நட்பே... நீ எனக்கு நட்பாக வேண்டும்.

மழலைப் பருவத்தில்
ர்மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...


குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...



காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...



வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...


தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...



நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்.




பி.கு:-

எனக்கு ஆர்குட் -ல் வந்த கவிதை


...கி.கி


Share/Bookmark

7 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

அதானே பார்த்தேன்ன்..நாம எல்லாம் எப்ப இப்படி எழுதறதுண்ணு..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

தல,

நல்ல கவிதை.. எனக்கும் இதே கவிதையை scrap ஆக எழுதியிருக்கிறார்கள்..!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாருக்கு

நட்பூ

தொடரட்டும் நட்பூ

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
அதானே பார்த்தேன்ன்..நாம எல்லாம் எப்ப இப்படி எழுதறதுண்ணு..\\

ஹி .... ஹி......
__________________________________________________
//
//எழில். ரா said...
தல,

நல்ல கவிதை.. எனக்கும் இதே கவிதையை scrap ஆக எழுதியிருக்கிறார்கள்..!\\

நல்லவேளை உண்மை சொன்னதால் தப்பித்தேன்.
நீங்களும் எங்களுடன் orkut-ல் சேரலாமே

______________________________________________
//பிரியமுடன்.........வசந்த் said...
நல்லாருக்கு

நட்பூ

தொடரட்டும் நட்பூ\\\



ஆம் தொடரும்
வாடினாலும் உயிர்த்தெழும் இந்த நட்பூ

கார்த்திக் said...

நல்ல கவிதை.. என்றும் நட்புடன்..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நன்றி கார்த்திக்