ஒரகடம் டூ தாம்பரம்

சென்னையைப் போன்று பேருந்து வசதி வேறெங்கும் இல்லையென்ற நினைப்பு எனக்கு. சென்னையை விட்டால் பெங்களூர்தான் தெரியும். இங்கு அதிகம் பேருந்தில் செல்வதில்லை. பொதுவாக, எங்குமே செல்வதில்லை. பிறகு எப்படித் தெரியும்? ஆனாலும், ஊருக்குச் செல்லும்போது, தொடர்வண்டி நிலையம் செல்ல பேருந்துவசதி போதுமானதாக இல்லை. எப்படியும் இரு பேருந்துகள் மாறிச்செல்லவேண்டும். குழந்தை குட்டி வைத்துக்கொண்டு இதெல்லாம் எதற்கு என டாக்சிதான். ஆட்டோவெல்லாம் நமது பட்ஜெட்டுக்கு ஒத்துவராது!

டாக்சி சொல்லி, அது நேரத்திற்கு வந்து, பெங்களூர் டிராபிக்கிற்குள் புகுந்து ட்ரெயினைப் பிடித்து... அது தனி வேட்டை. இப்போது விசயம் பெங்களூர் பற்றியதல்ல. சென்னையப் பற்றி. கொஞ்ச நாட்களுக்கு முன்பு, மாமா செங்குன்றம் பகுதியிலிருந்தார். 114தான் நமக்கு ரெகுலர். அங்கிருந்து நேரே அசோக்பில்லர் அந்து இறங்கிவிடலாம். டிக்கட் 17 அல்லது 20 இருக்கலாம், சரியாக ஞாபகம் இல்லை. ஏசி பஸ் என்றால் 45 என நினைக்கிறேன். 

அதில் ஒரு குறிப்பிட்ட விசயம். செங்குன்றத்திலிருந்து கோயம்பேடு வர 17 ரூபாய், வடபழனி வழி செல்லும் பேருந்தில் வந்தால். அதுவே கோயம்பேடு பேருந்து என்றால் 12 தான். அதான் எப்படி என்று புரியவில்லை. வடபழனி வழி செல்லும் பேருந்தில் கோயம்பேடு என்று டிக்கட் எடுத்தாலும் MMDA வரை கொடுக்கப்படுகிறது. என்ன கணக்கோ!

இதேபோல, செங்குன்றத்திலிருந்து பிராட்வேக்கும் ஒரு பேருந்து உண்டு, 252. பர்மா பசாருக்குச் செல்ல இதில் செல்வதுண்டு. இதுவும் இருபது ரூபாய்க்குள்தான் இருக்குமென்ற ஞாபகம். இப்போது மாமா ஒரகடத்திற்கு வந்துவிட்டார்.

தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில், முதலில் படப்பை வரும். பிறகு ஒரகடம் சந்திப்பு, அதன்பின் வாலஜாபாத் வருவதற்கு முன்பு, வாரனவாசி என்றொரு நிறுத்தம் உண்டு. அங்கிருந்து வடக்கே சில கிலோமீட்டர்கள் சென்றால் ஒரு டவுன்சிப் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்திற்கு முதலில் குடிவந்தவர் எனது மாமாவாகத்தான் இருக்கும். சுற்றிலும் காடு, ஆங்காங்கே சில கிராமங்கள். நடுவே இந்த டவுண். 

தனித்தனி வீடுகள். சிலபல தெருக்களை முடித்திருக்கிறார்கள். ஆனால் மாமாவும், எதிர்வீட்டில் ஒருவர் மற்றும் பக்கத்து வீட்டில் ஒருவர் என மூன்று குடும்பங்கள்தான். முதல் தெருவில் ஒருவர் இருக்கிறார். சிலர், வார இறுதியில் வந்து தங்கிச் செல்வதாகக் கேள்வி. இன்னும் உள்ளே கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாதுகாப்பு பரவாயில்லை, எப்போதும் காவலர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற முறை அங்கு சென்று, தங்கி, சுற்றவேண்டியிருந்தது. பெங்களூரில் இருந்து ட்ரெயின், செண்ட்ரல் வரை. அரக்கோணத்தில் இறங்கி, காஞ்சிபுரம் வந்து, வாரனவாசி வந்திருக்கலாம். செண்ட்ரல் செல்லும் அதே நேரம் வீட்டில் இருந்திருக்கலாம். ஆனால், காலை 4 மணிக்கு எழ முடியவில்லை. நேரே செண்ட்ரல்தான். 

அங்கிருந்து நடந்து பார்க் ஸ்டேசன். 10 ரூபாய் தாம்பரத்திற்கு. அங்கிருந்து காஞ்சிபுரம் பஸ். 21 ரூபாய் டிக்கட், முப்பது கிலோமீட்டர் இருக்கும், வாரனவாசிக்கு. அங்கு இறங்கி டவுன்ஷிப் ஷட்டில் வண்டியில் சென்றுவிடலாம். ஷட்டில் 24 மணி நேரமும் இயங்கும்.

ஒரு நாள் அங்கிருந்து அனகாபுத்தூர் வரவேண்டியிருந்தது. திங்கட்கிழமை. காலை ஒன்பது மணிக்கு, வரும் பேருந்து அனைத்தும் கூட்டம்தான். வேறு வழியில்லை, கூட்டத்தோடு கூட்டமாக கலந்தாயிற்று. தாம்பரம் 21 ரூபாய். அங்கிருந்து பல்லாவரம் 6 ரூபாய். பல்லாவரத்தில் இறங்கி, பம்மல் சாலையில் ஒரு பேருந்து நிறுத்தம் உண்டு. அங்கிருந்து வரிசையாக ஆட்டோக்கள் பம்மல் செல்லுகின்றன. 10 ரூபாய் தலைக்கு. 

மீண்டும் அங்கிருந்து அண்ணாநகர் செல்லவேண்டியிருந்தது. பல்லாவரத்திலிருந்து ஆவடி பேருந்தில் திருமங்கலம், 12 ரூபாய் என ஞாபகம். அங்கிருந்து ஷேர் ஆட்டோ 7 ரூபாய்.

மீண்டும், அண்ணாநகர் முதல் திருமங்கலம் 7 ரூபாய். திருமங்கலம் முதல் தாம்பரம் சானடோரியம் 12 ரூபாய். அங்கிருந்துதான் காஞ்சிபுரம் பேருந்து எல்லாம் புறப்படும். அங்கிருந்து வாரனவாசி 21 ரூபாய். பேருந்தில் செல்வதால் நேரம் அதிகமாக செலவழிப்பதுபோல தோன்றும். ஆனால் உட்கார இடம் கிடைத்துவிட்டால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கத்தோன்றாது.

-பெஸ்கி


Share/Bookmark
Read More!

பெங்களூரில் சில நம்பிக்கைகள்

ஒரே நாளில் இரு வெவ்வேறு மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் ஒரு துருவம் என்றால் இன்னொருவர் எதிர் துருவம்.

குக்கரில் விசில் வருவதில்லை. கேஸ்கெட்டை மாற்ற வேண்டும் என்றார் தங்கமணி. அழைத்துக்கொண்டு மெயின் ரோடு அருகே இருக்கும் கடைக்குச் சென்றேன். கேஸ்கெட்டையும் எடுத்துச் சென்றிருந்தோம். அது ஒரு ஹிந்திவாலா கடை. கொண்டுவந்தது கொடுத்ததும் உள்ளே சென்று, கொஞ்ச நேரம் தேடிய பின், ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். நான் ஒன்றன்மேல் ஒன்று வைத்துப் பார்த்தேன். அவன் கொடுத்தது கொஞ்சம் பெரிதாக இருப்பதுபோல் இருந்தது. கேட்டதற்கு, சரியாய் வரும், இல்லையென்றால் திரும்ப வாங்கிக்கொள்கிறேன் என்றான் அந்தப் பையன்.

வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சந்தேகப்பட்டபடி கொஞ்சம் பெரியதுதான். மறுநாள் கொண்டுபோய் கொடுத்ததற்கு, மீண்டும் தேடி எடுத்து இன்னொன்றைக் கொடுத்தான். அதையும் ஒன்றன்மேல் வைத்துப் பார்த்து, கொஞ்சம் பெரிதாக இருக்கிறது என்றேன். கொஞ்சம் மேலே நகர்த்தி  சரியாக இருக்கிறது என்றான். இப்போது கீழே சரியாக இல்லை. அதைச் சொன்னதற்கு, சரியாக வரும் மூடியைக் கொண்டுவந்தால் காசை திரும்பத் தருகிறேன் என்றான்.

கண்முன்னே நடக்கிறது. நன்றாகத் தெரிகிறது சரியில்லை என்று. எந்த தைரியத்தில் இப்படியெல்லாம் செய்கிறான் என்று தெரியவில்லை. ஐம்பத்தைந்து ரூபாய்தானே, இதற்காக திரும்பியா வரப்போகிறார்கள் என்ற நினைப்பாக இருக்கும். இப்படியே எவ்வளவு சம்பாதிப்பான். ஒரு ரூபாயாக இருந்தாலும் திருப்பி வாங்கித்தான் நமக்குப் பழக்கம்.

பெங்களூர் வந்ததிலிருந்தே இந்த சில்லரை விசயம் கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருக்கிறது. வாடிக்கையாளரை, பணக்காரன் என்று நினைக்கிறார்களா, அல்லது அவர்கள் பணக்காரர்களா தெரியவில்லை. ஒன்று இரண்டு எல்லாம் தருவதும் இல்லை, எந்த பதிலும் சொல்வதும் இல்லை. கேட்டாலும், சில்லரை இல்லை என்றுதான் பதில் வருகிறது. எந்த அளவுக்கு வடிக்கையாளர்கள் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது இங்கு வாழ.

பத்து ரூபாய் சில்லரை இல்லையென்றால், அடுத்த வாரம் தாங்க எனச் சொல்லும் கறிக்கடை பாயும் இதே ஏரியாதான். இருநூற்றி இருபது ரூபாய் பில்லைப் போடுவிட்டு, முன்னூறு கொடுத்தால், சில்லரை இல்லையென்று இருநூறு எடுத்துக்கொள்ளும் மெக்கானிக்கும் இதே ஏரியாதான். இவற்றையெல்லாம் எப்போதாவதுதான் பார்க்கிறேன். சில்லரையை ஆட்டயப் போடுபவர்களைத் தினமும் சந்திக்கவேண்டியதிருக்கிறது.

இவனை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று, வீட்டிற்குச் சென்று, மூடியை எடுத்துவந்து, சரியில்லை என்று மாட்டிப் பார்த்தாயிற்று. அவனும் செம கடுப்பில் இருந்தான். சில்லரை இல்லை, 45 கொடுங்க 100 தருகிறேன் என்றான். முந்தை நாளும் இதே கதைதான், சில்லை இல்லையென, 55 சரியாக வாங்கினான். சில்லரை விசயத்தில் சரவணபவனை அடித்துக்கொள்ளமுடியாது. 45 கொடுத்து 100 வாங்கிவந்தேன். அந்தப் பக்கம் இன்னொரு கடை இருக்கிறது, அங்கே செல்லலாம் என்றார் தங்கமணி. என்ன இருந்தாலும் விசில் வராதது இன்னும் பிரச்சனைதானே.

இன்னொரு கடைக்குச் சென்றோம். அதே மாதிரியான பாத்திரக்கடை.  அதே மாதிரி ஹிந்திவாலா. ஆனால் அதேமாதிரி கூட்டம் இல்லாமல் இல்லை. முன்னால் மூன்றுபேர் நின்றுகொண்டிருந்தார்கள். இருந்தாலும் என்ன என்றார், கேஸ்கெட் என்றோம், காத்திருக்கச் சொன்னார். இருவரை அனுப்பிவிட்டு நம்மிடையே வந்தார். இன்னொருவருக்கு சில தட்டுகளைக் கொடுத்துப் பார்க்கச் சொல்லியிருந்தார்.

வாங்கிப் பார்த்துவிட்டு, கேஸ்கெட் நன்றாகத்தான் இருக்கிறது, ஏன் மாற்றுகிறீர்கள் என்றார், விசில் வரவில்லை என்றோம். தண்ணீர் ஓரங்களில் வடிகிறதா என்றார், இல்லை என்றார் தங்கமணி. தண்ணீரில் நனைத்து உபயோகியுங்கள் ஒழுங்காக வரும் என்றார். தங்கமணி தயங்கினார். மூடியை வாங்கிப் பார்த்தார். சேப்டி வால்வை சோதித்தார், அதுவும் நன்றாக இருக்கிறது என்றார். உபயோகித்துப் பாருங்கள், சரியில்லை என்றால் சேப்டி வால்வு மாத்திப் பார்க்கலாம் என்றார்.

தங்கமணி, பரவாயில்லை இப்பவே அதை மாற்றித்தாருங்கள் என்றார். இருபது ரூபாயை ஏன் வீணாக்குகிறீர்கள், உபயோகித்துப் பாருங்கள் என்றார். தங்கமணி வற்புறுத்தவே, அதை மாற்றிக்கொடுத்தார். இவரும் இதே ஏரியாவில்தான் கடை வைத்திருக்கிறார். பெங்களூரை நினைத்து ஏறிய டென்சனையெல்லாம் குறைத்து அனுப்பினார். இவர்களைப் போன்றவர்கள்தான் நான் இன்னும் இங்கே இருக்கக் காரணம். இவர்களுக்கெல்லாம் நன்றி.

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!

டிவி வாங்குவது எப்படி

ஊட்டி நண்பர் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஊரிலிருந்து ஒரு "கலைஞர் டிவி"யைக் கொடுத்துவிட்டிருக்கிறார்கள், நண்பர் ஒருவரிடம் இருக்கிறது, சென்று வாங்கவேண்டும் என்று. இரண்டு வாரத்திற்கு முன்னால் கிளம்பலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. வெள்ளி இரவு மறுநாள் போகலாம் என பேசிக்கொண்டோம். மறுநாள் காலை கல்லூரியில் படித்த நண்பனின் நிச்சயதார்த்தம். அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன். மழை வேறு. வீட்டிற்கு கிளம்பவும் மழை விடவும் சரியாக இருந்தது. வழக்கம்போல மழைவிட்ட டிராபிக். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அப்போதுதான் நண்பர் போன் செய்தார், இப்போது போகலாமா என்று. டிராபிக் அதிகமாக இருக்கிறது, இன்று வேண்டாம், நாளை போகலாம் என்றேன். என்ன நினைத்தாரோ, மாலை அவரே கிளம்பிவிட்டார், பேருந்தில் போகலாமென்று. சரி, நானே வருகிறேன் என்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். வழக்கம்போல டிராபிக். இங்கு, எப்போது எப்படி டிராபிக் இருக்குமென்று கனிக்கவே முடியாது. பீக் அவர் என்று நினைத்து வரும்போது குறைவாக இருக்கும். சில நேரம் இரவு பதினோரு மணிக்கு முட்டிக்கொண்டு நிற்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த ஹைபர் சிட்டி சிக்னலைக் கடப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.



Share/Bookmark
Read More!

கடந்த வெள்ளிக்கிழமை

இந்த வெள்ளியும் வழக்கம்போல விடிந்தது. முந்தைய நாள் மாலை மழை பெய்தபடியால் அன்றும் பெய்யும் என்றே தோன்றியது. அதனால் அன்று காரில் கிளம்பினேன். அதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை, உடன் பணிபுரியும் தோழி ஒருவருக்குப் பிறந்தநாள் என்று மதிய உணவுக்கு வெளியில் செல்லவேண்டியது இருந்தது. மூன்று மணி நேரம் காலி. வந்த பின்னும் அங்கே இங்கே என்று சிலருக்கு உதவி செய்தபடியால், என்னுடைய வேலைகளை முடிக்க இயலவில்லை. அதனால் வெள்ளிக்கிழமை அந்த வேலைகளையும் சேர்த்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் என்னை புகுத்திக்கொண்டேன்.

அந்த முந்தைய நாள் மதிய உணவு பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். எப்படித்தான் அப்படித் திண்கிறார்களோ? என்ன முறையோ அது? ஒன்றும் புரியவில்லை. ஸ்டார்ட்டர் என்று சொல்லி வகை வகையாக அடுக்கித் திண்கிறார்கள். இதில் முதலில் ஒரு சூப்பும் கடைசியில் ஒரு மேங்கோ லஸ்ஸியும் அடக்கம். நானும் சூப்பில்தான் ஆரம்பித்தேன், ஆனால் லஸ்ஸி வரைக்கும் வர முடியவில்லை. அதற்குள் வயிற்றுக்குள் இடம் இல்லை. அதன் பிறகுதான் மெயின் கோர்சாம். முடியல. யாரோ ஆர்டர் செய்த சிக்கன் பிரைடு ரைசில் கொஞ்சம் சாப்பிட்டேன். ஆர்டர் செய்யும்போதே சொன்னேன், வீணாக்கினால் எனக்குப் பிடிக்காது, குறைவாகச் சொல்லுங்கள் என்று. அப்படி இருந்தும் ஒரு புலாவ் அப்படியே இருந்தது.

பக்கத்தில் இருந்த கல்கத்தாக்காரனிடம் சொன்னேன், நான் இப்படியெல்லாம் சாப்பிடுவது இல்லை, எங்கள் ஊரில் நேரடியாக மெயின் கோர்ஸ்தான். சில நேரங்களில் இந்த ஸ்டாட்டர்களைச் சாப்பிடுவதும் உண்டு, ஆனால் அதை நாங்கள் சைடு டிஸ் என்று சொல்லுவோம் என்றேன். பயலுக்குப் புரிந்துவிட்டது. மேலும் கேட்டேன், இது என்ன வழக்கம் என்று, அவனுக்கும் தெரியவில்லை எப்படி இதுபோன்று சாப்பிடப் பழகினானென்று. ஆனால், கொஞ்சம் சரக்கு உள்ளே சென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த உணவகத்தில் ஆல்ககால் அனுமதி கிடையாது.



Share/Bookmark
Read More!

ஹைக்கூ அல்ல குக்கூ கவிதை



          அருகில் உள்ள மரங்கள் 
          
          அகன்று  செல்ல,

          தொலை தூர மரங்கள்

         துரத்தி வர,

        ரசிக்கிறேன் இயற்கையை

       ரயில் பயணங்களில்........










Share/Bookmark
Read More!

உண்மையான அன்பு

















Share/Bookmark
Read More!

ஒரு வழியா ஊருக்குப் போனேன்

வலையுலகில் மேய்ந்துகொண்டிருக்கும்போது சில நேரங்களில் ஓரங்களில் வரும் கிளப் மகிந்த்ரா அல்லது வேறு ஏதாவது டூர் விளம்பரத்தைப் பார்ப்பேன். நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைவதில்லை என எண்ணியதில்லை. இப்போதுதான் புரிகிறது. வீட்டிலிருப்பவர்கள்தான் வெளியே செல்ல திட்டமிட வசதியாய் இருக்கும். வெளியே இருக்கும் நமக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிற்குச் செல்லத்தான் திட்டமிடத்தோன்றுகிறது. வீட்டைவிட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன, ஆனால் நான் மாறவேயில்லை. இப்போதும் விடுமுறை வந்தால் பெற்றோர் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லத்தோன்றுகிறது.

சென்னையில் ஐந்து வருடங்களுக்கு மேல் குப்பை கொட்டியாகிவிட்டது. இப்போது பெஙளூரிலிருந்து. சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வது எவ்வளவு சுலபமென்று இப்போதுதான் தெரிகிறது. இங்கு வந்தும் இரு முறை சென்று வந்துவிட்டேன். ஆனால், இந்த முறை பல சிரமங்கங்களுக்கிடையே செல்ல நேர்ந்தது.



Share/Bookmark
Read More!

நான், அட்டக்கத்தி மற்றும் சில

வழக்கமாக தமிழ்ப் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. தேவையில்லாமல் நூறு ரூபாயையும், மூன்று மணி நேரத்தையும் வீணடிக்கும் அளவுக்கு வேலை இல்லாமல் இல்லாததால், தேர்ந்தெடுத்த படங்களை மட்டுமே சென்று பார்ப்பேன். சமீப காலமாக நிறைய தம்ழ்ப்படங்களைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. நல்லதுதான்.
இவைதான் சமீபத்தில் பார்த்த படங்கள்.





Share/Bookmark
Read More!

அலுப்பே நெருங்காதே

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின், அதை ஓட்டுவது எப்படி இருந்தது? முதன் முதலில் வாங்கிய நோக்கியா 1100 தொலைத்த தூக்கங்கள் எத்தனை? முதன் முதலில் குடித்த பாதி பாட்டில் பீர், கால் டம்ளர் ரம் - இவைகள் தந்த போதை இப்போது எதிலும் கிடைக்காதது ஏன்? பள்ளி நண்பர்களுடனான முதல் சுற்றுலா, கல்லூரி நண்பர்களுடனான கடைசி சுற்றுலா ஏக்கம் தருவது ஏன்? முதல் பணியில் வெற்றிகரமாக செய்த சிறு வேலை தந்த மகிழ்ச்சி எங்கே? முதல் பதிவு, முதல் பின்னூட்டம் தந்த கிளுகிளுப்பு இப்போது எப்படிக் கிடைக்கும்?

எந்த ஒரு விசயத்திலும், முதலில் இருக்கும் சுவாரஸ்யம் கடைசி வரை இருப்பதில்லை. எனது வீட்டில் மொத்தம் நான்கு அறைகள். எனது ஒரு வயது குழந்தை, நாள் முழுதும் அதற்குள்தான் சுற்றிச் சுற்றி வருகிறாள். திங்கள் முதல் வெள்ளி வரை அந்த அறைகள்தான். நடக்கிறாள், ஓடுகிறாள், விழுகிறாள், அழுகிறாள், பாடல் கேட்கிறாள், பார்க்கிறாள், என்னுடன் விளையாடுகிறாள், சிரிக்கிறாள். சில நேரங்களில், ஒரு பொருளை கைகளில் வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பல கோணங்களில் பார்க்கிறாள். வீட்டுச் சாவியைக் கொடுத்தால், ஒரு மணி நேரம் வரை அந்த ஆராய்ச்சி நடக்கும். சிறு வயதில் நானும் இப்படித்தான் ஒரே இடத்தில் உட்கார்ந்து அலுக்காமல் சிறு செயல்களைச் செய்துகொண்டு இருந்திருப்பேன், என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.



Share/Bookmark
Read More!

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும், அவள் நடந்து கொள்ளும் விதம், புதிது புதிதாக அவள் பார்ப்பது, கற்றுக்கொள்வது, பிரதிபலிப்பது என்று ரசித்துக்கொண்டே இருக்கலாம். இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டாள். காலையில் எங்காவது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பரப்பி வைப்பதுதான் இப்போது பிரதான வேலை. பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. திரும்பவும் எடுத்து அடுக்கி வைப்பது நமது வேலைகளில் ஒன்றாகிவிட்டது. சென்ற வாரம் வேளாங்கண்ணி சென்று மொட்டை போட்டு காதி குத்தி வந்தோம்.

வேளாங்கண்ணி இப்போது எனது பார்வையில் புதிதாகத் தெரிகிறது. மற்றவர்கள், அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள். ஒருவேளை எனக்கு சில அகக் கண்கள் திறந்திருக்கலாம். கடைகளில் எல்லாம் அதிக விலை. ஒரு தண்ணீர் பாக்கட் 3 ரூபாய்க்கு பேருந்து நிலையம் அருகில் வாங்கினேன். விலைக்குத் தகுந்த தரமான உணவை எங்கும் பார்க்கவில்லை. பேருந்து நிலையத்தின் உள்ளேயே டாஸ்மாக். பயணிகள் காத்திருக்கும் இடம்தான் பாராக இருக்கிறது. கோவிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டேபோகலாம். சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு அரசு அலுவலகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இதைக் கவனிக்கவேண்டிய பாதிரியார்கள் என்ன சேவை செய்கிறார்களோ தெரியவில்லை. வேளாங்கண்ணி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதினால் நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்கள்தான் அதிகமாக இருக்கும். புனிதப் பயணம் என்று சென்று மனத்தாங்களோடுதான் திரும்பி வரவேண்டியிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த படங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் கலகலப்பு திரையரங்கில் பார்த்தேன். ஓகே ஓகே ஆரம்பம் முதல் கடைசி வரை தொய்வு இல்லாமல் சென்றது. சந்தானம்தான் காரணம். கலகலப்பு ஆரம்பத்தில் தொங்கியது. ஆனால் பின்பாதி சேர்த்து வைத்து சமன் செய்தது. ஆனால் சந்தானம் ஒருவரே காரணம் என்று சொல்ல முடியாது. இரண்டையும் ஒப்பிட்டால் கலகலப்பில்தான் வயிறு வலிக்க சிரித்தேன். ஆனால் நல்ல படம் என்று பார்த்தால் அது ஓகேஓகேதான்.

அடுத்து சில ஆங்கிலப் படங்கள் பற்றி. கடைசியாகப் பார்த்த படங்கள்: Avengers, Safe House மற்றும்  Prometheus. Avengers பற்றிச் சொல்லவே வேண்டாம், அட்டகாசம். ஆனால் அது பற்றிய கருந்தேள் கண்ணாயிரம் எழுதிய தொடர் பதிவுகள் அதை விட அட்டகாசம். Safe House: சமீபத்தில் இதைப் போன்ற மிகசிறந்த விருவிருப்பான திரைக்கதை மிகுந்த படத்தைப் பார்த்ததே இல்லை என்ற உணர்வைக் கொடுத்த படம். The Bourne வகையறா என்றாலும் புதிதாக இருந்தது. Prometheus பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. சுத்த போர். ஒரு வேளை தமிழில் பாத்ததால் அப்படி இருக்கலாம். ஆங்கிலத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்.

மேலும் சில படங்கள் பற்றி: Contraband, இதில் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் தொய்வில்லாத படம். The Divide என்ற படம் ஒன்று பாத்தேன். தூக்கத்தைக் கெடுத்த படம். Blindness வகையறா... உலகம் அழிந்த நிலை. தப்பித்த சில பேரின் மன நிலைகளைப் பிரதிபலிக்கும் படம். The Awakening என்று ஒரு படம். The Sixth Sense வகைப் படம். கடைசி இடத்தில் அவிழ்க்கப்படும் முடிச்சு, திரும்பவும் படத்தை ஆரம்பத்தில் இருந்து நம்மைப் பார்க்க வைக்கும், நன்றாகத்தான் இருந்தது.

என்னதான், நா ரொம்ப பிசி, என்று ஒப்புக்குச் சொன்னாலும், சிலருடைய பதிவுகளை எப்போதுமே படிக்கத் தவறுவது இல்லை. கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன் மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் ஆகியோரது பதிவுகளை எப்போதுமே படிப்பதுண்டு. கூகுள் பிளஸ் ஒரு நாளைக்கு சில வேளைகள் சென்று நாட்டு நடப்பதைத் தெரிந்துகொள்கிறேன். ஆனால் எதையும் எழுதுவது இல்லை, எதற்கும் பதிலிடுவதும் இல்லை. எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்!

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!

தூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும்


இந்தப் படத்துக்கும் நமக்கும் ரொம்ப நாளா ஒரு கனெக்சன். சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம நண்பன் நம்மல சைடு போஸ்ல பாத்துட்டு, நீ அந்தப் போஸ்டர்ல இருக்குற மாதிரியே இருக்கன்னு ஒரு பிட்டப் போட்டான். போதாக்குறைக்கு அவன் ஒரு ஹாண்ட் தேர்ந்த கணினிக் கலைஞன் வேற. நம்மல அபப்டி நில்லு, இப்படித் திரும்பு, கொஞ்சம் குனி அப்டின்னு ஆங்கிள் ஆங்கிளா போட்டோ எடுத்து அப்படியே ஒரு வேலை பண்ணிக் காட்டினான். அதான் இது...
அப்பவே சொன்னான், இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அப்டின்னு. அப்பல்லாம் நமக்கு படம் பாக்குறதுல ஆர்வம் இருந்தாலும், புடிச்சது என்னவோ ஒரு ஓபனிங் சாங், கொஞ்சம் பைட்டு, அஞ்சு பாட்டு, அதுல ஒன்னு குத்து (படம் முடியிறதுக்கு முன்னாடி), ஒன்னு மெலொடின்னு இருக்குற தூயத் தமிழ் படங்கள் மட்டுமே. தமிழ் மேல அவ்ளோ பற்று. அப்படியே இன்கிலீசுப் படம் பாத்தாலும், ஒன்னு ஜாக்கிசானுக்காக இருக்கும். இல்லைனா ஏதாவது பெரிய மிருகம் வரனும். அப்பத்தான் பாப்பேன். அப்படி இருந்த காலத்துல அவன் சொன்னத அவ்வளவா கண்டுக்கல. ஏன்னா, ஹீரோ தெரியலன்னா அந்தப் படத்தப் பாக்குறது தெய்வக்குத்தமா இருந்துச்சு.

அப்றம் கொஞ்ச நாள் கழிச்சு, அதே போஸ்டர ஒரு தமிழ்ப் படத்துக்குக் காப்பி அடிச்சிருக்குறதாச் சொன்னான். நம்ம ஆளு பண்ண அளவுக்கு பெர்பெக்ட்டா அது இல்ல. இதுல நம்ம ஆளுக்கு ஒரு பெரும. அப்பவும் இந்த படத்தப் பத்தி சொன்னான். நமக்கு லேசா ஒரு ஆச. சரி, பாக்கலாமேன்னு அவன் கிட்ட கேட்டேன். தேடிப் பாத்துட்டு அந்த டிவிடி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லிட்டான். சரின்னு விட்டுட்டேன்.

திரும்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு படம் வந்துச்சு, மந்திரப் புன்னகை. படம் இன்னும் பாக்கல. ஆனா அதோட கதை இந்த கதைய ஞாபகப்படுத்துச்சு. இப்ப முன்னாடி மாதிரி இல்ல. மகா மொக்க படம் கிடச்சாலும் சப் டைட்டிலோட இருந்தா உக்காந்து பாக்குற பக்குவம் வந்துருச்சு. ஏற்கனவே டிசம்பர்ல இந்தப் படம் டிவிடி வாங்கிப் பாத்ததுல பாதிதான் பாக்க முடிஞ்சது. அந்த வெறி வேற, ஒரு வழியா வேற ஒரு வழியா எடுத்து, நேத்துதான் பாத்தேன். தேடுனது வீண் போகல. இதுவும் ஒரு வித்தியாசமான படம்தான்.

ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் கதாநாயகன், இன்னும் கொஞ்சம் மெலிந்தால் காணாமல் போய்விடும் அளவுக்கு எழும்பும் தோலுமாக. தூங்காத வியாதி, ஒரு வருடமாகத் தூங்கவில்லை. அதனால் ஏற்படும் விளைவுகளே காட்சிகள். அதே தொழிற்சாலையில் வேலை செய்யும் இன்னொருவனால் பிரச்சனை வருகிறது. சொன்னால் யாரும் ஏற்கவில்லை, தொழிற்சாலையில் அப்படி ஒருவன் வேலை செய்ததற்கான ரெக்கார்டே இல்லை. அடிக்கடி சந்திக்கும் அவனால் வரும் தொல்லைகள். அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் எனத் தேடிப்போகும்போது வரும் திருப்பங்கள். இதுதான் படம்.



கதாநாயகன் கிறிஸ்டியன் பேல். இதற்கு முன்னால் காஸ்ட் அவே (Cast Away) படத்தில் டாம் ஹாங்க்ஸ் உடம்பை கூட்டிக் குறைத்து நடித்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஆனால் இதில் அதற்கும் மேல், இப்படி உடம்பைக் குறைக்க முடியுமா என்று நம்பவே முடியவில்லை.சில நேரங்களில் அந்த உடம்பைப் பார்த்தால் பயமாகக் கூட இருக்கிறது. எப்படித்தான் இப்படியெல்லாம் நினைத்த மாதிரி கூட்டி/குறைக்கிறாரோ தெரியவில்லை.

படத்தோட வெற்றியே, வித்தியாசமான படம்னு தெரிஞ்சு உக்காத்தாலும், ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாடி ட்விஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சிருந்தும், கடைசியில எல்லாத்துக்கும் விடை இருக்கும்னு தெரிஞ்சிருந்தும் நான் எதிர்பாக்காத முடிவுகள், ஆச்சர்யப்படவைத்த முடிவுகள் கொண்ட, வித்தியாசமான, கணிப்புக்கு வெளியே இருக்கும் திரைக்கதைதான். அதற்கும் மேல், படம் முடிந்த பின்னாலும், ஒவொரு காட்சிக்கும் முடிச்சுப் போட்டு சிந்திக்கும் (வழக்கம்போல) ஒரு மனநிலையை ஏற்படுத்துகிறது படம், முக்கியமாக அந்த ஹேங்மேன் விளையாட்டு, காப்பி ஷாப், சில கதாப்பாத்திரங்கள்.

பார்க்கவேண்டிய படம்.

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!

தென்மேற்குப் பருவக்காற்று

நேற்று தென்மேற்குப் பருவக்காற்று பார்க்கச் சென்றிருந்தேன். பதிவர் வண்ணத்துப்பூச்சி சூர்யா அழைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றும், பதிவர்களை அழைத்திருப்பதாகவும் சொன்னார். Four Frames எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்ததால் வசதியாகப் போயிற்று. கிளம்பும் வேளையில் தூறல் ஆரம்பித்தது. இருந்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்திலும், பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும் கிளம்பிவிட்டேன். பலர் தூறல் காரணமாக வரவில்லை. இருப்பினும், பிரபல பதிவர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கிசேகர், சூர்யா, காவேரி கணேஷ், சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட சுரேகா ஆகியோர் வந்திருந்தனர். மற்ற அனைவரும் பத்திரிக்கையாளர்கள் என்று நினைக்கிறேன், எனக்கு யாரையும் தெரியவில்லை. சூர்யாதான் ஒவ்வொருவர் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.
டைட்டில் சாங் அருமை. பாடல் மட்டுமல்ல, காட்சிகளும்தான். “கள்ளிக்காட்டில் பொறந்த தாயே...”, கிராமத்து தாய்மார்களின் ஸ்டில் படங்களுடன் வந்தது அருமையாகவும் வித்தியசமாகவும் இருந்தது. அது முதலே திரை முழுவதும் தேனி மாவட்டத்தில் செந்நிறம். அந்த நிறமே என்னை கிராமத்தில் இருப்பது போன்று உணர்வைத் தந்தது. பல தாய்மார்களின் படங்களுடன் கடைசியில் படத்தின் முதல் நாயகி சரண்யாவின் படத்துடன் பாடல் முடிகிறது. பாடலும் படங்களுமே இது ஒரு அம்மாவைப் பற்றிய படம் என்பதைச் சொல்லியது.

படம் ஆரம்பித்த முதல் அரைமணி நேரம் கலங்கிப் போனேன். மிக மிக நாடகத்தனமான காட்சிகள், ஒன்றுக்கொன்று ஒட்டாத காட்சிகள். தெரியாத்தனமா வந்துட்டோமோ என்று எனக்கு பயம். இருந்தாலும் அந்த பயம் போனதே தெரியாமல் காட்சிகளைக் கொண்டுசென்றிருப்பது ஆச்சர்யம்.

இளம் வயதிலேயே விதவையான தாய், தனது மகனைப் பாடுபட்டு வளர்க்கிறாள். மகன் மீது அவ்வளவு பாசம். மகன் வழக்கம்போல வெட்டியாக ஊர் சுற்றும் பிள்ளையாக இல்லாமல், ஆடு மேய்த்துக்கொண்டும் சிறிது சேட்டை செய்துகொண்டும் இருக்கிறான். பூச்சில்லாமல் செங்கல் சுவருடன் நிற்கும் வீடு. அதை மகன் கல்யாணத்திற்காக வாங்கும் பணத்தில் பூசி விடலாம் என்ற எண்ணம் அம்மாவுக்கு. தனது தூரத்து உறவில் அம்மா இல்லாத பெண்ணுக்குப் பேசி வைக்கிறாள்.

ஆடி திருடும் கும்பல் ஒன்று இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு பல்வேறு ஆடுகளைத் திருடிக்கொண்டிருக்கிறது. படம் ஆரம்பிப்பதே ஆடு திருவதில்தான். வெயில் பட ஆரம்பம்போல ஒரு உணர்வு. அந்த கும்பல் ஒரு முறை நமது கதாநாயகன் பாதுகாக்கும் ஆட்டு மந்தையில் திருடுகிறது. இருவர் குழுவுக்குமான சண்டையில் கதாநாயகன் கும்பலில் ஒருவரைப் பிடித்துவிட, மறைப்பை விலக்கி முகத்தைப் பார்த்தால் பெண், கதாநாயகி. அதிர்ச்சியில் உறைந்துபோன நாயகன் அவளை விட்டுவிடுகிறான். இந்த நேரத்தில்தான் வழக்கம்போல காதல் வந்து நுழைகிறது.

இவளை அவன் தேட, அதே சமயம் அவளுடைய அடிதடி அண்ணன்கள் இவனைக் குறிவைக்க, பின்பு அண்ணன்கள் சிறைக்குச் செல்ல, பின்பு இவர்களுக்குள் காதல் வளர, பேசி வைத்த கல்யாணம் நிற்க, அன்னை மகனின் காதலை எதிர்க்க, வெளிவரும் அண்ணன்மார்களும் நாயகன்மேல் கொலைவெறியுடன் எதிர்க்க, திருட்டுக் கல்யாணத்திற்கு நாயகன் ஏற்பாடு செய்ய, கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.

படத்தின் சிறப்பம்சங்கள் பல. அதிலும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் தேர்வும் அவர்களின் நடிப்பும். முதலில் அம்மா சரண்யா. சில காட்சிகள் மூலம் அருமையாக அவரது குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வெகுளி, மகன் மீதுள்ள பாசம், உழைப்பு, கோபம் என ஒவ்வொன்றும் நமக்குப் புரியவைக்கப்பட்டிருக்கிறது.

கதாநாயன், கதாநாயகி கதாப்பாத்திரங்களும் அழகாகப் பொருந்திப்போகின்றன. கதாநாயகனின் நண்பன் கதாப்பாத்திரம் அருமையோ அருமை, நகைச்சுவைக்காக. பல இடங்களில் அவனின் வசனங்கள் சிரிக்கவும் கைதட்டவும் வைக்கின்றன. கதாநாயகியின் அண்ணனும் டெர்ரராக நமது மனதில் இடம் பிடிக்கிறார். சில காட்சிகள் வந்தாலும் அந்த பெண் போலீஸ் அதிகாரி கூட மனதில் ஒட்டிக்கொள்கிறார். கதாநாயகனுக்காக முதலில் பேசி முடிக்கப்படும் பெண், என் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டாள், அவளது பேச்சு அருமை அருமை... இன்னும் மனதில் நிற்கிறது. அவளிடைய அப்பாவும் மனதில் நிற்கிறார். கதாப்பாத்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் சிறந்த படமாக இது எனக்குப் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு அருமை, முன்பே சொன்னதுபோல கரிசல் நிறம் திரை முழுதும் அழகாக விரிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பல பிற நாட்டுப் படங்களைத் திருடிப் படம் எடுக்கும் சூழலில் இப்படி சொந்த சரக்கை அளித்திருப்பது மகிழ்ச்சி. இசை அருமை, கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மற்றும் ஏடி கள்ளச்சி மனதில் நிற்கிறது. இன்னொரு பாடல் அருமையாக இருந்தாலும், ரிதம் படத்தின் தனியே தன்னந்தனியே பாடலின் தழுவலாக இருப்பதால் பிடிக்காமல் போயிற்று.

கற்பனையாக ஆடிப்பாடும் பாடல் காட்சிகள் ஒன்றும் படத்தில் கிடையாது. மற்றும் தேவையில்லாத குத்துப்பாடல்களும் கிடையாது. இயக்குனருக்கு இதற்காக மிகப்பெரிய நன்றி. மேலும் இப்போது வரும் பல கிராமத்துப் படங்கள் பருத்திவீரனையோ அல்லது சுப்ரமணியபுரத்தையோ ஞாபகப்படுத்துவதாகவே இருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அப்படியில்லாமல் இருப்பது இயக்குனர் மேல் மேலும் நம்பிக்கையைத் தந்துள்ளது. இனி வரும் கிராமத்துப் படங்களில் சில இந்தப் படத்தை ஞாபகப்’படுத்தலாம்’.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் படத்தின் பலங்களாகக் கருதலாம். படத்தின் பெரும் குறைகளாக நான் கருதுவது, முதலில் வரும் அந்த நாடகத்தனமான காட்சிகள். பெரும் அயர்ச்சியையும் பயத்தையும் தருகின்றன. அடுத்து சில கதாப்பாத்திரங்கள் பேசும் வசனங்கள். வாயசைப்பு ஒரு விதமாகவும் வசனங்கள் வேறு விதமாகவும் இருக்கின்றன, அதுவும் க்ளோசப் காட்சிகளில். ஏதோ டப்பிங் படம் பார்க்கும் உணர்வைப் பல இடங்களில் தருகின்றன. அடுத்து சில லாஜிக் ஓட்டைகள். இப்படி இந்தப் படத்தில் ப்ளஸ் மற்றும் மைனஸ்கள் சரி சமமாக இருக்கின்றன. ஆனால் அருமையான காட்சிகளுக்காகவும், கதாப்பாத்திர வடிவமைப்புகளுக்காகவும், சினிமாத்தனமில்லாத சிறந்த முடிவுக்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி...

அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ தலைகீழ். நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டவும் மாட்டார்கள், விலையையும் நன்றாக ஏற்றிவிடுவார்கள். பின் எதற்குத்தான் இந்த பெருந்தொகைக் கமிசனோ தெரியவில்லை.
இவர்களிடம் முதல் பிரச்சனை, நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டமாட்டார்கள். பார்க்கிங், தண்ணி வசதி, எத்தனை அறைகள், அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என அரை மணி நேரம் மூச்சு விடாமல் சொல்லியிருப்போம். இருந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் அனைத்து வீட்டிற்கும் ஊர்வலம் கூட்டிச் செல்வார்கள். நாமோ ஆபீஸில் பெர்மிசனோ, லீவோ போட்டு வந்திருப்போம். தேவையில்லாமல் நமது நேரத்தை வீணடிப்பார்கள். இரண்டாவது வீட்டுக்குப் போன பின் நமக்கே கண்ணைக் கட்டும். ”நான் சொன்ன மாதிரி வீடு இருக்கா இல்லையா?” என்று கொஞ்சம் முகம் கடுப்பாகும் நமக்கு. “அடுத்த வீடு கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் சார்”, என்று மனசாட்சியே இல்லாமல், திரும்பவும் மொக்கையாக ஒரு வீட்டைக் காட்டுவார் பாருங்கள், அப்படியே அந்த வீட்டு நிலையில் முட்டிக்கலாம் போலத் தோனும்.

சிலர் இதற்குக் கூட கமிசன் கேட்பார்கள். இவ்வளவுக்கும் நமது வண்டியில்தான் வந்திருப்பார். முதலில், சொந்தமாக ஒரு வண்டியில்லாமல் நமது வண்டியில் தொற்றிக்கொள்ளும் புரோக்கரை நம்பவே வேண்டாம். பின், முதலிலேயே கண்டிப்பாக சொல்லிவிடனும், லீவு போட்டுட்டு வரேன், நான் சொன்ன மாதிரி வீடு காட்டலைனா நீதான் என் சம்பளத்தைத் தரனும் என்று. அவ்வாறு தர மாட்டார் என்றாலும் தேவையில்லாத அலைச்சலைத் தவிர்க்கலாம். வீடு முடிந்தால்தான் கமிசன் என்பதையும் முதலிலேயே பேசிவிடவேண்டும். இதெல்லாம் சரிவராது சார், வேற ஆளப் பாத்துக்க சார் என்றெல்லாம் படம் காட்டுவார்கள். யோசிக்கவேண்டாம், தாராளமாக வேறு ஆளைப் பார்க்கலாம். அந்த ஏரியாவில் யாரைப் பார்த்தாலும் இவரும் கூட வருவார்.

மேலும் கமிசன் தொகை ஒரு மாத வாடகை என வழக்கமாகச் சொல்வார்கள். அதை நாம் குறைத்துப் பேசலாம். சிலர் மட்டுமே அதற்கு ஒத்துப்போவார்கள். சிலர் குழுவாக அமைந்து வீடுகளைப் பார்த்துவைத்துக்கொண்டு நமக்குக் காட்டுவார்கள். சில புரோக்கர்கள் இப்படிக் குழுவாகச் செயல்படாமல் தனித்து இருப்பர். இந்த மாதிரி இருப்பவர்கள் விலையைக் குறைத்துக்கொள்வார்கள். இவர்கள் நேர்மையாகவும்ம், சரியான வீட்டைக் காட்டும் வாய்ப்பும் அதிகம்.
பெரும்பாலான புரோக்கர்கள் பகுதி நேரமாக இதைச் செய்வார்கள். சிலர் முழு நேரமாகச் செய்தாலும் அலுவலகம் என்றெல்லாம் எதுவும் இருக்காது. ஆனால், சில ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்கள் அவர்களுக்கென ஒரு அலுவலகம் வைத்திருப்பார்கள். இடம், வீடு வாங்குவது மற்றும் விற்பது முதன்மையாக இருந்தாலும் வாடகை வீடு பிடித்துக் கொடுப்பதும் சிறிய அளவில் செய்வார்கள். நான் பார்த்தவரையில் இவர்களை நம்பலாம். தேவைக்கேற்ற வீட்டைக் காட்டுவார்கள், கமிசனும் பேசிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் யாரையாவது கைகாட்டி அனுப்பினால் நம்ப இயலாது.

பெரும்பாலும் புரோக்கர்களைத் தவிர்த்துவிடவேண்டும். முந்தைய பதிவில் சொன்ன வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்தாலே வீடு கிடைத்துவிடும். அப்படிக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவசரமான சூழ்நிலையில் மட்டுமே புரோக்கர்களை நாடிச் செல்லலாம்.

இப்போது நாம் பார்க்கும் வீடுகளில் ஒன்று பிடித்துப் போகிறது. அதன்பின்பு என்னவெல்லாம் கவனிக்கவேண்டும் என்பதை அடுத்து பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

மதுரை அனுபவங்கள்

சென்ற வாரம் மதுரைக்குச் சென்றிருந்தேன். பெரிதாக மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. முன்பு, 2006ல் ஒரு ஆறு மாதங்கள் அண்ணாநகரில் இருக்கும் சுகுணா ஸ்டாப்புக்கு அருகில் தங்கியிருந்தேன். ஓட்டல் சாப்பாடாக இருந்தாலும், அங்கிருந்த நாட்கள் சுக அனுபவமாக இருந்தது. அவ்வளவு அருமையான ஓட்டல் சாப்பாடு, சென்னை வந்த பிறகுதான் தெரிகிறது. இப்போது ஆரப்பாளையம் அருகே உள்ள, தங்கமணியின் அண்ணன் ஒருவருடைய கல்யாணம். அவர் உறவினர்கள் வீட்டில் தங்கச் சென்றுவிட்டார், எனக்கு அவர்களிடத்தில் அவ்வளவு பழக்கம் இல்லாததால் ஆரப்பாளையம் அருகிலிருக்கும் லாட்ஜ் ஒன்றில் தங்கினேன்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலிருந்தது அந்த சிவபாக்யா லாட்ஜ். அந்த சுற்று வட்டாரத்தில் அது ஒன்றுதான் இருக்கிறது போல! மிக மிக அதிக விலை, மிகச் சிறிய அறைகள். சுத்தம், கேட்டால் கூடக் கிடைக்கவில்லை. மதுரை மக்கள் ரொம்ப நல்லவர்கள் என்று எல்லோரிடமும் சொல்வேன், அங்கேதான் இதுபோன்ற வியாபாரிகளும் இருக்கிறார்கள். ரூம் சர்வீஸ் பரவாயில்லை. அவ்வப்போது எதுவும் வேண்டுமா என அவர்களே வந்து வந்து கேட்டுக்கொள்கிறார்கள். எது சொன்னாலும் உடனுக்குடன் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

அடுத்து மதுரை ரோடு. பாதாளச் சாக்கடைக்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள். இதில் அதிக மழை வேறு. எங்கும் சகதி, குண்டு, குழி. நடக்கவும் சிரமம், வண்டியில் போகவும் சிரமம். ஆனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லவே இல்லை. இத்தனை வருடங்களுக்குப் பின்பும் அதே டிராபிக் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. மதுரை வளரவே இல்லையா? வரும்போது கோரிப்பாளையம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் நெரிசல். ஆரப்பாளையம் பக்கம் அவ்வளவாக இல்லை. பல இடங்களில் சிக்னல் எரியவே இல்லை. ஆனாலும் முட்டல் முனகல் இல்லாமல் மக்கள் சென்றார்கள். சென்னையைப் போல வலதுபுறம் ஏறிச் சென்று எதிரே வருபவரையும் மறித்து யாரையும் போக விடாமல் செய்யும் போக்கு இங்கு இல்லை.
அடுத்து சரக்கு. மதுரையில் ஒரு கடையில் கூட ஒரிஜினல் சரக்கு இல்லை போலிருக்கிறது. பீர் எல்லாமே டூப்ளிகேட். ஏதோ புளித்தண்ணீரைக் குடித்தது போல இருக்கிறது. இதற்கு சென்னை டூப்ளிகேட் சரக்கு எவ்வளவோ பரவாயில்லை, குடிக்கும் அளவுக்காவது இருக்கும். இங்கு மிகவும் மோசம், வேறு ஏதேனும் தொழிற்சாலை உற்பத்தி போலிருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம். ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பார்கள் கண்டு அசந்துவிட்டேன். அவ்வளவு சுத்தம். லாட்ஜில் இருந்த அறையை விட இங்கு சுத்தம் அதிகம் என்றால் பாருங்கள். ஏசி பார் அருமை. உள்ளே புகை பிடிக்கக் கூடாது. அதற்காக, ஏசி அறை கதவுக்கு வெளியே, வரிசையாக நாற்காலிகளும், ஒவ்வொன்றிற்கும் முன்னால் ஒரு ஸ்டூலும் போடப்பட்டிருக்கின்றன. ஒவ்வோரு ஸ்டூலிலும் ஒரு ஆஷ் ட்ரே, ஏசி அறையிலிருந்து வந்து அமர்ந்து அடிப்பதற்காக. அருமை அருமை. நல்ல கவனிப்பு, சரக்கைத் தவிர அனைத்தும் அருமை.

குரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெளியிலிருந்து பார்க்க பழைய தியேட்டர் போலிருந்தது. நார்நியா 3டியில், டிக்கட் விலை 80, 100 என்றார்கள். சென்னை கமலா தியேட்டரில் கூட இந்த அளவு விலை இல்லை. இங்கு தாறுமாறாக இருப்பது கண்டு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் டிக்கட் கொடுக்கும் கருவியெல்லாம் நன்றாக இருந்தது, அதிலிருந்து வந்த டிக்கட்டும் சதயம், கமலா டிக்கட் போன்ற தாளில், அதே போல, அட, சீட் நம்பர் கூட இருந்தது. அதையெல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார் என்று உள்ளே சென்றால் ஆச்சர்யம். அருமையான அரங்க சீரமைப்பு. சிறப்பான சீட்கள், சீட்டில் இருக்கும் எண் முறைப்படி அமரவைக்கப்படுகிறார்கள். அருமையான ஏசி. சென்று உட்கார்ந்தவுடன் மெனுவுடன் நம்மை அனுகும் வாலிபர்கள். ஆர்டர் செய்தால் நமது சீட்டுக்கே சாப்ப்பிடும் பொருட்கள் வந்து சேரும். சென்னையை விடக் கூடுதலான வசதியாகத் தெரிந்தது எனக்கு இது. டிஜிட்டல் அது இது என்று படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரே விளம்பரம். பரவாயில்லை, நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அரங்கின் நீளம் அதிகமாக இருந்ததால் படம்தான் மிக மிகச் சிறியதாகத் தெரிந்ததாகத் தோன்றியது. குரு திரையரங்கம் இப்போது சென்னை திரையரங்குகள் தரத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

மதுரையில் நான் கண்ட மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விசயம், கண்வலி. பாதிப்பேர் கண்கள் ரத்தச் சிவப்பாக இருக்கின்றன, ரத்தசரித்திரம் பட விளம்பரத்திற்காக யாரோ செய்த சதியோ எனத் தோன்றியது, அல்லது அனைவரும் அதைப் பார்த்திருக்கலாம். பயந்து ஒதுங்கினால் சாதாரணமாகச் சொல்கிறார்கள், “அதெல்லாம் சரியாப்போச்சு, கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும், பயப்படாதீங்க”.

மதுரையிலிருந்து சிவகாசி சென்றேன் பேருந்தில். அது ஒரு தனியார் பேருந்து. ஏறி, மூன்று பேர் இருக்கும் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். இன்னொரு புறம் ஒருவர் வந்து அமர்ந்தார். கண்ணில் ஒரு கூலிங்கிலாஸ். அப்போதே உசாராயிருக்கவேண்டும். ஓரளவு பேருந்து நிறைந்துகொண்டிருந்தது. எங்களது இருக்கைக்கு ஒருவர் வந்து, ஓரத்தில் இருந்தவரிடம் கேட்டார்.
“கொஞ்சம் தள்ளி உக்காருங்க”
ஓரத்திலிருந்தவர் கண்ணாடியைக் கழற்றி,
“கண்ணுவலி எனக்கு, வேற இடத்துக ஒக்காந்துக்குறிங்களா”
“எனக்கும் கண்ணுவலிதான், பராவால்ல தள்ளுங்க”
நான்,
“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”.

மதுரையில் திருமணத்தைப் பதிவு செய்யவென இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தேன். வேலை நடக்கவே இல்லை. அதைப் பற்றிய தனி சிறப்புப் பதிவு அடுத்து வரும்.

குறிப்பு: முன்பு போல படங்களுடன் எழுத முடியவில்லை. சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதையாவது வித்தியாசமாகப் பார்த்து, படம் எடுக்க மொபைலை எடுத்தாலே நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார் தங்கமணி. அதனால் மதுரையில் எடுத்த ஏதோ சில படங்களி இணைத்துள்ளேன்.
படம் எடுக்க முடியவில்லையே என மிகவும் வருந்திய விசயம். தலதளபதி போல “கேப்டனின் விஜய்” என்ற டீக்கடை பெயர்ப் பலகை.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

Despicable Me (2010)

ஒரு ஊர்ல ஒரு பலே திருடன் இருந்தானாம். அவந்தான் உலகத்துலயே பெரிய திருடன். அவனை மிஞ்ச ஆளே கிடையாதாம். ஒரு நாள், அவனையும் மிஞ்சுற அளவுக்குப் பெரிய திருடன் ஒருத்தன் முளைச்சானாம். நம்ம பலே கில்லாடி பண்ணின திருட்டுக்களையெல்லாம் மிஞ்சுற அளவுக்கு ஒரு திருட்டு பண்ணினானாம். அப்படி என்னத்த திருடினான் தெரியுமா? பிரமிடு ஒன்ன திருடிட்டானாம்.

அதக் கேள்விப்பட்ட நம்ம மெகா திருடன் இத விட பெருசா ஒன்ன திருடி, நாமதான் பெரிய திருடன்னு நிரூபிக்கத் திட்டம் போட்டானாம். இவன் அப்படி என்னத்த திருடப்போறான் தெரியுமா? அந்த நிலாவ! உண்மையாத்தான். துப்பாக்கி மாதிரி ஒரு மிசின் இருக்கு. அத வச்சி எது மேல சுட்டாலும் சின்னதாயிடும். அந்த சுருக்குற மிசின மொதல்ல திருடி, அத வச்சி, ராக்கெட்டுல போயி, நிலா மேல அடிச்சு, சுருக்கி, பைல போட்டு எடுத்துட்டு வரலாம்னு திட்டம் போட்டானாம்.


கதை நல்லா இருக்குல்ல? அதுதான் இந்தப் படம். என்னடா கதைய முழுசா சொல்லிட்டானே, அப்றம் எப்படி இண்ட்ரஸ்டிங்கா பாக்குறதுன்னு கேக்குறீங்களா? இது சைடு கதைதான். மெயின் இன்னும் நான் சொல்லல. அப்படியே சொன்னாலும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்க காட்சிகள். இன்னோரு விசயம், அந்தத் துப்பாக்கியால சுட்டு சின்னதாக்குற எல்லாம் திரும்பவும் பழைய அளவுக்கு வந்துரும். அப்போ பாத்துக்குங்க, பூமிக்குக் கொண்டு வந்த நிலா திரும்பவும் பெருசானா என்ன ஆகும்? ஓ, இதையும் சொல்லிட்டேனோ?

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

வீடு தேடுதல் (1)

ஏதோ ஒரு காரணத்துக்காக வீடு மாத்தனும்னு முடிவு பண்ணிருவோம். அடுத்து வீடு தேடனும். எப்படியெல்லாம் தேடலாம்? பேப்பர் விளம்பரம், இணையம், தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தல் மற்றும் புரோக்கர்கள்.

வழக்கமான பேப்பர்களில் வாடகை வீடு பற்றிய விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளுக்கு ஃப்ரீ ஆட்ஸ்தான்(Free Ads) சரி. சென்னையில் வியாழன்தோறும் கடைகளில் கிடைக்கும். இப்போது இங்கும் புரோக்கர்கள் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். விளம்பரம் பார்த்து போன் செய்தால் பத்துக்கு எட்டு புரோக்கர்கள் கொடுத்த விளம்பரமாகத்தான் இருக்கின்றன. அதனாலென்ன என்கிறீர்களா? புரோக்கர் மூலம் வரும் பிரச்சனைகள் அடுத்து பார்க்கலாம். முடிந்தவரை வீட்டு உரிமையாளர் கொடுத்த விளம்பரமாகப் பார்த்து போன் செய்யவேண்டும், விளம்பரத்திலேயே போட்டிருக்கும் புரோக்கர்கள் வேண்டாமென்று.

முதலில் நமக்கு தேவையான ஏரியாவில் வந்திருக்கும் விளம்பரங்கள் அனைத்தையும் அலச வேண்டும். ஏதாவது விளம்பரம் நமக்குத் தோதாக இருக்கும்பட்சத்தில் அதை பேனா கொண்டு வட்டமிட்டுக்கொண்டே வரவேண்டும். தேர்ந்தெடுத்தல் முடிந்த பின் ஒவ்வொருவருக்காக போன் செய்ய வேண்டும். பேசும்போது நமது பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துவிட்டு, அவர் கொடுத்த விளம்பரம் பற்றிச் சொல்லிப் பேச ஆரம்பிப்பது நல்லது. சிலர் பல இடங்களில் விளம்பரம் கொடுத்திருப்பர். சிலர் வீட்டு போன் நம்பரைக் கொடுத்திருப்பார்கள், வீட்டில் விளம்பரம் கொடுத்ததே தெரியாத மனைவியோ (அல்லது கணவனோ) போன் எடுத்தால், தலையும் புரியாமல் காலும் புரியாமல் ஒரு கால் வீணாகும் வாய்ப்பு உள்ளது.
சரியான புரிதலுக்குப் பின் வீட்டைப் பற்றிப் பேச ஆரம்க்கலாம். வீடு காலியாக இருக்கும்பட்சத்தில் நமது தேவைகள் அனைத்தையும் சொல்லி அதற்கேற்றார்போல வீடு இருக்கிறதா என உறுதி செய்துகொண்டு பின் நேரில் சென்று பார்க்க நேரம் கேட்கவேண்டும். சில நேரம் போனிலேயே தெரிந்துவிடும் நமக்கு இந்த வீடு ஒத்துவராது என்று. உதாரணத்திற்கு, பார்க்கிங் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீட்டிற்கு வெளியே தெருவில்தான் விடவேண்டியது இருக்கும். தண்ணி வசதி பற்றி கேட்டால், காலை மாலை வரும் என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீடு இரண்டாம் தளத்திலும் தண்ணீர் குழாய் முதல் தளத்திலும் இருக்கும். தண்ணீர் காலை 5 மணிக்கு வரும். ஆகவே எல்லாவற்றையும் தெளிவாகக் கேட்கவேண்டும்.

தேவைகள் சரியாக இருந்தால் நேரில் சென்று பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஒத்துவரவில்லையென்றால் வட்டம் போடு வைத்திருப்பதை அடித்து வைத்துக்கொள்ளவேண்டும். திரும்பத் திரும்ப ஒரே ஆளுக்கு போன் செய்வதைத் தவிர்க்கலாம். ஒரே விளம்பரம் வாரா வாரம் வரும். அதையும் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் முதலிலேயே சொல்லி விடுவார்கள், காலி இல்லை என்று. அப்போதும் அடித்துக்கொள்ளவேண்டும். நல்ல வீடு உடனேயே போய்விடும், அதற்கு எனது நண்பர்கள் போன்ற ஆட்கள்தான் காரணம்.

எனது நண்பர் ஒருவர் வீடு தேடும் அனுபவம் பற்றி சொன்னார். வியாழன் காலை 6 மணிக்கு பேப்பருடன் அந்த ஏரியாவுக்குச் சென்றுவிடுவார். இந்த மாதிரி ஓனர் கொடுத்த விளம்பரங்களுக்கு ஒவ்வொன்றாகப் போன் செய்து அப்போதே வந்து பார்க்க நேரம் கேட்பார். காலை என்பதால் எப்படியும் கிடைத்துவிடும். பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்கள் விரும்புவதும் காலை அலுவலகம் செல்லுவதற்கு முந்தைய நேரத்தைத்தான். சரியாக அமைந்துவிட்டால் அப்போதே முன்பணம் கொடுத்து வந்துவிடுவார். விளம்பரம் வந்த சூட்டோடு சூடாக வீடுகள் நிரம்பும் சூட்சுமம் இதுதான். அவரது நண்பர்களுக்கும் இப்படித்தான் பிடித்துக்கொடுக்கிறாராம். பின்பு நமக்கு எப்படி கிடைக்கும்?

இப்போது சில இணைய தளங்களும் இதுபோன்ற சேவையை அளிக்கின்றன. 99acres.com, indiaproperties.com, magicbricks.com, makaan.com, sulekha.com போன்றவை பயனளிக்கும் தளங்கள். இங்கும் புரோக்கர், ஓனர் விளம்பரங்கள் என்று தனித்தனியாக இருக்கும். நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து வாய்வழி விளம்பரம். நமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கலாம். அப்படியே வாய்வழியாகவே பரவி வீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல வீடுகள் கிடைக்காமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் நல்ல அபார்ட்மெண்டுகளில் பக்கத்துவீடு காலியாவது தெரிந்தால் மற்ற பக்கத்துவீட்டுக்காரர்கள் தமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி, அந்த வீடு காலியாவதற்கு முன்பே பேசி முடித்துவிடுவார்கள். வீடு காலியாவதற்கு முன்னமே அது அடுத்தவர் வருவதற்கு ஏற்பாடாகிவிடும். அதனால் நண்பர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள் அனைவரிடம் சொல்வதால் ஒன்றும் குறைந்துபோய்விடாது. முடிந்தால் புலம்பலாம், அது பார்த்து நமது நண்பர்கள் கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்து வீடு கிடைக்க ஏற்பாடு செய்யலாம். வலைப்பூ இருந்தால் அங்கு விளம்பரமாகப் போடலாம். பதிவர்கள் யாரும் பார்த்து உதவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

-பெஸ்கி.

புரோக்கர் - இந்தப் புண்ணியவான் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். மேலும், பின்வரும் விசயங்கள் பற்றியெல்லாம் இந்தத் தொடரில் சொல்லலாம் என்றிருக்கிறேன். உங்கள் அனுபவங்கள் வைத்து மேலும் ஏதாவது சேர்க்கவேண்டுமா எனத் தெரியப்படுத்தவும்.

புரோக்கர் பிரச்சனைகள்
தெரு - பார்க்கிங்
தண்ணீர்
இணைப்புகள்
கடை வசதிகள்
அக்கம்பக்கம்
வீட்டின் தன்மை
வசதிகள் - துணி உலர்த்த, பார்க்கிங், ஏசி, மீட்டர், ஜன்னல், சமையலறை ஜன்னல், ஆணிகள், குளியலறை வசதிகள்
வீட்டு ஓனர்
முகவரி மாற்றங்கள்
வீட்டில் தேவையில்லாமல் சேரும் பொருட்கள்


Share/Bookmark
Read More!

சொந்த வீடும் வாடகை வீடும்

வாடகை வீட்டுல இருக்குறதுனால நன்மைகளும் இருக்கு, கஷ்டங்களும் இருக்கு. வீடு நமக்குப் பிடிக்கலைனாலோ, பக்கத்து வீட்டுக்காரங்களப் பிடிக்கலன்னாலோ, தெருவைப் பிடிக்கலைனாலோ, வாசப்படி பிடிக்கலைனாலோ வீட்ட மாத்த முயற்சி பண்ணலாம். அல்லது வேற நல்ல வீடு கிடைச்சா வீட்ட மாத்திக்கலாம். வேற நல்ல வேலை, வேற ஊர்ல கிடைச்சாலோ, இந்த வீட்டுல தண்ணி வரல, அல்லது தண்ணி சரியா போகல (இது தண்ணி வரலங்கறத விட பெரிய பிரச்சனை) அப்டி இப்டின்னு பல காரணங்களுக்காக வாடகை வீட்டுல இருக்குறவங்க மாத்திக்கலாம். ஆனா சொந்த வீடுன்னா? அப்படியே பேத்து எடுத்துட்டுப் போகவா முடியும்? சொந்த வீட்ட விட்டுப் போக முடியலங்கிறதுக்காகவே பல வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர். அப்படியே விட்டுப் போகவேண்டிய சூழ்நிலை வந்தால் வீட்டை வாடகைக்கு விடனும், அதப் பாக்கனும், வர்றவங்க சரியா வச்சுக்குவாங்களான்னு கவலைப் படனும், இன்னும் எவ்வளவோ இருக்கு. அப்படி இல்லைனா, மத்தவங்களை வீட்டுல விட்டுட்டு நாம மட்டும் தனியா வாழனும். ஆனாலும் பாருங்க, வாடகை வீடா சொந்த வீடான்னு கேக்கும்போது “சொந்த வீடு”ன்னு சொல்லிறதுல ஒரு கெத்து இருக்கத்தான் செய்யிது.

இருந்தாலும் வாடகை வீட்டுல இருக்குறவங்க ரொம்ப சந்தோசமானவங்கன்னு நினைச்சுடக்கூடாது. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். வாடகை வீட்டுல இருக்குறவனோட மொத குறிக்கோள் ஒரு சொந்த வீடு வாங்கனும் என்பதாகத்தான் இருக்கும். அதுவும் தங்கமணி ஆசை அதுவாகத்தான் இருக்கும். நமக்கு ”யாதும் ஊரே, எங்கேயும் வீடே”ன்னு வாடகை வீட்டுல இருக்குறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா தங்கமணி அப்பப்ப சொந்த வீட்டப் பத்திப் பேசி அடிக்கிற தம்ம விட்டுடலாமான்னு உள் மனச யோசிக்க வைப்பாங்க. அதுலயும் சில நேரம், “அவங்க சொந்த வீடு வாங்கப் போறாங்களாம்” அப்படின்னு சொல்லும்போது காதையே கழட்டி வச்சுடலாம் போல இருக்கும். இருந்தாலும் கேக்குற மாதிரியே ஹ்க்கும் போட்டுக்கனும். இந்தப் பாயிண்ட மட்டும் நல்லா நோட் பண்ணிக்கனும், இல்லன்னா வாடகை வீடோ சொந்த வீடோ, எந்த வீட்டுலயும் நிம்மதியா இருக்க முடியாது.


பிடிக்கலைனா வீட்ட மாத்திக்கலாம். ஆனா வீட்ட மாத்தும்போது எவ்வளவு விசயங்களைக் கவனிக்கவேண்டியது இருக்கு தெரியுமா? சரியா விசாரிக்காம வந்துட்டோம்னா அவ்வளவுதான், உடனே மாத்திகிட்டெல்லாம் போக முடியாது. பின்ன? சாமான் சட்டியை எல்லாம் ஏத்தி எறக்குற கொடுமை எங்களுக்குல்ல தெரியும். இப்பல்லாம் பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் அப்டின்னு நிறைய கம்பெனிகள் வந்துடுச்சாம். நாம இது வரைக்கும் இப்படி யாரு கிட்டயும் போனது இல்ல. ”தம்பிகள் உடையான் வீடு மாத்த அஞ்சான்”. ஆனா அடுத்த தடவ பேக்கர்ஸ்தான். அதையும் ஒரு தடவ பாத்துடலாம்.

வீடு மாறுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாகப் போகும் வீடு நம் மனதிற்குப் பிடித்ததாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடு கிடைப்பது மிகவும் கடினம். அவ்வாறான வீட்டைத் தேடுவதும் மிகவும் கடினம். அவ்வாறு தேடும்போது எனக்கு வந்த பல பிரச்சனைகள், அனுபவங்களில் இருந்து இந்தத் தொடரை எழுதுகிறேன். வாடகை வீடு மாறும்போது என்னென்ன பிரச்சனைகள் வரலாம், என்னென்ன விசயங்களை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதே இந்தத் தொடர். முதலில் வீட்டு புரோக்கரிடம் இருந்து ஆரம்பிக்கலாம்...

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

சத்தம் போடாதே, நிசப்தம் கூடாதே!

வழக்கமாக வீட்டிற்கு வந்தவுடன், நேரமிருப்பின் ஏதாவதொரு படத்தைப் போட்டுப் பார்ப்பது வழக்கம். நல்ல தெளிவான சப்தம், ஆக்சன் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் வீடே அதிரும். இதுநாள் வரை எனக்கு அதில் பிரச்சனை இல்லை, இப்போது தங்கமணி. வழக்கமாக இந்த நேரங்களில் தங்கமணி சமையலறையில் இருப்பார். இங்கே சரவுண்டு சவுண்டு அதிகமாகும்போதெல்லாம் அங்கிருந்து டிடிஎஸ் எபெக்டில் வரும். “ஏங்க இப்படி சத்தமா வைக்கிறீங்க, கொஞ்சம் கொறச்சு வச்சுப் பாத்தா ஆவாதா? எத்தன வாட்டிதான் சொல்றது?”.

நான் என்ன வேண்டுமென்றா இப்படிச் செய்கிறேன். பேசும்போது சரியாகத்தான் இருக்கிறது, சண்டை வருபோதுதான் அதிகமாகிறது. கிட்டத்தட்ட எல்லா படத்தின் சவுண்டு எபக்ட்டுகளும் இப்படித்தான் இருக்கின்றன. சரி, சத்தத்தைக் குறைத்து வைத்துப் பார்க்கலாம் என்றால் பேசுவது கேட்காது. சண்டை வரும்போது மட்டும் எழுந்து சத்தத்தைக் குறைப்பது படத்தின் மீது படிந்திருக்கும் ஊடுருவலைக் குறைக்கிறது. டிவியில் பார்த்தால் பரவாயில்லை, ரிமோட் உபயோகித்து மாற்றிக்கொள்ளலாம், இது கம்ப்யூட்டர். படத்தில் சண்டை வரும்போதெல்லாம் வீட்டிற்குள்ளும் சண்டை வரும் அபாயம் இருந்தது.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. இதற்கு மாற்று வழி என்ன செய்யலாமென யோசித்தேன். கீபோர்டு வேறு பழையதாகி மாற்றும் தருவாயில் இருந்தது. ஒரு யோசனை! வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் வாங்கி விடலாம் என யோசித்தேன். ஏனெனில், மவுசையோ கீபோர்டையோ படம் பார்க்கும்போது மடியில் வைத்துக்கொள்ளலாம். சத்தம் கூடும்போது குறைத்துக்கொள்ளலாம் என்பது யோசனை.

ஒரு வழியாக பட்ஜெட் போட்டு வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ் வாங்கியாச்சு. அப்புறம் படம் பார்க்கும்போது சத்தத்தைக் குறைப்பது ஒன்றும் பெரிய விசயமாகத் தெரியவில்லை. ஆனால் திருப்தியில்லை. சில நேரங்களில் சத்தத்தைக் குறைக்க மறந்துவிடுகிறேன். சத்தத்தைக் குறைக்கும் மனநிலை கொண்டால் படத்தில் ஒன்ற முடியவில்லை. எல்லாம் சரியாகச் செய்தாலும் சண்டை வருபோது அதிராமல் இருப்பது என்னவோ இழந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. “திட்டம் ஆ” பற்றி மனது யோசிக்கத்தொடங்கியது.

திட்டம் ஆ, திட்டம் அ வை விட அதிக பட்ஜெட்டில் வரும்போலத் தோன்றியது. ஏற்கனவே இதற்கு பட்ஜெட் போட்டு தங்கமணியிடம் வாங்கிக் கட்டியிருப்பது அவ்வப்போது திட்டம் ஆ வை குழிக்குள் தள்ளும். இருந்தாலும் அடுத்தது தயார். வயர்லெஸ் ஹெட்போன். அதை வாங்குவதற்குத் திட்டமிட்டபோது இன்னோரு யோசனை. திட்டம் ஆ, திட்டம் ஆ-2 ஆக மாறியது. வயர்லெஸ் ஹெட்போன் வாங்கினால் இதற்கு மட்டும்தான் உபயோகிக்க முடியும். அதுவே ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்செட் வாங்கினால் மொபைலுக்கும் உபயோகிக்கலாம். அப்படியே ஒரு ப்ளூடூத் டாக்கில் வாங்கி கம்ப்யுட்டரில் பொருத்தி, இரண்டையும் இணைத்து படமும் பார்க்கலாம்.

இதைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன். எவரும் மொபைலுக்கு வாங்கிய ப்ளூடூத் ஹெட்செட்டை கம்ப்யூட்டருடன் இணைத்த அமைப்பை செய்து பார்த்ததாகத் தெரியவில்லை. நாம்தான் முதன்முதலாக முயற்சி செய்ய வேண்டுமா? பரவாயில்லை, முயன்று பார்க்கலாம் என அடுத்த மாதத்துக்கான பட்ஜெட்டில் திட்டம் போட்டு வைத்தேன். ஈபேயில் வாங்கிக் கொண்டிருக்கும்போதே பார்த்த தங்கமணி கேட்டார், கண்டிப்பாக இதற்காக் நீ என்னைப் பாராட்டுவாய் என்று ஒரு பிட்டையும் போட்டு வைத்தேன், என்னவென்று சொல்லவில்லை.

திட்டத்தைச் முதன்முதலாய்ச் செயல்படுத்தும் நாள் வந்தது. வழக்கம்போல தங்கமணி சமையலறையில் இருந்தார். அனைத்தையும் அமைத்து சோதித்துப் பார்த்தேன். நன்றாக வேலை செய்தது. மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி. தங்கமணியிடம் சொல்லி பெருமைபட்டுக்கொள்ளலாம். அமைதியாகப் படத்தை ஆரம்பித்தேன்.
”சத்தம் போடாம அப்படி என்னதான் பண்றீங்க?”, தங்கமணி.
நான் படத்தை நிறுத்திவிட்டு, “பாத்தியா, இந்த ப்ளூடூத் ஹெட்செட்ட கம்ப்யூட்டரோட கனெக்ட் பண்ணிருக்கேன், நா நல்லா சத்தத்தோட படம் பாப்பேன், சத்தம் வெளியவும் கேக்காது, அப்படியே இத போனுக்கும் யூஸ் பண்ணிக்கலாம், எப்டி ஐடியா?”, என்றேன் பெருமையாக.
வித்தியாசமாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார். நான் மீண்டும் படத்தில் ஆழ்ந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார் தங்கமணி,
“என்னங்க, சத்தமே இல்லாம என்னமோ மாதிரி இருக்குங்க, நீங்க சத்தமா வச்சே படம் பாருங்க. வீடு அமைதியா நல்லாவே இல்ல, சரியா?”, என ஹெட்செட்டைக் கழட்டிவிட்டு மீண்டும் சமையலைறைக்குள் சென்றார்.

அடுத்து, திட்டம் இ.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

எந்திரனும் எனது பார்வைகளும்


எந்திரன் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த படம். எதிர்பார்ப்பா, அப்படி என்ன எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம்? ஒரு சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக, சினிமா விரும்பியாக, இயக்குனர் ஷங்கரின் ரசிகனாக? அல்லது இப்படி, ரஜினி படம் சொதப்பவேண்டும் என்ற எண்ணத்துடன்? கேப்புக்கு கேப்பு விளம்பரம் போட்ட சன் பிக்சர்ஸ் மேல் உள்ள வெறுப்பில் கவுந்து போகட்டும் என்ற எதிர்பார்ப்பில்? இருக்கலாம். அனைத்தும் ஒரு எதிர்பார்ப்பே. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சன் பிச்சர்ஸின் எதிர்பார்ப்பு மட்டும் நன்றாக ஈடேறியிருக்கிறது. மற்ற எல்லாம் அவுட்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் துவக்கினார்கள் ரஜினி ரசிகர்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னமே அபிஷேகம், வெடி, குத்தாட்டம் என களை கட்டியது திரையரங்கு. கதவைத் திறந்து விட்டதும் ஒரே தள்ளுமுள்ளு, கூட்டத்தை அடக்கப் பாடுபட்ட போலீசை நினைத்தால் பாவமாக இருந்தது. ரசிகர்கள் வரிசையில் வர அவ்வளவு அடம் பிடித்தனர். ஒரு வழியாக உள்ளே சென்று படத்தை ஆரம்பித்தாயிற்று. ரஜினி வரும் நேரத்தில் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் தியேட்டரே அதிர்ந்தது. மேலும் பாடல்களுக்குக் கூட ஆட்டங்கள் அவ்வளவாக இல்லை, காரணம் இவை அந்த மாதிரிப் பாடல்கள் இல்லை.

ஹீரோ ரஜினி - நிச்சயமாக ஒரு ரசிகன் எதிர்பார்த்து வந்த தலைவர் இவர் இல்லை. என்ன செய்வது என்றிருந்த வேளையில் கலாபவன் மணியைக் கண்டு ஓடும் ஹீரோ. நிச்சயம் வெறுத்திருப்பார்கள். ஏதோ, உடைந்த மனதையெல்லாம் ஒட்டிச் சரிசெய்தார் ச்சிட்டி. வில்லன் ரஜினி மட்டும் இல்லையென்றால் திரையரங்கு காலியாகியிருக்கும் என்றே தோன்றியது. வில்லன் குறும்புகள் அட்டகாசம். இதேபோல்தான் சந்திரமுகியும் இருந்ததாக உணர்கிறேன். ரஜினி பாதி படத்திற்கு மேல் இருக்கவே மாட்டார். நம்ம ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஆக்கம் அது. ஆனால் கடைசியில் வந்த வேட்டையன் மொத்தத்திற்குத் திருப்திப்படுத்தியதால் ரசிகர்கள் மனது குளிர்ந்தது. அதுபோலதான் இதுவும். மேலும் சிவாஜியில் வில்லத்தனமான மொட்டை ரஜினியையும் மறக்க முடியாது. இதுதான் உண்மை, ரஜினியை ஹீரோவாக இரண்டு மணி நேரம் பார்ப்பது, வில்லனாக அரை மணி நேரம் பார்பதற்குச் சமம். என்னாஆஆ வில்லத்தனம்?

அடுத்து இயகுனர் ஷங்கர். முந்தைய படங்களில் பொதுநல வாக்கில் கருத்துக்களைப் புதைக்கும் போக்கு இப்படத்தில் குறைவாகவே தெரிகிறது. ஒரு சாதாரண சினிமா விரும்பியும் விரும்புவது இதுதான். ஒரு பொழுதுபோக்கு. சில லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றனதான். ஆனால் ஒட்டுமொத்த படத்தின் ஆக்கத்தையும் ஒப்பிடும்போது, விலகியே இருக்கின்றன. கிராபிக்ஸ் அமைப்பில் தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை எட்டிவிட்டது என சொல்ல வைத்திருக்கிறார். இது வழக்கமான ஷங்கர் படம் மாதிரியும் தெரியவில்லை, அவருக்கான ஒரு புதிய கதவாக இந்தப் படம் இருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல, தமிழ்/இந்திய சினிமாவுக்கே இது ஒரு புதிய கதவு. இனி வரும் படங்களில் ஹாலிவுட் கிராபிக்ஸ் குழுவின் உதவியோடு பல பிரம்மாண்ட படைப்புகளைக் காணலாம் என எதிர்பார்க்கிறேன். இந்தப் படம், சில ஷங்கர் ரசிகர்களை கொஞ்சம் அதிகமாகவே திருப்திப்படுத்தும் என்பது எனது கணிப்பு.

சன் பிச்சர்ஸ், வென்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம். வழக்கமாக அதிருப்தியை ஏற்படுத்தும் விளம்பர உத்தியை இதிலும் கையாள்கின்றனர் என்று எல்லோராலும் பேசப்பட்டது. எந்திரன் இசை வெளியீட்டு விழா, அதன் ஆக்கம் என மற்ற விசயங்களிலேயே கணிசமான கல்லா கட்டுகிறது. இது கொஞ்சம் ஓவர் என்று பலர் சொன்னாலும், இது வழக்கமான சன் பிச்சர்ஸின் விளம்பர உத்திதான். முதலில் இடைவேளைக்கு இடைவேளை விளம்பரம் காட்டப்பட்டது. பின்பு படக்குழுவினர் பேட்டி என்று போனது. கடைசியாக தில்லாலங்கடி இசை வெளியீடு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் புதுப்புது விளம்பரப் பாணியைக் கையாள்வது சன் டிவியின் வழக்கம்தான். அதையும் ஒரு நிகழ்ச்சியாகப் போட்டு, படத்திற்கும் விளம்பரமும் ஆச்சு, அதில் வரும் விளம்பரங்களுக்கு காசும் ஆச்சு என முயற்சிகள் தொடர்கின்றன.

இந்த விளம்பர முயற்சிகளில் எந்திரனில் அடுத்த படிக்கு ஏறியிருக்கின்றனர். பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, அதன் ஒளிபரப்பு, அதன் ஆக்கம், டிரைலர் வெளியீட்டு விழா - இப்படி புதுப்புது விளம்பரங்கள். வழக்கம்போல நம் மக்கள் அடுத்து போஸ்டர் வெளியீட்டு விழா என்று கிண்டலடித்தார்கள். ஆனால் சன், இசை வெளியீட்டு விழா மறு ஒளிபரப்பு என்று நம் மக்கள் யோசிக்காத ஒன்றைத் தூக்கி வைத்தார்கள். இதுதான் சன், நாம் யோசிக்கும் அடுத்த படிக்குச் சென்று விடுவார்கள். இதேபோல, சன் தலைப்புச் செய்திகள் என பஸ்ஸில் ஒரு லிஸ்ட் போட்டேன். “எந்திரன் திருட்டு விசிடி விற்றவர் கைது” என்பது அதில் ஒன்று. அவர்கள் ஒரு படி மேலே போய், “திருட்டு விசிடி விற்ற கடை ரசிகர்களால் சூறையாடப்பட்டது” என்றே சொல்லிவிட்டார்கள், இதை செய்தியாகவும் கொள்ளலாம்...

இப்படி அடித்து ஆடினால் எந்தப் படம்தான் ஓடாது? ஆனால், எந்திரன் இதனால்தான் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. ஏன், இதெல்லாம் இல்லாமல் சந்திரமுகி ஓடவில்லையா? இந்த விளம்பர யுத்திகளிம் தாக்கம் இந்தப் படத்தைப் பொறுத்தவரை யூகிக்க முடியாததாகவே தோன்றுகிறது. சன் பிச்சர்ஸைப் பொறுத்தவரை லாபம், லாபம், லாபம்.

மொத்தத்தில் ஷங்கர் வென்றிருக்கிறார், சூப்பர் ஸ்டாரின் உதவியுடன். இந்த வில்லன் கதாப்பாத்திரத்தின் வெளிப்பாடு வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். படம் பப்படமாகும் என்றவர்களின் எண்ணத்தில் புழுதிப் புயல். வசூல் ரீதியாக மட்டுமல்ல, மக்களின் விருப்பத்திலும் வெற்றிபெரும் இந்தப் படம்.

Share/Bookmark
Read More!

தாதர் எக்ஸ்பிரசும் குழம்(/ப்)பிய ரயில்வேயும்


மும்பையிலிருந்து நான் மட்டும் தனியே வந்துகொண்டிருந்தேன். தாதர்-சென்னை எக்ஸ்பிரஸ், கிட்டத்தட்ட 24 மணி நேரப் பயணம். சென்னையிலிருந்து அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டுமே பயணம் செய்து பழக்கப்பட்டிருந்த நமக்கு இந்தப் பயணம் புதுசு. அதுவும் தெற்கு நோக்கி மட்டுமே பயணம், இரவு தூங்கி எழுந்தால் ஊர் வந்திருக்கும். ஆனால் இங்கு மூன்று வேளைச் சாப்பாட்டைப் பார்க்கவேண்டியது இருக்கும். அதாவது பரவாயில்லை, மும்பை போகும்போது பகலில் நிம்மதியாகப் பயணம் செய்யவே முடியாது, அதுவும் ஆணாக இருந்தால் முதல் பயணம் விழி பிதுங்கி விடும்.

பிச்சைக்காரர்கள் வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள், பிச்சையிடுவதே வெறுத்துவிடும். ஒரு சிலர் பரவாயில்லை, தரையைத் தூய்மை செய்துவிட்டு காசு கேட்பார்கள். அதிலும் கொடுமை ஒன்று இருக்கிறது, நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல, பிடுங்கும் கூட்டம், அரவாணிகள். அவர்கள் வந்தால் தனியே வந்திருக்கும் அல்லது இள வயது ஆண்கள் பாடு திண்டாட்டம்தான். ஐந்து ரூபாய் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அதுவும் கேட்காமலேயே கொடுத்துவிட்டால் அதிகம் கேட்கும். சில நேரம் சில்லரை இல்லாமல் மாட்டிக்கொண்டால், அங்கே இங்கே கையை வைக்கும், பாவாடையைக் கூட தூக்கும் அபாயம் உண்டு. அடுத்த முறை செல்லும்போது ஒரு 100 ரூபாயை மாற்றி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.

மேலும், பொது வகுப்புப் பயணிகள், படுக்கை வகுப்புக்குள் வந்து கிடைக்கும் இடத்தில் அமர்ந்துகொள்வர். சிலர் சொல்வது கேட்டு சென்று விடுவர், சிலர் என்ன சொன்னாலும் அசைக்க முடியாது. அவரவர் இஷ்டம்தான். அதிலும் சிலர் குழந்தையுடனும், வயதானவர்களுடனும் வந்தால் நாமாகவே இடம் கொடுக்கும் சூழ்நிலையும் உருவாகும். என்ன ஒன்று, சட்டி பொட்டியைப் பார்த்துக்கொண்டே முழித்திருக்க வேண்டும். இப்படியான பகல் நேரப் பயணத்தில் சாப்பிடுவதற்கு விதவிதமான, என்னவென்றே தெரியாத ஐட்டங்கள் வந்துபோகும். சாப்பிடுவதா வேண்டாமா என்று யோசித்து யோசித்தே நேரம் போய்விடும்.

ஒரு வழியாக சென்று சேர்ந்தாயிற்று. நல்ல மழை. வெளியில் அதிகம் செல்ல முடியவில்லை. ஒரு வழியாக திரும்பும் நாள் வந்தது. வரும்போது பரவாயில்லை, தேர்டு ஏ.சி. யில் டிக்கட் போட்டிருந்தேன். ஏறியது இரவு நேரம். ஒரு குடும்பம் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னையும், என்னருகில் இருந்த இன்னொரு இளைஞரையும் இன்னொரு இடத்திற்குப் பந்தாடியது. நானாவது பரவாயில்லை, அவர் ஏற்கனவே ஒரு இடத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டவர். ஒரு வழியாக இரவு உணவு முடிந்து அவரவர் இடத்தில் முடங்கிப் படுத்தோம் அடுத்த நாள் நடக்கப்போகும் கூத்துக்கள் தெரியாமலேயே.

பொழுது புலர்ந்து எவ்வளவு நேரம் ஆனது என்பது சத்தத்திலிருந்தும், அங்கு குழுமியிருந்த மணத்திலிருந்தும் தெரிந்தது. காலை உணவு நேரம். நமக்கு எதுக்கு இதெல்லாம், நேராக மதிய உணவில் பார்த்துக்கொள்ளலாம் என அப்படியே இருந்துவிட்டேன். இரவு எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்துவிடும். எங்கேயோ நின்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் தூங்கி எழுந்து பார்த்தேன் அப்போதும் நின்றுகொண்டே இருந்தது. எழுந்து விசாரித்ததும் முதல் இடி விழுந்தது.

இப்போது ரயில் நிற்கும் இடம் குண்டக்கல். அதற்கு மேல் செல்ல முடியாது. ஏனென்றால் சற்று தொலைவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டுவிட்டது. சில செக்கச்செவேர் என்றிருக்கும் குடும்பங்கள் தங்களது பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தனர். அவர்களெல்லாம் திருப்பதி செல்லும் பக்தர்களாம். வடக்கிலிருந்து இவ்வளவு பேர் திருப்பதி நோக்கிச் செல்வதைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் ரேணிகுண்டாவில் இறங்கிச் செல்லவேண்டியவர்களாம். அருகில் இருந்த இளைஞர்தான் சொன்னார்.

அவர் ஒரு முஸ்லீம் இளைஞர். பெயர் XXXகலாம். பேரைக் கேட்பதற்கு முன்பே கணித்துவிடலாம், அந்த முகமும், நிறமும், மீசையில்லாத தாடியும் அப்படி. 24 வயது இருக்கும், ஒல்லியான உருவம். சிரித்த முகம், அனைவரிடமும் சீக்கிரமே பழகி விடுகிறார். துபாயில் வேலை, ஒரு வருடத்திற்குப் பின் வீட்டிற்குச் செல்கிறார். நிறைய பேசிக்கொண்டே வந்தார், நிறைய கதைகள் சொன்னார் அவர், அனைவரிடமும்.

மேலும் சொன்னார், இதற்கு மேல் போக முடியாதாம், ரயில் அப்படியே வந்த வழியே திரும்பிச் சென்று, பின்பு செகுந்திராபாத் சென்று ஒரு வழியாகச் சுற்றி சென்னை சென்று சேருமாம், மறுநாள். எனக்கு கிர்ர்ர்ர் என்று சுற்றியது. 24 மணி நேரத்தை நினைத்தாலே எரிச்சலாய் இருக்கும். இப்போது அதற்கும் மேலேயா? ஏசி வேறு நின்றுவிட்டது, எப்போது கிளம்பும் எனத் தெரியாமல் வெளியே நடந்துகொண்டும், பேசிக்கொண்டும், அவ்வப்போது ஆங்காங்கே அமர்ந்துகொண்டும் பொழுதைக் கழித்தோம். திருப்பதி செல்பவர்கள், தங்களது பொருட்களை பிலாட்பாரத்தில் வைத்து விட்டு, விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென திருப்பதி பார்ட்டிகள் மறுபடியும் பொருட்களை உள்ளே அள்ளிப் போட்டனர். விசாரித்தோம். ரயில் கிளம்பப் போகிறதாம், சுற்றிச் செல்லும் வழியில் குடூர் என்ற இடத்தில் இறக்கிவிடுவார்களாம், அங்கிருந்து அவர்கள் திருப்பதி செல்லலாமாம். நிறைய இடங்கள் காலியானதே, கொஞ்சம் ஃப்ரீயாகப் போகலாம் என்றிருந்த எனது எண்ணத்தில் மீண்டும் இடி. மீண்டும் கிளம்பியது, எப்போது சென்று சேருவோம் என்று தெரியாமலேயே.

வண்டி கிளம்பியதும் ஏ.சி. வேலை செய்தது. அதற்குள் நமது தமிழர்கள் ஆங்காங்கே அறிமுகம் ஆகியிருந்தார்கள். நானும் அந்த கலாமும் அனைவரிடமும் அறிமுகம் ஆகியிருந்தோம். ஆளாளுக்கு கதைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தோம். புத்தகங்கள், சார்ஜர்கள், நொருக்குத்தீணிகள், எண்ணங்கள் இடம் மாறிக்கொண்டிருந்தன. மதிய சாப்பாட்டை முடித்த பிறகு ஒரு தூக்கம். பின்பு செகுந்திராபாத் வந்து சேர்ந்தோம் இரவு நேரம்.

எதிர்ப் பக்கம் அப்பர் பெர்த்தில் இருந்த மாமிக்கு வயது 50 இருக்கும், அவரது கணவரோடு வந்திருந்தார். இவர் ஒரு மூலையில் அவர் ஒரு மூலையில், அவ்வப்போது வந்து பேசிச் செல்வார். அவர்களது உறவினர் செகுந்திராபாத்தில் இருந்திருக்கிறார், பார்க்க வந்தார் இட்லிகளுடன். அவர்களுக்கு அமர்ந்து பேச எங்களது இடங்களைக் கொடுத்துவிட்டு பிலாட்பாரத்தில் இறங்கி வேடிக்கை பார்த்தோம். பிரியானி வியாபாரம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது. எனக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. இந்நேரம் போய்ச் சேர்ந்து ஒரு பீரைப் போட்டுவிட்டு படுத்திருக்கலாமே என்ற நிராசைகள் அலைமோதின, இரவு எப்படி தூங்கப்போகிறேன் என்ற பயம் இருந்தது. கலாம் அவர் பங்குக்கு ஏதோ வாங்கி வைத்துக்கொண்டார். நான் பிரெட்டும் தண்ணீரும் வாங்கிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் வந்த மாமி, எங்களை அழைத்து அவர்கள் வைத்திருந்த இட்லியைச் சாப்பிடச் சொன்னார். முதலில் மறுத்தேன், விடாப்பிடியாக இருந்தார். சரி என சாப்பிடலானோம். அவருக்கு உதவி செய்ததால் எங்களைப் பிடித்துவிட்ட்டதெனத் தோன்றியது. இட்லியும், மிளகாய்ப்பொடியும், ம்ம்ம்ம் அருமை. காய்ந்துபோய்த் தூங்க வேண்டிய நாங்கள் அருமையான இட்லியுடன் இரவை முடித்தோம். மீண்டும் பிலாட்பாரம். பல மணி நேரங்கள் கழித்து மீண்டும் பயணம் துவங்கியது. வாங்கி வைத்திருந்த இதழ்கள் அனைத்தையும் படித்தாயிற்று, மேலும் மூவர் உட்பட. மீண்டும் தூக்கம்.

இரண்டாவது சூரிய உதயம், அதே ரயிலில். ரயில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. சந்தோசம். ஏதோ ஒரு புதிய உற்சாகம் என்னுள் இருந்ததை உணர்ந்தேன், அதே உற்சாகம் மற்றவர்களிடமும் இருந்தது. காலை உணவு ஏதோ முடிந்தது. மீண்டும் அரட்டை. எப்படியும் மதியம் போய்ச் சேர்ந்துவிடுவோம் எனச் சொன்னார்கள். எதிரே இருந்த கல்லூரி மாணவன் ஒருவன் PSP ஒன்றை வைத்திருந்தான், கேட்டவர்களிடம் அதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தான். அவன் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். பூர்வீகம் தமிழ், வளர்ந்தது ஆந்திரா, இப்போது மும்பையிலிருக்கும் அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்துகொடிடுக்கிறான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்தும் பேசுகிறான். சில ஹிந்திக்காரர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு போன் செய்து லேட்டாகிறது என்பதை சொல்வதற்கும், பதில் பெறுவதற்கும் அவனையே நாடினர், ஏனெனில் எதிர்ப்பக்கம் தெலுங்கில் மட்டுமே பேசியதாம். அன்று காலை கல்லூரிக்குச் செல்லவேண்டிய அவன், இந்தத் தாமத்தால் செல்ல முடியாமல் பயணித்துக்கொண்டிருக்கிறான்.

அந்த உற்சாகத்தைக் குலைக்கும் வகையில் மீண்டும் ஒரு இடி. திடீரென்று ஆங்காங்கே பரபரப்பானார்கள், சன்னல்கள் வழியே வெளியே பார்த்து ஒருவருக்கொருவர் புலம்பினார்கள். திருப்பதி செல்பவர்களை இறக்கி விடுவதாகச் சொன்ன குடூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் தொடர்ந்து ரயில் சென்றுகொண்டிருந்ததே இதற்குக் காரணம். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தார்கள், நாங்களும்தான். சிறிது தூரம் சென்று திடீரென ரயில் நின்றுவிட்டது, யாரோ அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்திருக்கவேண்டும்.

நின்ற இடம் ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில், சுமார் இரண்டு கிலோமீட்டர் இருக்கும். கற்களும் முட்செடிகளுமாய் இருந்தது. மழை பெய்து பூமியெல்லாம் ஈரம், ஆங்காங்கே தண்ணீர், மந்தமான வெளிச்சம், சிறிது தூரல். திருப்பதி செல்லும் குடும்பங்கள் அவரவர் மொழியில் புலம்பியவாறே பொருட்களுடன் இறங்கினர். பிலாட்பாரம் இல்லாத அந்த இடத்தில், வயதானவர்களும் பெண்களும் இறங்க மிகவும் சிறமப்பட்டனர். நாங்கள் சிலர் அவர்களுக்கு உதவி செய்தோம். சாரை சாரையாக, எல்லா பெட்டிகளில் இருந்தும் மக்கள் இறங்கி ஊருக்குள் நடக்கலாயினர். அந்தத் தூரலில் அழகான பெண்கள் சோகமாக நடந்து செல்வது மனதை ஏதோ செய்தது. நிறிது நேரம் அப்படியே நின்றபின் ரயில் நகரத்தொடங்கியது, பின்னோக்கி.

ரயில் அப்படியே பின்னோக்கிச் சென்று நிற்காமல் சென்ற குடூர் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. வழக்கம்போல் இறங்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். ரயில் நிலைய அதிகாரியுடன் ஒரு குடும்ப உறுப்பினர்கள் மிகவும் ஆக்ரோசமாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். மொழி தெரிந்தவர்கள் அருகே சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

திடீரென சில கேமராக்கள் ஓடி வந்தன. அங்கே வாக்குவாதம் செய்தவர்களுடன் பேசி, பேட்டி எடுத்தனர். சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் செய்த கும்பல் பயங்கரமாக குதூகலித்துக் கொண்டாடியது. இது அடுத்த இடி. அவர்கள் கேட்டுக்கொண்டபடி மீண்டும் சுற்றி ரேனிகுண்டா செல்லுமாம் ரயில். அப்படிச் செல்வதானால் இன்னும் ஒரு நாள் ஆகலாம் சென்னை செல்ல. ஒரு பக்கம் கேமராக்கள் சூழ பரபரப்பான பேட்டிக்கள் ஓடிக்கொண்டிருந்தன, அவரவர் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தனர். இன்னும் இரண்டு மணி நேர தூரத்தில் சென்னை, என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போதுதான் அந்தக் கல்லூரி மாணவன் சொன்னான். சென்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையம் வழியே செல்லுமாம். இப்போது சென்னை செல்லும் மக்கள் அடித்துப் பிடித்து எங்களது பொருட்களை இறக்கினோம். ரயில் நிலைய அதிகாரியிடம் எங்களது டிக்கட்டிகளைக் கொடுத்து கையொப்பமும் சீலும் வாங்கிகொண்டோம். அந்த ரயிலுக்கு டிக்கட் எடுக்கவேண்டியதில்லை.

கொடுமையிலும் கொடுமையாகத் தெரிந்தது. குண்டக்கல்லில் இறங்கிய திருப்பதி செல்பவர்களை, குடூரில் இறக்கி விடுகிறேன் என ஏற்றி வந்து நிறுத்தாமல் சென்றது எப்படி என்றே தெரியவில்லை. அவர்களில் பலர் இறங்கி ஊருக்குள் சென்றுவிட்டனர். அங்கு வாதாடியது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே. அவர்களுக்காக ஒரு ரயிலையே திருப்பி விடுவதா? இவ்வளவுக்கும் திருப்பதி செல்லும் இன்னோரு ரயில் அடுத்த பிலாட்பாரத்திலேயே நின்றுகொண்டிருந்தது. இருந்த கொஞ்ச பேரை அந்த ரயிலில் ஏற்றி நேரே திருப்பதிக்கே அனுப்பியிருக்கலாம். சில பேருக்காக, சென்னை செல்லவேண்டிய பல பேர் இறங்கி நின்றோம். பெரும்பாலான வெற்றுப் பெட்டிகளுடன் அந்த ரயில் வந்த வழியிலேயே திரும்பிச் சென்றது. அதில் எத்தனை சென்னை செல்பவர்கள் தெரியாமல் சென்றுகொண்டிருந்தார்களோ, அந்த ரயில் எபோது சென்னை வந்து சேர்ந்ததோ தெரியவில்லை.

நாங்கள் ஒரு வழியாக சென்னை செல்லும் அந்த ரயிலைப் பிடித்து ஏறி அமர்ந்தோம். சிறிது நேரம் ஒரு வித அமைதி நிலவியது அனைவரிடமும். பின்பு வழக்கம்போல அரட்டைதான். சென்னை வந்ததும் அனைவர் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி இருக்கிறதே, பார்க்கப் பார்க்க நமது மகிழ்ச்சி கூடியது. சரியாக விலக்காத பல்லைக் காட்டிக்கொண்டு சந்தோசமாகக் கை குலுக்கிப் பிரிந்து சென்றோம். எனக்குள் நினைப்பெல்லாம், இன்னொரு முறை இவர்களில் எவரையாவது பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும் அந்த சந்திப்பு?

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!