடும்போது?

நன்றி ராஜ்,
//என் மனசில இருக்கிரதெல்லாம் எப்படி தெரியுது? //
உங்க மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்.
//என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி..//
என்ன இப்படி சொல்லிட்டீங்க? நமக்கு நண்பர்கள் ரொம்ப குறைவே.

நன்றி சூர்யா,
பொறுமையா எழுதுங்க, ஒன்னும் அவசமில்லை.

Beski said...

//தண்டோரா ...... said...
சொல்லிபுட்டே..செய்யறேன்//
செஞ்சுட்டீங்க, நன்றி.

நன்றி ரோமியோ,
ஏற்கனவே எழுதியாச்சா? ரைட்டு.

நன்றி என். உலகநாதன்,
//நன்றி நண்பா!
தங்கள் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.//
இதெல்லாம் ரொம்ப ஓவர். முன்னமே சொன்ன மாதிரி நமக்கு இங்கு நட்பு வட்டம் விரல் விட்டு என்னக்கூடியதே. அதில் நீங்களும் ஒருவர்.

Beski said...

//இரும்புத்திரை அரவிந்த் said...
பாஸ் நீங்க எழுத வந்த கதை நல்லா இருக்கு..//
எந்த கதைய சொல்றீங்க தலைவா?

//இதுல ஒரு உள்குத்து இருக்கு..அதை நான் அப்புறம் சொல்றேன்..//
முதல் கதையிலயா? தெரியுமே!

//எந்த கதை அனுப்பட்டும் சொல்லுங்க//
அதான் சொன்னேனே, எங்க தலை கிட்ட கேட்டு சொல்றேன்.

வருகைக்கு நன்றி அயர்ன் மேன் அரவிந்த்.

Cable சங்கர் said...

இப்ப என்ன தொடர் பதிவு எழுதணும் அவ்வளவுதானே.. எழுதிட்டா போச்சு..

வால்பையன் said...

குறுகியகாலத்தில்
ஒரு நீண்ட நெடிய
நதியின் பயணத்தை
அடைந்துவிட்டீர்கள்!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

தம்பி என் மனம் ஓடும் ஓட்டத்திற்கு இணையாக எழுத்து ஓட மாட்டேங்குது, அது தான் சிறிது இடைவெளி.

வரலாறு அருமை

Jana said...

வரலாறு என்றாலே சோகங்களும் இருக்கணும், உங்க சோகங்களை காணல???
அடடா...நம்மளையும் எழுத சொல்லிப்புட்டீங்களா? ம்ம்ம்..எழுதித்தான் பார்ப்பம்...

Beski said...

நன்றி கேபிள்ஜி,
இவ்வளவு வேலைப்பளு உள்ள நேரத்திலும், இந்த பொடியனின் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

//வால்பையன் said...
குறுகியகாலத்தில்
ஒரு நீண்ட நெடிய
நதியின் பயணத்தை
அடைந்துவிட்டீர்கள்!//
எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான் வால், ஞாபகம் இருக்கிறதா?

Beski said...

நன்றி கிகி,
உங்களுக்கும் ஒரு நேரம் வரும். அப்போது எழுதுங்கள். செய்கிற வேலையை எல்லாம் விட்டுவிட்டு வர வேண்டாம்.

நன்றி ஜனா,
அடடா! இப்போதுதான் சோகங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். அப்படி ஒன்றுமே இல்லையே!
கண்டிப்பாக எழுதுங்கள், ஒவ்வொருவர் பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்குமே!

☀நான் ஆதவன்☀ said...

இப்ப தான் பார்த்தேன் மாப்பி. தொடர் பதிவு போட்டதுக்கு நன்றி மாப்பி :)

☀நான் ஆதவன்☀ said...
This comment has been removed by the author.
☀நான் ஆதவன்☀ said...

//. சின்ன சின்ன குறிப்புகளுக்காக http://phpbeginners.blogspot.com மற்றும் என்னுடைய வேலைகள், கொஞ்சம் பெரிய குறிப்புகளுக்காக http://beski.wordpress.com. தமிழில் எழுதவேண்டும் எனத் தோன்றியபோது http://dinamdinam.blogspot.com எனபதைத் தொடங்கி எழுதிப் பார்த்தேன். //

அடங்கொக்கா மக்கா ..... பெரிய ஆளுதான்யா நீ :) நானெல்லாம் நேரா குப்பைத்தொட்டி தான் :)

//அதனால் ஒரு செண்டு பாட்டிலோடு வரவும்//

செண்ட் பாட்டில் மட்டும் போதுமா?

Nathanjagk said...

மாப்ள.. பிச்சுப்​போட்டுட்டீங்க புரோட்டா​வை! நல்லா ​பேரு வச்சிருக்கீங்க.. (உங்களுக்கு நாங்க எல்லாருடத ​சேந்து ​சோறு ​வைக்கி​றோம்)
நல்லா ​எழுதியிருக்கீங்க! வாழ்த்துகள்!

Beski said...

//☀நான் ஆதவன்☀ said...
செண்ட் பாட்டில் மட்டும் போதுமா?//

ஆதவா,
செண்ட் மற்றும் பாட்டில் என பிரித்து படித்துக்கொள்ளவும்.
:)

//ஜெகநாதன் said...
மாப்ள.. பிச்சுப்​போட்டுட்டீங்க புரோட்டா​வை! நல்லா ​பேரு வச்சிருக்கீங்க.. (உங்களுக்கு நாங்க எல்லாருடத ​சேந்து ​சோறு ​வைக்கி​றோம்)
நல்லா ​எழுதியிருக்கீங்க! வாழ்த்துகள்!//
நன்றி ஜெ மாம்ஸ்.
சோறு மட்டுமில்லை, பிஸ்சா, பர்கர் கூட வைக்கலாம், தப்பில்ல.

Venkatesh Kumaravel said...

இயல்பான நகைச்சுவை கவர்ந்தது.

ஆனாலும், இணைய வாசகர்களைப் பொறுத்த வரை சுற்றமும் நட்பும் தவிர, அமைதியான பின்னூட்டமிடாத ந்யூட்ரல் வாசகர்களை பிடிப்பதே கஷ்டம். அடிக்கடி பெயர்களை டேக் செய்துகொண்டே எழுதிக்கொண்டிருப்பது இப்படி மத்தவங்களுக்கு போர் அடிச்சிரும். அவர்கள் தான் பிரபல பதிவர்கள், தமிழிஷ் தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தூண்கள். பார்த்துக்கோங்க.

Beski said...

நன்றி வெங்கி,
பாத்துக்கறேன். இங்கிருக்கும் பல தூண்கள் தமிழிஷிலிருந்து வந்தவர்களாகத்தான் இருக்கும்.
தமிழ்மணத்தில் இணைப்பதில்லை. இனி இணைக்கலாமென்று இருக்கிறேன்.

CS. Mohan Kumar said...

உங்களை பத்தி தெரிஞ்சிக்கலாம்னு உள்ளே வந்தா உங்க நண்பர்கள் பற்றியும் தெரிய முடிந்தது. எனக்கும் உங்களை பார்த்து பொறாமை தான் எவ்வளவு நண்பர்கள்.. !!! நானும் சென்னை என்பதால் கூடிய சீக்கிரம் ஜோதியில் ஐக்கியம் ஆகிடுவேன்.

சிறுகதை பட்டறை எல்லாம் நடந்ததா? நான் தான் ரொம்ப லேட்டு.

நல்லா எழுதி இருக்கீங்க. வரலாறு ரொம்ப முக்கியம் தம்பி

Beski said...

நன்றி மோகன் குமார்.
சீக்கிரம் ஐக்கியம் ஆகிடலாம். இந்த பதிவர் சந்திப்பு தவறிவிட்டது. அடுத்த முறை பார்க்கலாம்.

srs said...

Dei whisky

eppada poethi marathuku keela eruntha?????

செ.சரவணக்குமார் said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பா.

Beski said...

நன்றி கரடி,
போதி மரமெல்லாம் இல்ல, வழக்கம்போல டாஸ்மாக்தான்.

நன்றி சரவணகுமார்.