'என்னடா மாப்ள, தீபாவளிக்கு டிக்கட் போட்டியா?'
'இன்னும் இல்லடா'
'என்னடா நீயி, இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. இப்படி டிக்கட் எடுக்காம இருக்க? ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டல்ல?'
'அதெல்லாம் எடுத்தாச்சு. டிக்கட்டுதான் கெடக்கல. ட்ரெயின் ரெசர்வேசன் ஓபன் பண்ண அஞ்சு நிமிசத்துலயே முடிஞ்சு போச்சாம். இப்ப வெயிட்டிங் லிஸ்ட் பாத்தா 400, 500னு எகுறுது.'
'பஸ் என்னடா ஆச்சு?'
'அத ஏண்டா கேக்குற... போன தடவ மாதிரி விட்டுறக் கூடாதுன்னு, ஒரு மாசத்துக்கு முன்னாடியே போனேன். நம்ம அஜித் ட்ராவல்ஸ்தான். இன்னும் சார்ட் ப்ரிபேர் பண்ணல, அடுத்த வாரம் வாங்கன்னான். அடுத்த வாரம் போனா, அதுக்கு அடுத்த வாரம் வாங்கன்னான். அப்பப் போனா, எல்லாம் ஃபுல்லாயிடுச்சுன்னு சொல்லிட்டாண்டா. தீபாவளி, பொங்கல்னு வந்துட்டா போதும்டா இவனுகளுக்கு, டிக்கட்ட பிலாக் பண்ணி செம கொள்ள அடிக்கிறானுக.
இருக்குற பணத்துக்கெல்லாம் வீட்டுல எல்லாத்துக்கும் துணி எடுத்தாச்சு. வருசத்துல இந்த ஒரு தடவதான் ஏதாவது காசு சேத்து, கடன ஒடன வாங்கி, வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போயி சந்தோசப்படுறேன். இதுல டிக்கட்டுக்குத் தனியா கடன வாங்கனும் போல இருக்கு...'
'சரி விடுறா, அன்னைக்கு நைட்டு பஸ் ஸ்டாண்டுல போயி ஏதாவது கெடைக்குதானு பாக்கலாம்.'
'உனக்கு போன வருசம் நடந்தது மறந்து போச்சா? பஸ் ஸ்டாண்ட் வாசல்லயே நின்னு, திருச்சி, மதுர, தின்னவேலின்னு கூவிக்கிட்டு இருப்பானுக. போய் ரேட்டு கேட்டா 400 ரூபா டிக்கட்ட 600,700னு சொல்லுவானுக. கேட்டா ஸ்பெசல் பஸ்ஸிம்பானுக. கடைசில பாத்தா நாம வழக்கமா போற பஸ்ஸா இருக்கும். பிலாக் பண்ணி வச்சிட்டு ஏமாத்துவானுக. ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கு, கெடைக்கிற கவர்மெண்ட் பஸ்ஸுல ஏதாவது மூலைல வொக்காந்து போயிரலாம். இதுல இன்னொரு ஸ்பெசல் பஸ் இருக்கு தெரியிமா?'
'என்ன அது? ஸ்பெசலா ஸ்பெசல் பஸ்?'
'ஸ்பேர் பஸ்ஸ எல்லாம் கூட்டம் அதிகமா இருக்குன்னு விடுவானுகளாம். டபுல் ரேட்டு, ஏன்னா ரிட்டன் சும்மா வரனுமாம். ஆட்டோ டெக்னிக்கு. எல்லாம் நம்ம வசதிக்குத்தாங்குற ரேஞ்சுக்கு பில்டப் வேற குடுப்பானுக #@$$#@$%@#. போறவனெல்லாம் ஊர்லயேவா தங்கிறப் போறான்? இல்லன்னா இவனுகதான் ரிட்டன் சும்மா வந்துறப் போறானுகளா? வரும்போதும் இதே கதைய சொல்லி டபுல் ரேட்டு வாங்கிருவானுக $#*^*^#^$%.'
'வுடுறா மாப்ள. கோயம்பேடு போயி பாக்கலாம். எதுவும் கெடைக்கலன்னா, 800 ஆனாலும் பரவாயில்ல. போயித்தான ஆகனும்? என்ன பண்றது, இத ஒரு பயலும் கேக்க மாட்டான். லைசன்ஸ் எங்க, ஆர்சி புக்கு எங்க, ஹெல்மட் எங்க, பைக்ல கண்ணாடி எங்க, நீ ஏன் கண்ணாடி போடலன்னு பிச்ச எடுக்க மட்டும் முக்குக்கு முக்கு நிப்பானுக.'
-
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கோயம்பேடு அரசுப் பேருந்து நிலையம். ஆளுக்கொரு பக்கம் அலைந்தோம். எனது மொபைல் சினுங்கியது...
‘மாப்ள, திர்னவேலி பஸ் ஒன்னுல எடம் கெடச்சிட்டிடா.... இந்தப் பக்கம் வா...’
சந்தோசத்தில் அலறினான். போனேன். திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் சாதாரணப் பேருந்து. கூட்டம் அதிகமான காலங்களில் இப்படி சென்னை வரை வந்து செல்லுமாம். டிக்கட் விலை மிகவும் குறைவு. புஸ்பேக் எல்லாம் கிடையாது. எனக்கெல்லாம், முன்னாலிருக்கும் சீட்டில் முட்டி தட்டும். எப்படித்தான் 14 மணி நேரம் இதுல ஒக்காந்து போகப் போறானோன்னு எனக்கு ஒரே குழப்பம். அவனோ முழு சந்தோசத்தில் கையசத்தான். சும்மாவா, பஸ்ஸுக்குள்ள நாலு பேரு தரைல ஒக்காந்திருந்தாங்க.
---
மேலே சொன்னது போன வருட தீபாவளியில் நடந்தது. இந்த வருடம் எப்படி இருக்கும்? ஏதும் மாற்றம்? முன்னேற்றம்? இருக்கும் இருக்கும். இந்தக் கதை ஆன்லைன் வரை முன்னேறியிருக்கும்.
கீழே பார்ப்பது ஆகஸ்ட் 14, கோவைக்கு டிக்கட் தேடும்போது கண்டது...

இது வழக்கமான விலை...

---
ச.கொ. அனுபங்கள் தொடரும்...
-ஏனாஓனா.

Read More!