தேன்கூடு - 2009/12/20

முக்கு: தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை இங்கே தனியே பதிவிடுவதால், இனி தேன்கூட்டில் அந்த மாதிரி தகவல்கள் இடம்பெறாது.


வெளிநாட்டில் அண்ணன் கிகி
அண்ணன் கிகி இப்போது சார்ஜாவில் இருக்கிறார், மனைவியுடன். சொந்த விசயமாக சென்றுள்ள அவர், டிசம்பர் முழுவதும் அங்கேதான் இருப்பார். குப்பைத்தொட்டி நான் ஆதவன் நான் ’கவனித்துக்கொள்கிறேன்’ என சொல்லியிருக்கிறான். நல்லா கவனிச்சுக்கோப்பா.


---

பதிவர் சந்திப்புகள்
வரும் வாரம் ஏதேனும் ஒரு நாள் நண்பர் ரோமியோபாய் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறார். வீட்டுக்குப் போகும் வழியில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிவிடுவதாகவும், அங்கேயே கும்மி அடிக்கலாமெனவும் சொல்லியிருக்கிறார். சைதை என்பதால் கேபிலும் கண்டிப்பாக வருவார். புலவன் புலிகேசியும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சைதை அருகில் இருப்பவர்கள், சந்திக்க ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக தொடர்புகொள்ளவும்.

இன்று ஈரோட்டில் பதிவர் சந்திப்பு. சென்னையிலிருந்து நண்பர்கள் தண்டோரா, கேபில், பப்லிசர் அகநாழிகை, சூர்யா, அப்துல்லா ஆகியோர் சென்றிருப்பதாக அறிகிறேன். சில காரணங்களால் செல்ல இயலாது போனது குறித்து வருத்தமே. இந்த சந்திப்பு நல்ல விதமாக நடைபெற வாழ்த்துக்கள்.

இந்த வார இறுதியில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எனது மாமாவுடன், பெங்களூரில். அங்கு சில கல்லூரி நண்பர்களையும், பதிவுலகில் பெங்களூரில் இருப்பவர்களில் எனக்குத் தெரிந்த ஒருவர், ஜெ மாம்ஸ் அவர்களையும் பார்க்கலாமென இருக்கிறேன். அதற்கேற்றார்போல நேரம் அமையவேண்டுமென வேண்டுகிறேன், காலத்திடம். அங்கு தங்கப்போகும் இடம் மடிவாலா என நினைக்கிறேன். அருகில் யாரேனும் இருந்தால் அழைத்துக்கொள்ளவும்.

---

சென்ற வருட மழை - வீடியோ
இப்போது பெய்யும் மழையைப் பார்த்ததும், சென்ற வருடம் டிசம்பர் 31 ஞாபகம் வந்தது. அதற்கு முன்பு மூன்று நாட்கள் பயங்கர மழை. நான்காவது நாள் போரடிக்கிறது என நண்பனும் நானும் தெரியாத்தனமா வெளியே வந்துவிட்டோம். மேற்கு மாம்பலம் பகுதி பெரும் வெள்ளம். அதிலும் அரங்கநாதன் சப்வே முழுதும் தண்ணீர், உள்ளுக்குள் ஒரு அரசுப் பேருந்துடன். அப்போது எடுத்த வீடியோ.


---

பட அறிமுகம்
The Moon

படத்தப் பத்தி சொன்னா சுவாரஸ்யம் போயிடும். ஆனாலும் கொஞ்சம் சொல்றேன். படத்துல ஒரே ஒரு கதாப்பாத்திரம்தான். ஆனா கடைசி வரை சுவாரஸ்யமா இருக்கும்.
எதிகாலக் கதைகளம். பூமியில் சக்தி இல்லை. அதனால் நிலவிலிருந்து சக்தி எடுக்கப்பட்டு பூமிக்கு கிடைக்கிறது. நிலவில் இருக்கும் சக்தி எடுக்கும் நிலையத்தில் இருக்கிறார் நமது கதாநாயகன். சக்தி சேமிக்கப்படும் கலனை எடுத்து பூமிக்கு அனுப்பும் வேலை. ஒரே ஆள்தான். மூன்று வருட ஒப்பந்தம் முடிந்து பூமிக்குத் திரும்பும் தருவாய். ஒரு விபத்து. முழித்துப் பார்த்தால் நிலையத்திற்குள். அங்கு உதவிக்கு இருக்கும் ரோபோவிடம் கேட்டால் விபத்திலிருந்து தப்பிவிட்டீர்கள் என்கிறது. பின்பு வழக்கம்போல வேலைக்குச் செல்லும்போது விபத்தில் சிக்கிய வாகனம். உள்ளே அடிபட்ட அவன். அவனை எடுத்துவந்து முதலுதவி செய்கிறான். அவன் எழுந்து பல கேள்விகள் கேட்கிறான். ஒரே போல இருக்கும் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை, நமக்கும்தான். மூன்று வருடம் தனியாக ஒருத்தன் இருக்கும்போது என்ன ஆகும்? ஒரு வேளை பைத்தியம் பிடித்துவிட்டதோ? கற்பனையில் இவ்வாறு யாராவது பக்கத்தில் இருப்பது போல கற்பனை செய்துகொண்டு பேசுவார்களாமே! அப்படி ஆகிவிட்டானோ என என் மனம் பல கற்பனைக் கதைகளைத் தேடியது. உண்மை என்ன என்பதே கதை.
படம் முழுக்க இந்த ஒரே உருவம்தான், இருவராக. ஆனால் அலுப்பு தட்டவில்லை. நிலவில் இருப்பது போன்றே உணர வைக்கும் செட் மற்றும் சிஜி. வித்தியாசமான எதிர்காலம் பற்றிய அனுமானத்துடன் கூடிய படம். ஒரே ஒரு உருவத்தையே படம் முழுக்க வைத்து, நம்மை போரடிக்காமல் வைத்திருப்பது சபாஷ். பார்க்கலாம்.

---

குறுந்தகவல் குறும்புகள்

நீ வெற்றி பெறும்போது
சொல்வேன்
மற்றவர்களிடம் பெருமையுடன்
அவன் என் நண்பன் என்று
நீ தோல்வியுரும்போது
சொல்வேன்
உன் அருகில் நின்று
நான் உன் நண்பன் என்று.

***

அப்பா:
என்ன சார், என் பொண்ணு கிளாமரா வரலைனு திட்டினீங்களாமே?
வாத்தியார்:
நாசமாப் போச்சு, நா கிராமர் வரலன்னு சொன்னேன்...

---

சொந்த சரக்கு
இரவல் கேட்பவர்கள்
எரிச்சலாய் தெரிகிறார்கள்
வாங்குகிறேன்
இரண்டாவது புத்தகம்.


பிக்கு: பின் குறிப்பு எழுதுறதுக்குக் கூட சிலர் டிஸ்கின்னு ஏன் போடறாங்கன்னு தெரியல. டிஸ்கின்னா disclaimer , அதாவது எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, இதுல வர்றது எல்லம் கற்பனை அப்டி இப்டின்னு தப்பிக்க வசதியான குறிப்புகள்தான் டிஸ்கில வரனும்ங்கிறது என்னோட அனுமானம். அதனால, முன் குறிப்ப முக்குன்னும், பின்குறிப்ப பிக்குன்னும் நான் எழுதப்போறேன்.
அப்றம், பதிவர் சந்திப்புகளின்போதும், பார்த்த நல்ல இடங்கள், ஓட்டல் ஆகியவற்றின் படஙகள் மொபைலில் இருக்கின்றன. ஆனால், டேடாகேபில் தம்பி கொண்டுசென்றுவிட்டதால் அவற்றைப் பற்றி எழுத முடியவில்லை. புது வருடத்தில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark

8 ஊக்கங்கள்:

☀நான் ஆதவன்☀ said...

ஏலேய் கிகி அண்ணன் கொஞ்சம் பிஸியா இருக்காப்ல போல. வெள்ளிக்கிழமை நடந்த பதிவர் சந்திப்புக்கு கூட அழைச்சேன். வேற வேலையா இருந்திருக்கு போல. கிருஸ்த்துமஸ்கு வீட்டுக்கு வரச்சொல்லி இருக்காரு மாப்பி.

அந்த பட அறிமுகத்திற்கு நன்றி மாப்பி. பார்க்க தூண்டியிருக்கிறது நீ சொன்ன விதம்

Nathanjagk said...

அதி பிரதாப​னை காலடியின் தலைமை அலுவலகத்திற்கு வரவேற்பதில் ​பெருமகிழ்ச்சி. காலடியின் சார்பாக ​எங்களின் ​மொக்கை ஆபிஸர் ​ஜெகநாதன் தங்களை எதிர்​கொள்ளுவார்.

Romeoboy said...

நண்பா வரும் சனிக்கிழமை சந்திக்கலாமா ? சைதை ஏரியால இருக்கிற நண்பர்கள் அங்க இருக்குற நல்ல டீ கடை (நான் சொல்லுறது ஒரிஜினல் டீ கடை புனைவு இல்ல) ஒண்ணு சொல்லுங்க.

புலவன் புலிகேசி said...

//புலவன் புலிகேசியும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது//

நிச்சயம் வருவன் தல...தேன்கூடு சுவையாய்...

Beski said...

நன்றி ஆதவா.

நன்றி ஜெ மாம்ஸ்.

நன்றி ரோமியோ,
இருந்தாலும் உங்களுக்கு குறும்பு அதிகம். அதான் வார இறுதியில் பெங்களூர் போகிறேன் என்று சொன்னேனே... சரி, சனிக்கிழமை கேபில்ஜி அனைவரையும் சந்திப்பதாகக் கூறிவிட்டார். நமது கச்சேரி இன்னொரு நாள்.

நன்றி புலிகேசி.

jothi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்,..

இனி வரும் காலங்களும் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கட்டும்

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க....

உங்களுக்கு எனதினிய பொங்கள் வாழ்த்துக்கள்.